ஜனாதிபதி வேட்பாளரை நிபந்தனையின்றி ஆதரிக்க முடியாது

0 1,002

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்­தலை இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் ஏற்­க­னவே ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு அர­சியல் கட்­சிகள் தீவி­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற சூழலில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இந்த அறி­வித்தல் அர­சியல் கட்­சி­களை இன்னும் தீவிர செயற்­பா­டு­க­ளுக்கு தூண்­டி­யுள்­ளது எனலாம். அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் அக்­கட்­சி­க­ளி­டையே வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் இழு­பறி நிலை நீடித்துக் கொண்டே இருக்­கின்­றது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சஜித் பிரே­ம­தாஸ, கரு ஜய­சூ­ரிய, கோத்­தா­பய ஆகி­யோர்கள் போட்­டி­யி­டு­வார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டாலும், இறுதி முடி­வினை எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் அறி­விக்­க­வில்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் யார் போட்­டி­யிட்­டாலும் வெற்­றி­பெறும் வேட்­பாளர் ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த ஒரு­வ­ராக அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த ஒரு­வ­ரா­கவே இருப்பார். இது­வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களின் முடி­வா­கவும் இது இருக்­கின்­றது. அதற்கு காரணம் ஜனா­தி­பதித் தேர்­தல்கள் இரு­முனை போட்­டி­யா­கவே இருந்­துள்­ள­மை­யே­யாகும். ஆனால், இம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல் மும்­முனைப் போட்­டி­யாக அமை­வ­தற்கும் அதிக வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆயினும், வழக்­கம்போல் வெற்­றி­யா­ளரை சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதே வேளை, யார் வேட்­பா­ளர்­க­ளாக இருந்­தாலும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மஹிந்­த­ரா­ஜபக் ஷ ஆகி­யோர்­களே முக்­கிய பாத்­தி­ரங்­க­ளாக இருக்கப் போகின்­றார்கள். 

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தாலும், தமது கட்­சியின் ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பாளர் யார் என்­ப­தனை தீர்­மா­னிப்­பதில் தேசிய கட்­சிகள் இன்னும் திருத்­த­மான முடி­வினை எடுக்­க­வில்லை. அர­சியல் கட்­சி­க­ளி­டையே வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வதில் முரண்­பா­டு­களும், சிக்­கல்­களும் காணப்­ப­டு­கின்­றன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இன்­றைய அர­சியல் சூழலில் மிகவும் பல­வீ­னப்­பட்­டுள்­ள­தென்றே சொல்­லலாம். 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் மஹிந்­த­ரா­ஜபக் ஷ தனிக்­கட்சி அமைத்து பிரிந்து செயற்­பட்­டதன் கார­ண­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பல­வீ­னப்­பட்­டுள்­ளது. இதனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் நிறுத்­தப்படும் ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் வெற்றி பெறு­வது என்­பது முயற்­கொம்­பா­கவே இருக்கும். இதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இம்­மு­றையும் போட்­டி­யிடும் எண்­ணத்தில் உள்ளார். தனது வெற்­றியை தனித்து நின்று பெற­மு­டி­யா­தென்­பதால் மஹிந்­த­ரா­ஜபக் ஷவை மறை­முகத் தலை­வ­ராகக் கொண்டு செயற்­ப­டு­கின்ற ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் கூட்டு வைத்து, தான் போட்­டி­யி­டு­வதன் மூலம் வெற்றி பெற­லா­மென்று மைத்­தி­ரி­பால சிறி­சேன நினைக்­கின்றார். இதற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டாலும், வேட்­பா­ளரை முடிவு செய்­வதில் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இணங்­கிய போதிலும் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜபக் ஷ அல்­லது மஹிந்த ராஜபக் ஷ விரல் நீட்டும் ஒரு­வரே வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்­டு­மென்று ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி விரும்­பு­கின்­றது. ஆயினும், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தாக இருந்தால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட வேண்­டு­மென ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் விரும்­பு­கின்­றனர்.
இவ்­விரு கட்­சி­களும் இணைந்து போட்­டி­யிட்டு ஆட்­சி­ய­மைக்கும் போது நிச்­ச­ய­மாக மஹிந்த ராஜபக் ஷதான் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அதனால், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி சார்பில் வேட்­பாளர் நிறுத்­தப்­பட்டு, அவர் வெற்­றியும் பெற்றால் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியைச் சேர்ந்­த­வ­ரா­கவே இருப்பார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அதி­கா­ர­மில்­லாது போய்­விடும். இத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­ப­டு­மாக இருந்தால் அது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை இன்னும் பல­வீ­னப்­ப­டு­வ­தா­கவே அமையும். ஆதலால், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன இருக்க வேண்­டு­மென்­ப­தனை ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி நிரா­க­ரிக்­கு­மாயின் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார். இதன் மூல­மாக ஜனா­தி­பதித் தேர்தல் மும்­முனை போட்­டி­யாக மாறி­விடும். இந்­நிலை சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளுக்கு இன்னும் பெறு­ம­தியை ஏற்­ப­டுத்­தி­விடும். ஜனா­தி­பதி தேர்தல் மும்­மு­னை­யாக மாறும்­போது தமிழ், முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் வெற்­றி­பெ­றுவார். இதே­வேளை, ஜனா­தி­பதி தேர்தல் மும்­மு­னை­யாக மாறும்­போது அளிக்­கப்­படும் வாக்­கு­களில் 51 சத­வீத வாக்­கு­களை ஒருவர் பெறு­வ­தென்­பது கடி­ன­மாக இருக்கும். ஜனா­தி­பதி தேர்­தலில் ஒருவர் வெற்றி பெற்­றி­ருந்­தாலும் அவர் அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் 51 வீதத்தைப் பெறல் வேண்டும். அது தவறும் பட்­சத்தில் இரண்டாம் தெரிவு வாக்­குகள் எண்­ணப்­படும். அதன் பின்­னரே வெற்றி பெற்­றவர் அறி­விக்­கப்­ப­டுவார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி தனித்துப் போட்­டி­யி­டு­மாயின் அதன் வேட்­பா­ள­ராக கோத்­தா­பய நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கே அதிக வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆனால், கோத்­தா­ப­ய­வுக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் அளிக்­கப்­படும் வீதம் குறை­வா­கவே இருக்­கு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதனால், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய தந்­தி­ரங்­களை அக்­கட்சி மேற்­கொண்­டுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் இல்­லாத அர­சியல் கட்­சி­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்­துள்­ளது. என்ற போதிலும், சிறு­பான்­மை­யி­னரின் அதிக செல்­வாக்கைப் பெற்­றுள்ள அர­சியல் கட்­சிகள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கொள்­வ­தற்கு மறு­த­லிக்கும் நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ளன. மஹிந்த ராஜபக் ஷவுடன் பேரி­ன­வாதம் பேசி, சிறு­பான்­மை­யி­ன­ரையும், அவர்கள் சார்ந்த கட்­சி­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள். இவர்­களின் செயற்­பா­டு­களை மஹிந்த ராஜபக் ஷ அங்­கீ­க­ரித்த ஒரு­வ­ரா­கவே இருக்­கின்றார். இதனால், அக்­கட்­சிக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வது முயற்­கொம்­பா­கவே இருக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியை எடுத்துக் கொண்டால் அங்கு வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் பலத்த முரண்­பா­டுகள் உள்­ளன. ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித், கரு­ஜயசூரிய ஆகி­யோர்­களின் பெயர்கள் ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் விட­யத்தில் அக்­கட்­சியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்துக் கொண்­டாலும், இவர்தான் வேட்­பாளர் என்று தெரி­விப்­பதில் பிரச்­சினை உள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யிடும் மன­நி­லையைக் கொண்­டி­ருந்­தாலும் அவர் போட்­டி­யிடக் கூடா­தென்­ப­துதான் ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பல­ரி­னதும் நிலைப்­பா­டாகும். இதனால் சஜித்தை அல்­லது கரு ஜய­சூ­ரி­யவை நிய­மிக்க வேண்­டு­மென்ற கருத்­துக்கள் வலுத்துக் கொண்டு வரு­கின்­றன. ஆயினும், இவர்­களில் சஜித்தை வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டு­மென்­ப­தற்கு ஆத­ரவு அதி­க­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னி­டையே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், சஜித்தும் மூடிய அறைக்குள் பேச்­சுக்­களில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இதில் எதனைப் பேசி­னார்கள் என்று தெரி­ய­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் மேற்­படி இரண்டு பேரில் யார் வேட்­பா­ள­ராகப் போட்­டியிட்டாலும் தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டன்தான் இணைந்து செயற்­படும் என்று உறு­தி­செய்து கொண்­டாலும் அக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்று அறி­விக்­கப்­பட வேண்டும். அதன் பின்­னர்தான் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வது பற்­றிய முடிவை எடுக்க முடி­யு­மென்று தெரி­வித்­துள்­ளனர். இத­னாலும், வேறு சில கார­ணங்­க­ளி­னாலும் இம்­மாதம் 05ஆம் திகதி ஐக்­கிய தேசிய கட்சி சிறு­பான்மைக் கட்­சிகள் உட்­பட ஏனைய சில சிறு­கட்­சி­க­ளுடன் செய்து கொள்­ள­வி­ருந்த உடன்­ப­டிக்கை பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. இந்த உடன்­ப­டிக்கை இம்­மா­தத்தின் இறுதில் நடை­பெ­ற­லா­மென்று தெரி­ய­வ­ரு­கின்­றது. அதற்­கி­டையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ளரை அறி­விக்கும் எனலாம்.

இதே­வேளை, எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­கள்தான் வெற்­றியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருக்கப் போகின்­ற­தென்­பதில் ஐய­மில்லை. ஆனால், சிறு­பான்­மை­யி­னரும், அவர்கள் சார்ந்த கட்­சி­களும் எந்த இலக்கை அடைந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரிக்கப் போகின்­றார்கள் என்­பது முக்­கி­ய­மாகும்.

2015ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரில் மிகக் கூடு­த­லா­ன­வர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே ஆத­ரித்­தார்கள். யுத்த வெற்றி வீர­னாக சிங்­கள மக்­க­ளினால் பார்க்­கப்­ப­டு­கின்ற மஹிந்­த­ரா­ஜபக் ஷ யுத்த வெற்­றியை மூல­த­ன­மாகக் கொண்டு செயற்­பட்டார். சிங்­கள மக்­க­ளி­டையே தமக்­கி­ருந்த ஆத­ர­வை­யிட்டு மமதை கொண்டு செயற்­பட்டார். தனது வெற்­றியை யாராலும் தடுக்க முடி­யா­தென்று நினைத்தார். ஆயினும், அவரால் சிறு­பான்­மை­யி­னரின் மனங்­களை வெல்ல முடி­ய­வில்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பௌத்த இன­வா­தி­க­ளினால் மேற்­கொண்ட எதிர் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. அவற்றை கண்டு கொள்­ள­வில்லை. குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கே அதிக அநீ­தி­களை பௌத்த இன­வா­திகள் மேற்­கொண்­டார்கள். அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் பிர­தேச முஸ்­லிம்­களை பௌத்த இன­வா­தி­களின் தூண்­டு­தல்­க­ளினால் வன்­மு­றையை பிர­யோ­கித்து தாக்­கி­னார்கள். இத­னைக்­கூட தடுக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனால், யுத்த வெற்றி வீர­ரினால் 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி கொள்ள முடி­ய­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷவின் மீது சிறு­பான்­மை­யி­ருக்கு இருந்த வெறுப்­புத்தான் அவரை தோல்­வி­ய­டையச் செய்­தது. சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளினால் ஜனா­தி­பதி சிம்­மா­ச­னத்தில் அமர்ந்­து­கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறு­பான்­மை­யி­னரின் மனங்­களை வெல்லக் கூடி­ய­வாறு நடந்து கொள்­ள­வில்லை. நன்றி கெட்­ட­த­ன­மாக பௌத்த இன­வா­தி­களின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தா­தி­ருந்தார். சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்லிம் விரோத போக்­கை­யு­டைய ஞான­சார தேரரை பொது மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்தார். மேலும், மஹிந்­த­ரா­ஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது அவ­ரோடு இணைந்து செயற்­பட்ட இன­வாத தேரர்கள் பல­ரையும் தம்­மோடு இணைத்துக் கொண்டார். சிலரை ஆலோ­ச­க­ரா­கவும் வைத்துக் கொண்டார். இதனால், மஹிந்த ராஜபக் ஷவுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையே முஸ்­லிம்­க­ளினால் வேறு­பாட்டைக் காண முடி­ய­வில்லை. இதே­வேளை, நல்­லாட்­சியின் ஓர் அங்­க­மாக செயற்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் கூட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

ஆதலால், முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் தங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை முன் வைக்கக் கூடிய ஒரு­வ­ருக்கே ஆத­ரவு வழங்க வேண்டும். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரதமராகவும் வருவதற்கும், நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கும் முஸ்லிம்களும், முஸ்லிம் கட்சிகளும் அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளன. ஆனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவார்கள். தமிழர்களின் காணிகளில் அதிகமானவை விடுவிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தை விடவும் நல்லாட்சி அரசாங்கத்தில் பௌத்த இனவாதிகளினால் அதிக அடிகளை முஸ்லிம்கள் வாங்கிக் கொண்டார்கள். இந்தக் கசப்பான சம்பவங்களை மறந்து முடிவுகளை எடுத்து ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாக யார் தீர்வுகளை முன் வைக்கின்றார்களோ அவரையே ஆதரிப்பது பற்றி சிந்திக்க வேண்டியேற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகையதொரு நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எடுக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைய வேண்டும். முஸ்லிம்களின் அச்சம் நீங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்கின்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அதற்குரிய திட்டங்களும், துணிச்சலுமுள்ள வேட்பாளரையே முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும். இவற்றிற்கு உத்தரவாதமளிக்காத வேட்பாளரை ஆதரிக்கமுடியாது. எந்த வேட்பாளரையும் கண்களை மூடிக் கொண்டு வெறுமனே ஆதரிக்க முடியாது.

எஸ்.றிபான்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.