குத்பா பிரசங்கத்தை  சுருக்கிக்கொள்ளுங்கள்

0 800
  • ஏ.ஆர்.ஏ. பரீல்

குத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் மதியம் 1.30 மணி­யையும் கடந்து ஜும்ஆ பிர­சங்­கங்கள் நடை­பெ­று­வ­தாக உலமா சபையின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதனால் ஜும்ஆ தொழு­கைக்­காக குறு­கிய நேர விடு­மு­றையைப் பெற்­று­வரும் அர­சாங்க ஊழி­யர்கள் மற்றும் தனி­யார்­துறை ஊழி­யர்கள் பல சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். கதீப்­மார்கள் குத்­பாவைச் சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­வதே சன்மார்க்கத்துக்கான சிறந்த அடை­யா­ள­மாகும். குத்பா பிர­சங்­கங்கள் நீண்ட நேரம் இடம்­பெ­று­வதால் வய­தா­ன­வர்கள் மற்றும் நோயாளர்­களும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். இதனைத் தவிர்ப்பதற்காக குத்பா பிரசங்கங்களை சுருக்கிக் கொள்ளுமாறு உலமா சபை ஆலோசனை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.