முகவர்களால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ள 123 யாத்திரிகர்கள்

பணம் செலுத்தியும் ஹஜ் செல்ல முடியாத நிலை; இறுதி விமானம் இன்று

1 843

ஏ.ஆர்.ஏ. பரீல்

இவ்­வ­ருட ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக ஹஜ் முக­வர்­க­ளிடம் உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்தி ஹஜ் பய­ணத்­துக்குத் தயா­ரான நிலை­யி­லுள்ள 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை இரண்டு ஹஜ் முக­வர்கள் இறுதி நேரத்தில் ஏமாற்­றி­யுள்­ளதால் அவர்கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர்.

இவர்­களில் 30 க்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் நேற்­று­மாலை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலீக் ஹஜ் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் பய­ணிகள் உதவிப் பணிப்­பாளர் அன்வர் அலி­யிடம் நியாயம் கோரி­னார்கள்.

123 ஹஜ் யாத்­தி­ரி­களில் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஒரு ஹஜ் முக­வ­ரிடம் ஹஜ் கட்­ட­ணங்­களைச் செலுத்­தி­யுள்ள நிலையில் அவர்கள் செலுத்­திய கட்­ட­ணங்கள் அவர்­களை ஹஜ் கட­மைக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான மற்­றுமோர் ஹஜ் முக­வ­ருக்கு குறிப்­பிட்ட முக­வ­ரினால் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயண ஏற்­பா­டு­களைச் செய்ய முடி­யாது என ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான ஹஜ் முகவர் மறுத்­துள்ளார். இந்தப் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் நேற்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் நீண்­ட­நேரம் இடம்­பெற்­றாலும் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­பட்ட கட்­ட­ணத்தை அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட முக­வ­ரிடம் செலுத்­து­வ­தாக குறிப்­பிட்ட ஹஜ் முகவர் உறு­தி­ய­ளிக்­க­வில்லை. இதனால் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளையும் பணம் பெற்­றுக்­கொண்ட ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

இன்று புதன்­கி­ழமை கடைசி இரண்டு ஹஜ் விமா­னங்கள் இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளன. இன்று காலை­யிலும் மாலை­யிலும் புறப்­பட்டுச் செல்­ல­வுள்ள விமா­னங்­களில் அவர்கள் பய­ணிப்­ப­தற்­கான விமான டிக்கட் பெற்றுக் கொள்­ளப்­ப­டா­விட்டால் அவர்­க­ளது ஹஜ் யாத்­திரை தடைப்­படும்.
இதே­வேளை, மேலும் 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் நேற்று மாலை­வரை உரிய விமான டிக்கட் வழங்­கப்­ப­டாது ஒரு ஹஜ் முக­வ­ரினால் அலைக்­க­ழிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஹஜ் முக­வ­ருக்கு உரிய கட்­ட­ணங்­களை செலுத்­தி­யி­ருந்­தாலும் நேற்று மாலை­வரை சவூதி அரே­பியா விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்­கான விமான டிக்­கட்­டுக்குப் பணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் சவூதி அரே­பிய விமான சேவை விமான டிக்­கட்­டு­களை விநி­யோ­கிக்­க­வில்லை.

இதனால் விமான டிக்­கட்­டுகள் நேற்று மாலை வரை வழங்­கப்­ப­டா­ததால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயணத்தை மேற்கொள்ள வுள்­ள­வர்கள் ஆவார்கள். இச்­செய்தி எழு­தப்­ப­டும்­வரை பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தீர்வு வழங்கப்படவில்லை. திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலியைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

vidivelli 

1 Comment
  1. Ali Rishab says

    These innocents cheated by NM TRAVELS.
    This company name should be published . otherwise these corrupted businessmen will not learn the lesson

Leave A Reply

Your email address will not be published.