மதங்கள் பற்றி புரிந்துணர்வின்மையாலேயே இன மத மோதல்கள் தலையெடுக்கின்றன

0 904

“அச்­சேவ கிச்சங், ஆதப்பங், கோஜஞ்ஞா மரணங் சுபே!”

“நான் எனது பட்­டப்­ப­டிப்­பின்­போது ஒருநாள் பாளி மொழியில் மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள, சூத்­திரம் ஒன்றைப் படித்­துக்­கொள்ளும் சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது. இச்­சூத்­தி­ரத்தின் அர்த்தம், “இன்று செய்­வன யாவையும் இன்றே செய்­தி­டுவீர்; எதிர்­காலம் நிச்­ச­ய­மற்­றதே” என்­ப­தாகும். இதே­போன்றே எங்கள் முகம்­மது நபி (ஸல்) அவர்­களும், “நாளை செய்வோம் என்று எத­னையும் வைத்­துக்­கொள்ள வேண்டாம்” என்று கூறி­யுள்­ளார்கள்” இவ்வாறு முகம்மத் ஆஸாத் ஸிராஸ் தெரி­வித்­துள்ளார். இவர் மாதம்பே இஸ்­லா­ஹியா இஸ்­லா­மிய உயர்­கல்வி நிறு­வ­னத்தின் விரி­வு­ரை­யா­ள­ராவார்.

மௌல­வி­யான இவர் தமிழ்­மொழி மூலமே தனது உயர் கல்­வி­யையும் பட்­டப்­ப­டிப்­பையும் மேற்­கொண்­டுள்ளார்.

சில காலங்­க­ளாக பௌத்த – முஸ்லிம் மக்­களில் ஒரு சில­ரி­டையே நில­வி­வரும், பகைமை, வெறுப்­பு­ணர்வு குறித்து தனது கவ­லையை வெளி­யிடும் அஸாத், பௌத்த போத­னை­யையும் கற்க வேண்டும் என்ற உந்­து­தலால் 2017 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தில் இணைந்து பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்தார்.

அதன்­படி மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தில் பௌத்த சமயப் போத­னையைக் கற்றுப் பட்டம் பெற்ற முத­லா­வது முஸ்­லி­மாக அவர் விளங்­கு­கிறார்.

“இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­க

Leave A Reply

Your email address will not be published.