‘அற்புத விரல்களால்’ ஆயிரக்கணக்கான இதயங்களை பிளந்து சிகிச்சையளித்தவர் டாக்டர் லாஹி

0 557

ஷிபா

பிர­பல இரு­தய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீ­ரென ஏற்­பட்ட மார­டைப்புக் கார­ண­மாக தனது 63 ஆம் வயதில் இம்­மாதம் 7ஆம் திகதி இரவு கால­மானார். அன்­னாரின் ஜனாஸா மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

டாக்டர் லாஹி 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பிறந்தார். உமர் லெப்பை முஹம்­மது யூசுப் என்ற அவ­ரது தகப்­பனார் ஆயுர்­வேத மற்றும் யூனானி மருத்­து­வத்தில் நான்­கா­வது தலை­மு­றை­யாக இருந்து வந்தார். இவர் கேகாலை மாவட்­டத்தில் ரம்­புக்­கணை ஹுரிம­லு­வையைப் பிறப்­பி­ட­மாக கொண்­டவர்.

டாக்டர் லாஹியின் தந்­தை­யா­ரான வைத்­தியர் யூசுப் இரு­தய நோயினால் பாதிக்­கப்­பட்டு கொழும்பு 12இல் உள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் 1977ஆம் ஆண்டு கால­மானார். அப்­பொ­ழுது தன் அருகில் இருந்த மருத்­துவ கல்­லூ­ரியின் அனு­ம­திக்­காக காத்­தி­ருந்த மகன் லாஹியின் கரங்­களை பற்­றி­ய­வாறு “நீங்கள் இரு­தய நோய் மருத்­து­வ­ரொ­ரு­வ­ராக வந்து என் போன்ற நோயா­ளர்­களின் உயிரைக் காக்க உதவ வேண்டும்” எனக் கூறி­யி­ருந்தார். அதனை கருத்தில் கொண்டு டாக்டர் லாஹி பின்­னாளில் இரு­தய மருத்­துவ நிபு­ண­ராக வரு­வ­தற்கு முயற்­சித்­தி­ருக்­கிறார்.

கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் கல்வி கற்ற டாக்டர் லாஹி, பின்னர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் MBBS மருத்­துவ பட்­டத்தைப் பெற்றார்.அதை தொடர்ந்து அவர் நாட்டில் காலி­, க­ராப்­பிட்டி மற்றும் பதுளை வைத்­தி­ய­சா­லை­களில் பணி­யாற்­றினார்.
கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றிக்­கொண்டு இருந்த பொழுது, கொழும்பு பல்­க­லைக்­க­ழக பட்டப் பின்­ப­டிப்பு நிலை­யத்தில் MS உயர் பட்­ட­தா­ரி­யானார். அதை தொடர்ந்து இங்­கி­லாந்தில் மத்­திய லண்­ட­னி­லுள்ள மிடில்செக்ஸ் வைத்­தி­ய­சா­லையில் இரு­தய அறுவைச் சிகிச்சை தொடர்­பான மேற்­கல்­வியை கற்று 1992ஆம் ஆண்­டி­லி­ருந்து 1995ஆம் ஆண்டு வரை அங்கு இரு­தய நோய் மருத்­துவ நிபு­ண­ரொ­ரு­வ­ராக (FRCS) சிறப்புச் சித்தி பெற்று, நாடு திரும்பி கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அந்தப் பிரிவில் பிர­தான நிபு­ண­ராகப் பணி­யாற்­றினார். அதி­லி­ருந்து இது வரை 23,500 இற்கும் மேற்­பட்ட சிகிச்­சை­களை அவர் வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டி­ருக்­கிறார்.
கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யிலும் பின்னர் எட்டு வரு­டங்கள் பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே (லேடி ரிட்ஜ்வே) சிறுவர் வைத்­தி­ய­சா­லை­யிலும் ஓய்வு பெறும் வரை பணி­யாற்றி ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தைகள், சிறு­வர்கள் உட்­பட இளம் வய­தி­ன­ருக்கும்,வயது வந்­த­வர்­க­ளுக்கும் இரு­தய அறுவைச் சிகிச்­சை­களை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டி­ருந்தார்.

அவர் கொழும்பில் உள்ள பிர­பல முன்­னணி தனியார் வைத்­தி­யா­ச­லை­க­ளிலும் இரு­தய நோய் அறுவை சிகிச்சை நிபு­ண­ராக பணி­யாற்றி இருக்­கின்றார். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களைப் போன்றே தனியார் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்­கான சிகிச்­சை­களை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டுள்ளார்.

அன்­னாரின் மனைவி பாத்­திமா மின்னா பாரி. மகன் ஹுஸைன் லாஹி, அவுஸ்­தி­ரே­லியா, சிட்னி நகரில் மயக்­க­வியல் மருத்­துவ நிபு­ண­ராக உள்ளார். மகள் சப்­ரீனா லாஹி, பிரித்­தா­னி­யாவில் இர­சா­ய­ன­வியல் முத்­து­மானி பட்டம் பெற்­றவர். மரு­மகன் சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ்.

அரச சேவை­யி­லி­ருந்து 62 ஆவது வயதில் ஓய்­வு­பெற்ற பின்னர் சேர் ஜோன் கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்­திலும், வைத்­தி­ய­சா­லை­யிலும் மர­ணிக்கும் வரை பணி­யாற்­றினார்.

அறுவைச் சிகிச்­சை­களின் போது அவ­ரது கைவி­ரல்கள் வெகு லாவ­க­மாகச் செயற்­ப­டு­வதால் “அற்­புத விரல்கள்” (Miracle Fingers) என மருத்­து­வர்கள் மத்­தியில் அவர் அழைக்­கப்­பட்டார்.

டாக்டர் லாஹி சத்­திர சிகிச்சை மேற்­கொண்ட பலர் இன்று அவ­ரது மறைவு குறித்து தமது கவ­லை­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். அவ­ரது மருத்­துவத் திற­மையை மெச்­சு­கின்­றனர். அவ்­வாறு சிகிச்சை பெற்ற சிலர் ‘விடி­வெள்­ளி­’யிடம் டாக்டர் லாஹி தொடர்­பான தமது நினை­வ­லை­களைப் பகிர்ந்து கொண்­டனர்.

இரு­தய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் லாஹியை இறைவன் அழைத்­துக்­கொண்­டுள்ளான் என்ற செய்­தியை அறிந்து நான் மிகவும் உறைந்து போனேன் என்­கிறார் காப்­பி­யக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரி­புத்தீன்.

“2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீ­ரென கண்­டு­பி­டிக்­கப்­பட்ட எனது நான்கு இரு­தயக் குழாய் அடைப்­புக்­களை தனது திற­மையால் மார்புக் கூட்­ட­றுப்பு செய்து, இறை­ய­ருளால் நான் இன்னும் உயிர்­வாழ வழி­கோ­லிய உன்­னத வைத்­திய நிபுணர் லாஹி. ஒரு துளி­யேனும் வேற்றார் இரத்தம் வேண்­டாது, அந்த அறுவை சிகிச்­சையை தான் மேற்­கொண்­ட­தாகக் கூறி­யி­ருந்தார்.

எந்­த­வித விகற்­பங்­களும் ஏற்­ப­டா­த­வாறு நான் மிக விரைவில் பூரண சுக­ம­டைந்தேன். அடைப்­புக்கள் பற்றி அறிந்­ததும் அதனை அவ­ரொரு பொருட்­டாகக் கொள்­ளாது சத்­திர சிகிச்­சையை நடத்தி முடித்தார்.

இந்த நிகழ்வை நான் எழு­திய எனது நூலான திரு நபி காவி­யத்தில் அவ­ரது பெய­ரோடு பதிவு செய்­துள்ளேன்” என்­கிறார் டாக்டர் ஜின்னாஹ் ஷரி­புத்தீன்.
அறுவை சிகிச்­சையின் பின் இத­யத்தில் இது­வரை ஒரு சிறு நோவு கூட ஏற்­ப­ட­வில்லை எனக் கூறு­கிறார் பொலன்­ன­றுவை, 63 வய­தான தம்­பாளை ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.புகா­ரிதீன்

உயர்ந்த உள்ளம் படைத்த, மருத்­துவ அனு­பவம் நிறைய வாய்க்கப் பெற்ற ஒரு மகானை இழந்­தி­ருக்­கிறோம். இதய நோய்­க­ளுக்கு அறுவை சிகிச்சை அளிப்­பதில் வல்­ல­வ­ரான டாக்டர் லாஹி இன, மத, மொழி பேத­மின்றி ஏழை, பணக்­காரர் வித்­தி­யா­ச­மின்றி எல்லா நோயா­ளர்­க­ளுக்கும் சம­மாக சிகிச்சை அளித்­தவர்.

எனக்கு இரண்டு முறை மார­டைப்­புகள் ஏற்­பட்ட பின்னர், நான் டாக்டர் லாஹியைச் சந்­தித்தேன். அவ­ரது ஆலோ­ச­னையின் பேரில் கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அவரால், எனக்கு 2012 ஜன­வரி 22ஆம் திகதி பைபாஸ் இரு­தய அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதி­லி­ருந்து 9 வரு­டங்கள் கடந்த பின்­னரும் கூட இறை­வனின் அரு­ளாலும் டாக்டர் லாஹியின் செயற்­றிறன் மிக்க அறுவை சிகிச்­சையின் பய­னா­கவும் இது­வரை எனது இத­யத்தில் ஒரு சிறு நோவு கூட ஏற்­ப­ட­வில்லை. மேலும் எனது ஊரைச் சேர்ந்த ஐவ­ருக்கு அவர் அறுவைச் சிகிச்சை செய்­துள்ளார்” என்றார்.
சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த அப்துல் மஜீது அப்துல் லத்தீப் (வயது 58) டாக்கடர் லாஹி உடனான தனது அனுபவத்தை பகிரும் போது, சுமார் 13 வரு­டங்­க­ளுக்கு முன்னர் என் இத­யத்தில் ஏற்­பட்ட அடைப்பு கார­ண­மாக அறுவைச் சிகிச்சை செய்­வ­தற்­காக வைத்­தியர் லாஹியைச் சந்­தித்தேன்.

அவர் என்னை பரி­சோ­தித்த விதம், என்­னோடு பண்­பாக பேசிய அந்த வார்த்­தைகள், அந்த நேரத்தில் என்னுள் இருந்த மனப் பயம் மற்றும் எனக்குள் இருந்த பாதி வருத்தம் குறைந்த மாதி­ரியும் உணர்ந்தேன். அந்த அள­வுக்கு மிகவும் பண்­பா­கவும் மன தைரி­யத்தை ஊட்டும் அள­வுக்கும் பணி­வா­கவும் பேசினார்.

என் இத­யத்தில் ஏற்­பட்ட மூன்று அடைப்­பு­களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்­கினார். சுமார் 13 வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனக்கு அந்த அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது எனக்கு வயது 45. அதன் பின்னர் நான் 6 மாதத்­திற்கு ஒரு முறை டாக்டர் லாஹி­யை­ச­சந்­தித்து ஆலோ­சனை பெற்றுக் கொண்­டுதான் வந்தேன்.

கொரோனா அலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்னர் நான் அவரை இறு­தி­யாக சந்­தித்தேன். அவர் சொன்ன பிர­கா­ரம்தான் தற்­போதும் சிகிச்சை பெற்றுக் கொண்­டி­ருக்­கிறேன். மாகாணம் விட்டு மாகாணம் செல்­லக்­கூ­டிய தடையை எடுத்­ததும் அவரை சந்­திக்­கலாம் என்ற ஆவ­லோடும் இருந்தேன். அவ­ரு­டைய திடீர் மறைவைக் கேள்­விப்­பட்­டதும் அதிர்ச்சி அடைந்து போனேன். அவ­ரு­டைய பிரிவு வைத்­தியத் துறைக்கு ஏற்­பட்ட ஒரு மாபெரும் இழப்­பா­கத்தான் நான் பார்க்­கிறேன். சிறந்த மனி­தரை, ஒரு மிகச் சிறந்த வைத்­தி­யரை இந்த நாடு இழந்­தி­ருக்­கின்­றது” என்றார்.

2018 ஆம் ஆண்டில் அவ­ரு­டைய தாயார் சடு­தி­யாக மயக்­க­ம­டைந்து, உயி­ரி­ழந்த போது அது பற்றி அவ­ருக்குத் தெரி­விக்­கப்­பட்ட சம­யத்தில் அவர் அறுவை சிகிச்­சை­யொன்றை ஆரம்­பித்­தி­ருந்தார். உட­ன­டி­யாக தனது தங்­கையின் கண­வ­ரான டாக்டர் ஹபீ­ஸுக்கு தொலை­பேசி அழைப்­பெ­டுத்து தான் தற்­ச­மயம் அறுவைச் சிகிச்சை ஒன்றை ஆரம்­பித்­து­விட்­ட­தா­கவும், அதனை நிறைவு செய்­து­விட்டு வர­வேண்­டிய கடப்­பாடு இருப்­ப­தா­கவும் ஆகவே, உட­ன­டி­யாகச் சென்று முதலில் நடக்க வேண்­டிய விட­யங்­களை மேற்­கொள்­ளு­மாறு கூறி­யி­ருக்­கிறார். சில மணி நேரத்தின் பின்னர் அறுவை சிகிச்­சையை முடித்­த­வுடன் தனது மறைந்த தாயாரின் ஜனா­ஸா­வுக்குச் சமூ­க­ம­ளித்­தி­ருக்­கிறார்.

டாக்டர் லாஹி இறை நம்­பிக்கை மிக்­கவர். தொழு­கை­களை உரிய நேரத்தில் நிறை­வேற்ற முயற்­சித்­தவர். தஹஜ்ஜத் தொழு­கையை கூட தவ­ற­விட நினைக்­கா­தவர் ஏற்­க­னவே உம்ரா கட­மையை நிறை­வேற்றி இருந்த அவர், 2017ஆம் ஆண்டு புனித மக்கா சென்று ஹஜ் கட­மையை நிறை­வேற்­றினார்.

டாக்டர் லாஹி­யிடம் சிகிச்சை பெற்ற கிழக்குப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் மௌன­குரு சின்­னையா தனது முக­நூலில் நீண்ட பதி­வொன்றை இட்­டுள்ளார். அதில் அவர் டாக்டர் லாஹி பற்றி இப்­படிக் குறிப்­பி­டு­கிறார்.

“1999 இல் இரு­த­யக்­கோ­ளாறு கார­ண­மாக கொழும்பு பிர­தான வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டேன். அதன் முடிவு எனக்கு இரு­த­யத்தில் பிரச்­சினை என கண்­ட­றி­யப்­பட்­டது. அப்­போ­துதான் எனக்கு டாக்டர் லாஹி அறி­மு­க­மா­னார்.. வயதில் மிக இளைஞர். மெல்­லிய உருவம் பிர­கா­ச­மான கண்கள். அதிகம் அவர் பேச­வில்லை. தான் எனது வைத்­திய அறிக்­கையைப் பார்த்­த­தா­கவும், எனது பிரச்­சினை என்­ன­வெ­னவும் சுருக்­க­மாக விளக்­கினார்.

பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு மறுநாள் மாற்­றப்­பட்டேன். அங்கு பல பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டன. மறுநாள் என்னை பார்க்க லாஹி வந்தார். எனது அறுவைச் சிகிச்சை பற்றி விளக்­க­ம­ளித்தார். சத்­திர சிகிச்சை முடிந்து உணர்வு வந்த பின் மூன்றாம் நாள் எழுந்து நட­மாட முடியும் என்­பதும் அவ­ரது பேச்சின் சார­மாக இருந்­தது.
“மூன்று நாட்­க­ளுக்குள் எழுந்து நட­மா­ட­லாமா?” என ஆச்­ச­ரி­யத்­துடன் அவ­ரிடம் கேட்டேன். “சில பயிற்­சிகள் செய்த பின்னர் நாள­டைவில் ஓடவும் செய்­யலாம்” எனக் கூறினார். உயிர் போகப்­போ­கி­றது என எண்­ணிக்­கொண்­டி­ருந்த எனக்கு அவ­ரது வார்த்தைகள் பெரும் நம்­பிக்கை அளித்­தன. அறுவைச் சிகிச்சை அறையில் டாக்டர் லாஹி­யுடன் இன்னும் சில டாக்­டர்­களும், தாதி­மாரும் இருந்­தனர். எனக்கு சுமார் 7 மணி நேர அறுவைச் சிகிச்சை நடந்­த­தாக பின்னர் எனது மனைவி கூறினார்.

7 மணி நேரம் என் உட­லு­டனும், அவ­ரது அறி­வு­டனும், செயல் திறன்­க­ளு­டனும், உணர்­வு­க­ளு­டனும் போரா­டிய அம்­ம­னி­தா­பி­மானி இன்று நிம்­ம­தி­யாகச் சென்­றி­ருக்­கிறார்.
நான் இரண்டு வாரம் வைத்­தி­ய­சா­லையில் இருந்தேன், டாக்டர் லாஹி, இடைக்­கிடை என்னை வந்து பார்த்து மகிழ்ச்சி தெரி­வித்துச் சென்றார். அவ­ரது கைகளை எடுத்து என் கண்­களில் ஒற்றி, “எனக்கு மீள் உயிர் அளித்­தவர் நீங்கள்” என்றேன். அவர் இதனை எதிர்­பார்க்­க­வில்லை. “இல்லை, இல்லை. என்னில் ஒன்றும் இல்லை. சரி­யான சம­யத்தில் நீங்கள் வந்து விட்­டீர்கள்” என்றார். உடற் பயிற்­சி­களை ஒழுங்­காகச் செய்­யுங்கள் எனக் கூறி­அ­னுப்பி வைத்தார்.

இந்­திய நண்­பர்­களின் ஆலோ­ச­னையின் பிர­காரம், ஆறு­மா­தங்­களின் பின் சென்னை அப்­பலோ வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று ஒரு பரி­சோ­தனை செய்தேன். அவர்கள் எனது அறுவைச் சிகிச்சை வெகு நேர்த்­தி­யா­கவும், குறை­யில்­லாத வகையில், மிகத் திற­மை­யா­கவும் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறி அதி­ச­யித்­தனர்.

2014 இலும் 2018 இலும் நோர்வே சென்­ற­போதும் என்னை அங்கு பரி­சோ­தித்த இரு­த­ய­வியல் நிபு­ணர்கள் இதே வார்த்­தையைக் கூறினர். நமது நாட்டின் நிபு­ணத்­து­வத்தை பிற நாட்டார் கூறு­கையில் எத்­தனை மகிழ்ச்சி. இந்தப் புகழ் லாஹிக்­கு­ரி­யது.
எனக்கு உயிர் தந்து, ஆலோ­ச­னை­களால் உர­மூட்டி, உற்­சா­க­மூட்டி, நம்­பிக்­கை­ய­ளித்து, வாழ வைத்த அவர் இன்று சென்று விட்டார். நானோ வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கிறேன். எனது நூல் ஒன்றை அவ­ருக்குச் சமர்ப்­பிக்க நினைத்­தி­ருந்தேன். எனது நினை­வு­களில் என்றும் அழி­யாத திரு உருவம் டாக்டர் லாஹி” என்­கிறார் பேரா­சி­ரியர் மௌன­குரு.

மாலை­தீ­வுக்கு சென்று செய்த அறுவைச் சிகிச்சை
ஒரு சந்­தர்ப்­பத்தில், அவர் கொழும்பு பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றின் இரு­தய அறுவைச் சிகிச்சைப் பிரி­வுக்குப் பொறுப்­பாக இருந்த கால கட்­டத்தில் மாலை­தீவில் ஒரு­வ­ருக்கு கத்­தியால் இத­யத்­திலே குத்­தப்­பட்­டதன் விளை­வாக கத்தி அவ­ரது இத­யத்தை ஊட­றுத்துச் சென்­றி­ருந்­தது. அதனை அசைத்தால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து வரும் என்ற கார­ணத்­தினால் குறித்த கத்தி அவ்­வாறே இருக்­கத்­தக்­க­தாக சிகிச்சை அளிக்கவேண்டும். மாலை­தீவில் அதற்­கு­ரிய வச­திகள் இல்­லாத கார­ணத்­தினால் உட­ன­டி­யாக கொழும்பில் அது தொடர்­பாக நன்­க­றி­யப்­பட்ட டாக்டர் லாஹியைத் தொடர்­பு­கொண்டு மாலை­தீ­வுக்கு வந்து, அங்­குள்ள மருத்­து­வ­ம­னையில் அவ­ருக்கு சிகிச்சை அளித்து அவ­ரது உயிரைக் காப்­பாற்ற உத­வு­மாறு ஒரு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. அப்­போது டாக்டர் லாஹி கொழும்­பி­லி­ருந்து உரிய அறுவை சிகிச்சை சாத­னங்­க­ளோடு, இர­வோடு இர­வாக மாலை­தீ­வுக்கு விமா­னத்தில் சென்று, அந்த அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு இத­யத்தில் இருந்த கத்­தியை அகற்றி, அந்த நோயா­ளியின் உயிரைக் காப்­பாற்­று­வ­தற்கு உத­வி­யி­ருக்­கிறார். அதற்­காக அவ­ருக்கு நன்றி செலுத்தி, மாலை­தீவிலும் இலங்­கை­யிலும் பல செய்­திகள் அப்­பொ­ழுது வெளி­யா­கின.

சிறு­வர்­க­ளுக்­கான விசேட அறுவைச் சிகிச்­சைகள்
குறிப்­பாக சிறு­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் இரு­தய சோனை­யறைகளி­டையே ஏற்­ப­டக்­கூ­டிய துளை­களை அடைப்­பது போன்ற பொது­வான அறுவை சிகிச்சை மற்றும் இரு­தய வால்வு மாற்று மற்றும் செப்­ப­னிடல் அறுவை சிகிச்­சை­க­ளுக்கு அப்பால், சிக்­க­லான, அதா­வது இரு­த­யத்தின் பெரு நாடிகள் இடம் மாறி அமைந்­தி­ருப்­பது கார­ண­மாக அவற்றைச் செப்­ப­னி­டு­வது சம்­பந்­த­மான பாரிய உயி­ரா­பத்து மிக்க அறுவை சிகிச்­சை­களைக் கூட டாக்டர் லாஹி வெற்­றி­க­ர­மாக செய்­துள்ளார். அபி­வி­ருத்தி அடைந்த முன்­னேற்­ற­க­ர­மான நாடு­களில் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய உயர்­த­ர­மான இரு­தய சிகிச்­சை­களை இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டதில் டாக்டர் லாஹி குறிப்­பி­டத்­தக்க ஒரு­வ­ராக விளங்­கு­கின்றார்.

ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட இரத்­தமும் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத இரத்­தமும் இத­ய­வ­றை­களில் இரண்­டறக் கலப்­பதன் கார­ண­மாக குறிப்­பாக சிறு­வர்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய பார­தூ­ர­மான நோய் நிலை­மை­களைக் கூட நவீன மருத்­துவ நுட்­பங்­களைக் கையாண்டு வெற்­றி­க­ர­மாக சுகப்­ப­டுத்­து­வதில் டாக்டர் லாஹியின் பங்­க­ளிப்பு மகத்­தா­ன­தாக இருந்­தி­ருக்­கி­றது.

பொது­வாக இரு­தய நோய்கள் பல­த­ரப்­பட்­டவை. சிறுவர் முதல் முதியோர் வரை வெவ்­வேறு வய­துப்­பி­ரி­விலும் இரு­த­யத்­தோடும் நுரை­யீ­ர­லோடும் சம்­பந்­தப்­பட்ட பல வித­மான நோய்­நி­லை­களை வெற்­றி­க­ர­மாகக் கண்­ட­றிந்து அதற்­கு­ரிய அறுவைச் சிகிச்சை முறை­களை மேற்­கொள்­வதில் டாக்டர் லாஹியின் ஈடு­பாடு மெச்­சத்­தக்­க­தாக இருந்து வந்­தி­ருக்­கி­றது.

பல்­வேறு வித­மான அறு­வைச்­சி­கிச்­சை­களில் முன்­னின்­றது மட்­டு­மல்ல, தான் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யிலும் லேடி றிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லை­யிலும் பணி­பு­ரிந்த காலத்தில் இரு­தய அறுவைச் சிகிச்சைத் துறையில் உயர் தகைமை பெறு­வ­தற்­காக வேண்டி தயா­ராகிக் கொண்­டி­ருந்த மருத்துவர்கள் பல­ருக்கு பயிற்சி வழங்­கு­வதில் அவர் முன்­நின்றிருக்­கிறார். அவ­ரிடம் பயிற்சி பெற்­ற­வர்கள் பின்னர் இந்தத் துறையில் பட்­டப்பின் படிப்பை மேற்­கொண்டு இன்று சிறப்­பான நிலையில் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மருத்­துவ பீட மாண­வர்கள் தான் பணி­யாற்­று­கின்ற விடு­தி­க­ளுக்கு பயிற்­சிக்­காக வரு­கின்ற பொழுது அவர்­க­ளுக்கு மிகச் சிறந்த முறையில் உரிய விளக்­கங்­களை அளித்து அவர்­க­ளுக்கு பிர­யோக ரீதி­யாக இரு­தய நோய் சம்­பந்­த­மான தெளிவை ஏற்­ப­டுத்­து­வ­திலும், உரிய வழி­காட்­டு­தலை வழங்­கு­வ­திலும் அவர் அதிகம் ஒத்­து­ழைத்­தி­ருக்­கின்றார்.
இயந்­தி­ரத்தின் தொடர்­பின்றி நேர­டி­யா­கவே துடித்­துக்­கொண்­டி­ருக்கும் இரு­த­யத்தின் மீது அறுவை சிகிச்சை (Beating Heart Surgery) மேற்­கொள்ளும் நடை­மு­றையை இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­து­வதில் முன்­னணி வகித்­த­வர்­களில் ஒரு­வ­ராக அவர் இருந்­தி­ருக்­கிறார்.

அதைத்­த­விர, பிற­ரது இரத்­தத்தைச் செலுத்­தாமல் அறுவை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­ப­வ­ரு­டைய இரத்­தத்­தையே மீள் சுழற்சி செய்து அறுவை சிகிச்சை (Recycling blood) மேற்­கொள்­வ­திலும் லாஹியின் பங்­க­ளிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது.
இவ்வாறு பல உயிர்களைக் காப்பாற்றிய அன்னாரின் சேவைகளைப் பொருந்திக் கொண்டுஅல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை அருள்வானாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.