ஹஜ் விசாக்களுக்கு கடவுச்சீட்டை பதிய புதிய முறை அமுல்

0 718

இவ்­வ­ருடம் ஹஜ் விசாக்கள் இலங்­கை­யி­லுள்ள சவூதி தூது­வ­ரா­ல­யத்தின் மூலம் ஹஜ் பய­ணி­களின் கடவுச் சீட்­டுக்­களில் பதிவு செய்­யப்­ப­டாது புதிய முறை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. முதன்­மு­றை­யாக இந்த நடை­முறை இலங்­கையில் அமு­லுக்கு வர­வுள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் ஹஜ் விசாக்கள் கட­வுச்­சீட்­டுக்­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் ஒன்லைன் ஊடாக பதிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி.எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

இந்த புதிய நடை­மு­றையின் கார­ண­மாக ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ள­வுள்­ள­வர்­களின் கட­வுச்­சீட்­டுக்கள் மற்றும் தேவை­யான ஆவ­ணங்கள் என்­பன பய­ணத்­துக்கு ஒரு­வார காலத்­துக்கு முன்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ்­ கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை ஏற்­றிச்­செல்லும் முதல் விமானம் எதிர்­வரும் 15 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து செல்­ல­வுள்­ளது. எனவே ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும் தங்­க­ளது பய­ணத்­துக்கு ஒரு­வார காலத்­துக்கு முன்பே தங்களது கடவுச் சீட்டுகளையும், ஆவணங்களையும் ஹஜ் முகவர்கள் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குக் கையளிக்க வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.