பிரதமராக மஹிந்த ராஜக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார்.

0 690

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக தனது கடமைகளை  சற்று முன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால்  பிரதமராக நியமனம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ இன்று முற்பகல் 11.50 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பொறுப் பேற்றுக் கொண்டார்.

சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களோடு இரண்டாவது தடைவையாகவும் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாநாயக்க தேரர்கள், மதத் தலைவர்கள்  ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.