கத்தார் அமீர் பாகிஸ்தானுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம்

0 711

இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை பாகிஸ்­தா­னுக்கு மேற்­கொண்ட கத்தார் அமீர் கடந்த சனிக்­கி­ழமை பாகிஸ்­தானின் இஸ்­லா­பாத்தை வந்­த­டைந்தார்.

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் மற்றும் கத்தார் அமீர் செய்க் தமீம் பின் ஹமாட் அல் தானி ஆகி­யோ­ருக்­கி­டையில் தனிப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றதைத் தொடர்ந்து தூதுக்­குழு மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­ற­தாக பிர­தமர் அலு­வ­லகம் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருதரப்பு வர்த்­த­கத்­தையும் குறிப்­ப­டத்­தக்­க­ளவு அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும், விவ­சாயம் மற்றும் உண­வுத்­து­றை­களில் ஒத்­து­ழைப்பை விரிவுபடுத்­து­வ­தற்கும் , சக்­தி­வ­ளத்­துறை, விமானப் போக்­கு­வ­ரத்து, கடல்­வழிப் போக்­கு­வ­ரத்து, பாது­காப்பு மற்றும் பாது­காப்பு உற்­பத்தி ஆகிய விட­யங்­களில் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் இரு தரப்­பி­னரும் இணக்கம் கண்­டனர்.

பிராந்­திய நிலை­மைகள் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் சமா­தான முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு வச­தி­யேற்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய முயற்­சிகள் தொடர்­பிலும் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்து இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் வர்த்­தக முத­லீடு தொடர்­பிலும், சுற்­றுலா மற்றும் நிதி­யியல் நுட்பச் செயற்­பா­டுகள் போன்ற துறை­களில் ஒத்­து­ழைப்பு வழங்­குதல் தொடர்­பிலும் பாகிஸ்தான் –- கத்தார் இணை செயற்­கு­ழு­வொன்றை அமைப்­ப­தற்­கான மூன்று புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கைள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.

இம்ரான் கானின் அழைப்பின் பேரி­லேயே அல்-­தானி இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வி­ன­ருடன் இஸ்­லா­மா­பாத்தில் உள்ள நூர் கான் விமான தளத்­தினை வந்­த­டைந்த கத்தார் அமீ­ருக்கு செங்­கம்­பள வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

இம்ரான் கான் மற்றும் அவ­ரது அமைச்­ச­ர­வையின் சிரேஷ்ட அமைச்­சர்­களால் கத்தார் அமீர் வர­வேற்­கப்­பட்டார்.

இந்த விஜயம் இரு தரப்பு உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வு­வ­தோடு டோகா­வுக்கும் இஸ்­லா­மா­பாத்­திற்கும் இடையே பங்­காண்மை அடிப்­ப­டை­யி­லான பிணைப்­பினை உரு­வாக்கும் என பாகிஸ்­தா­னுக்­கான கத்தார் தூதுவர் சகார் பின் முபாரக் அல் மன்­சூரி தெரி­வித்தார்.

சக்­தி­வளம் மற்றும் பொரு­ளா­தா­ரத்தில் இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான உற­வுகள் அண்­மைய ஆண்­டு­களில் குறிப்­பி­டத்­தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கு கராச்சிக்கும் டோஹாவுக்கும் இடையே நேரடி கடல் போக்குவரத்து பாதையினை உருவாக்குவது மேலும் உதவும் எனவும் காணொலி மூலம் வெளியிட்ட அறிக்கையில் சகார் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.