டாக்டர் ஷாபி கைது : கிழியும் முகத்திரைகள்

0 735

ஷாபி டாக்டர், இன்று இலங்­கையில் இவரை அறி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது. கடந்த ஒரு மாத­மாக நாட்டின் பிர­தான பேசு பொருள்­களில் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு பெய­ராக அது மாறி­யி­ருக்­கின்­றது. காரணம், ஒரு கருத்­தடை நாடகம், வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­த­தாக ஒரு குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்­டை­விட, கருத்­தடை நாட­கத்தின் பெயரால் சாட்­சிகள் இன்­றியே இன்று ஷாபி டாக்டர் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­டு­விட்டார். இது ஒரு பயங்­க­ர­மான நிலைமை.

எப்­போதும் ஒருவர் தொடர்பில் விசா­ர­ணைகள் செய்து நியா­ய­மான சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் அவர் சந்­தேக நப­ராக அறி­விக்­க­ப்ப­டு­வதும், பின்னர் மேல­திக விசா­ர­ணை­களில் அல்­லது வழக்கு விசா­ர­ணை­களில் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் அவர் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­க­ப்படு­வ­துமே நியா­ய­மான அல்­லது சட்­டத்தின் ஆட்சி இடம்­பெறும் ஒரு நாட்டின் வழ­மை­யாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்­டரின் விவ­கா­ரத்தில், அவர் சாட்­சி­க­ளின்றி குற்­ற­வா­ளி­யாக முழுத் தேசத்­துக்கும் அறி­விக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராக தற்­போது நியா­ய­மா­கவோ அநி­யா­ய­மா­கவோ இரு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ஒன்று, வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை. மற்­றை­யது, சிங்­களப் பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை செய்­தமை.

இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் இறுதி நிமிடம் வரை­யிலும் அந்த இரு விடயங்கள் தொடர்­பிலும் ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராக எந்­த­வொரு சாட்­சியும், விசா­ர­ணை­யா­ளர்­களால் கண்டு பிடிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­துதான், ஷாபி டாக்­டரை மையப்­ப­டுத்தி இடம்­பெறும் நாட­கத்தின் உண்மை நிலை­மையை பறை­சாற்றும் சாட்சி.

நாட­கத்தின் டீசர்

கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெளி­யான திவ­யின தேசிய பத்­தி­ரி­கையின் பிர­தான தலைப்பு செய்­தி­யா­னது, “சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­களின் பின்னர் தெளஹீத் ஜமாஅத் டாக்­டரால் சிங்­கள பெளத்த தாய்மார் 4000 பேருக்கு குடும்பக் கட்­டுப்­பாடு” என வெளி­யா­கி­யி­ருந்­தது. இதுவே இந்த நாட­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ டீச­ராக அமைந்­தது. உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரை மேற்­கோள்­காட்டி அந்த செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்த போதும் அவ்­வ­தி­கா­ரியின் பெயர் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனினும், அந்த செய்தி வெளி­யா­ன­போதும், இலங்­கையில் எந்­த­வொரு பொலிஸ் நிலை­யத்­தி­னாலும், சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­னாலும் அவ்­வாறு ஒரு விடயம் குறித்து எந்த விசா­ர­ணை­களும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை அன்­றைய தினமே பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன மற்றும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர ஆகியோர் உறுதி செய்­தனர்.

இவ்­வா­றி­ருக்­கையில் தான் திவ­யின செய்­தியை உறுதி செய்­வது போல அன்று மாலை ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, ஷாபி டாக்­டரின் புகைப்­ப­டத்தை பிர­சு­ரித்து தனது பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில், திவ­யின செய்தி சொல்லும் டாக்டர் இவர்தான் எனும் மாயையை ஏற்­ப­டுத்­தினார்.
இந்­நி­லையில் மீள செய்தி வெளி­யிட்ட திவ­யின பத்­தி­ரிகை, தனது செய்­தியை உறு­தி­செய்ய குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சரத் வீர­பண்­டா­ர­வையும் மேற்­கோள்­காட்டி அறிக்­கை­யிட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் இந்தச் செய்தி பிரச்­சி­னை­யாக நாட­ளா­விய ரீதியில் இன­வாத சாய­லுடன் தீயாய் பர­வி­யது.

செய்தி குறித்த விசா­ரணை

இந்­நி­லையில் திவ­யின பத்­தி­ரிகை செய்தி தொடர்பில், அந்த செய்­தியின் உண்­மைத்­தன்மை தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­படி கடந்த மார்ச் 25 ஆம் திகதி குறித்த செய்­தியை எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ரையும், அப்­பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ரையும் விசா­ரித்து சி.ஐ.டி. வாக்­கு­மூலம் பெற்­ற­துடன், செய்­தியை வெளி­யிட்ட உயர் பொலிஸ் அதி­காரி யார் என்­ப­தையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டது. அதன்­படி குரு­நாகல் மாவட்­டத்­துக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்­தையும் சி.ஐ.டி. விசா­ரித்­துள்­ளது.

குரு­நாகல் பொலி­ஸாரின் அவ­சர கைது

கடந்த மே 25 ஆம் திக­தி­யன்று ஷாபி டாக்டர் அவரது வீட்டில் வைத்து குரு­நாகல் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்டார். பொலிஸ் பேச்­சா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பின் பிர­காரம் அவர், வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சொத்­துக்­கு­விப்பு தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கைது செய்­ய­லாமா?

எவ்­வா­றா­யினும் பொது­வாக சொத்துக் குவிப்பு அல்­லது வரு­மா­னத்தை மீறிய சொத்து சேர்த்­தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவே விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும். எனினும், குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜயலத் தனக்கு கிடைக்­கப்­பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமை­வாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். எவ்­வா­றா­யினும் பொலி­சா­ருக்கு கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் அது­கு­றித்து விசா­ரிக்க முடி­யு­மான அதி­காரம் உள்­ளதால் அதனை மையப்­ப­டுத்தி இதனை ஆரம்­பித்­தி­ருக்­க­லா­மெனக் கொண்­டாலும் முறைப்­பா­டு­க­ளின்றி இவ்­வா­றான விசா­ர­ணை­யொன்றை ஆரம்­பித்­ததும், அத­னுடன் சேர்த்து கருத்­தடை கதை ஒன்­றினை பரப்­பி­யதும் பாரிய சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­யுள்­ளன.

கைதின் பின்­ன­ணியில் உள்ள
பர­க­சி­ய­மான இர­க­சியம்

இந்த ஷாபி டாக்­டரின் கைதின் பின்­னணி தொடர்பில் குரு­நா­கலில் ஒரு பர­க­சி­ய­மான இர­க­சியம் உலா வரு­கின்­றது. அதா­வது, குரு­நாகல் நகரில் ஒரு கட்­டி­டத்தை கொள்­வ­னவு செய்­வது குறித்த போட்­டியே இந்தக் கைதின் பின்­ன­ணி­யெனக் கூற­பப்­டு­கின்­றது. ஷாபி டாக்­ட­ருக்கும், குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின் வகுப்­புத்­தோ­ழ­னான குரு­நாகல் வர்த்­தக சங்­கத்தின் ஒரு­வ­ருக்­கு­மி­டையில் இந்தப் போட்டி இருந்­துள்­ளது. இறு­தியில் ஷாபி டாக்டர் அந்த கட்­டி­டத்தைக் கொள்­வ­னவு செய்­த­தை­ய­டுத்து, வர்த்­தக சங்க உறுப்­பினர் தனது நண்­ப­னான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜயலத் ஊடாக காய் நகர்த்­தி­ய­தாக அந்தப் பர­க­சி­யமான இரக­சியம் சொல்­கி­றது.
குரு­நாகல் நகரில் ரியோ பார் எனும் குறித்த கட்­டிடம் விற்­ப­னைக்­காக 2015 ஆம் ஆண்டு விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர் ஒரு­வரின் உற­வினர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான இந்தக் கட்­டி­டத்தின் விலை அல்­லது பெறு­மதி 130 மில்­லியன் அல்­லது 13 கோடி ரூபா­வாகும்.
அவ்­வா­றா­யினும் அதனை ஷாபி டாக்டர் தனித்துக் கொள்­வ­னவு செய்­ய­வில்லை எனவும் சாஜித், ரவூஸ்தீன் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகிய மேலும் மூவ­ருடன் இணைந்தே அதனை கொள்­வ­னவு செய்­த­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. அந்தக் கட்­டி­டத்தை கொள்­வ­னவு செய்ய முதலில் 6 கோடி ரூபா ஆரம்­ப­மாக செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், எஞ்­சிய தொகையை 6 மாதங்­க­ளுக்குள் குத்­தகை அடிப்­ப­டையில் செலுத்த ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி அடிப்­படை பணத்­தொ­கை­யான 6 கோடி ரூபாவை செலுத்த அக்­கட்­டி­டத்தை இணைந்து கொள்­வ­னவு செய்த அனை­வரும் தலா ஒன்­றரைக் கோடி ரூபா வீதம் முத­லிட்­டுள்­ளனர். அதன்­படி ஷாபி டாக்­டரும் அக்­கட்­டி­டத்­துக்கு செல­வ­ழித்­துள்ள தொகை ஒன்­றரைக் கோடி ரூபாவே.

அதன்­பின்னர் குரு­நாகல் வர்த்தக சங்­கத்தை சேர்ந்த தரப்பு எனக் கூற­ப்படும் ஒரு சாரார் அந்தக் கட்­டி­டத்தை தமக்கு விற்­பனை செய்யக் கட்­டிட உரி­மை­யா­ள­ருடன் பேசி­யுள்­ளனர். அது தொடர்பில் கட்­டிட உரி­மை­யாளர் டாக்டர் ஷாபி தரப்­புடன் பேசிய போது, ஷாபி தரப்­பினர் தாம் செலுத்­திய அடிப்­படை தொகை­யான 6 கோடி ரூபா­வையும் அதற்கு மேல­தி­க­மாக இன்­னு­மொரு கோடி ரூபா­வையும் செலுத்­து­மாறும் அதன்­பின்னர் ஒப்­பந்­தத்தை ரத்து செய்­யலாம் எனவும் கூறி­யுள்­ளனர். இந்­நி­லையில் அதற்கு விருப்பம் தெரி­விக்­கா­மையால் ஏற்­க­னவே ஷாபி டாக்டர் தரப்பின் ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அந்தக் கொடுக்கல் வாங்கல் நடந்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்­தியே ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ரான சொத்துக் குவிப்பு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

கருத்­தடை கதை வந்த பின்­னணி என்ன?

கடந்த 2017 ஆம் ஆண்டு குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பா­ள­ராகத் தற்­போ­தைய பணிப்­பா­ளரே கட­மை­யாற்­றி­யுள்ளார். அப்­போது அவ்­வைத்­தி­ய­சா­லையின் பெண் வைத்­தியர் ஒருவர் மற்­றொ­ரு­வ­ரிடம் ஷாபி வைத்­தி­ய­ருக்கு எதி­ராக சட்­ட­வி­ரோத கருத்­தடை தொடர்பில் வதந்­தி­யொன்­றினை கதைத்­துள்ளார். இத­னை தனது நற்­பெ­ய­ருக்கு களங்­க­மேற்­பட்­ட­தாகக் கூறி, ஷாபி வைத்­தியர் அது­கு­றித்து விசா­ரிக்­கு­மாறு அப்­போ­தைய பிரதிப் பணிப்­பா­ள­ரிடம் முறை­யிட்­டுள்ளார். எனினும், அது தொடர்பில் விசா­ர­ணைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. பின்னர் அப்பெண் வைத்­தி­யரும் பிரதிப் பணிப்­பா­ளரும் குரு­நா­க­லி­லி­ருந்து இட­மாற்றம் பெற்று சென்­றி­ருந்­தனர்.

குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­வதன்
மற்­றொரு பின்­னணி

இதே­வேளை ஷாபி டாக்­டரும் அவ­ரது மனை­வியும் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லை­யி­லேயே சேவை­யாற்­றினர். இவ்­வாறு இருக்கும் நிலையில் ஷாபி டாக்­டரின் மனை­விக்கு இட­மாற்­ற­மொன்று வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதனை மையப்­ப­டுத்தி, அப்­போ­தைய பிரதிப் பணிப்­பா­ளரும் தற்­போ­தைய பணிப்­பா­ள­ரு­மான வைத்­தி­ய­ருடன் ஷாபி டாக்­ட­ருக்கு வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் பின்னர் ஷாபி டாக்­டரின் மனைவி இட­மாற்றம் பெற்று சென்­றி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இவை அனைத்­தையும் வைத்துப் பார்க்­கும்­போது வைத்­தியர் ஷாபி மீதான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட குரு­நாகல் வைத்­தி­ய­சா­லைக்­குள்­ளி­ருக்கும் தனிப்­பட்ட முரண்­பா­டுகள் மற்றும் வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்கள் பின்­ன­ணியில் இருந்­தி­ருக்­கின்­றன என்­பது தெளி­வா­கின்­றது.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தே திவ­யின பத்­தி­ரி­கைக்கு கருத்­தடை செய்­தியை வெளி­யிட குறித்த ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு தகவல் கொடுத்­தவர் என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்த விடயம் குறித்து தற்­போது ஷாபி டக்டர் தொடர்பில் விசா­ரிக்கும் சி.ஐ.டி. குழு அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டிய விட­யமே.

ஷாபி டாக்­டரை சி.ஐ.டி. பொறுப்­பேற்ற பின்­னணி

மேற்­சொன்ன பர­க­சி­ய­மான இர­க­சியம் பொலிஸ் திணைக்­க­ளத்­துக்குள் பர­வ­லாகப் பேச­ப்பட்ட விட­ய­மாகும். எனவே, ஷாபி டாக்­டரைக் கைது செய்த குரு­நாகல் பொலிசார், பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மை­யவே ஒவ்­வொரு நகர்­வு­க­ளையும் செய்­தி­ருந்­தனர். குறிப்­பாக கைது செய்த பொலிஸ் குழு, ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராகக் குற்­றஞ்­சாட்ட எந்த ஓர் ஆதா­ரத்­தையும் கையில் வைத்­தி­ருக்­க­வில்லை.

குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜயலத் முன்­னெ­டுக்கும் குறித்த விசா­ரணை முறைமை நியா­ய­மற்­றது என்­பது எதிர்­காலத்தில் பொலி­சா­ருக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்தும் என்­பதை அவ­தா­னித்த பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, ஷாபி டாக்­டரை பொறுப்­பேற்று விசா­ரிக்­கு­மாறு சி.ஐ.டி. பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்தே சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்­க­மைய, சமூக கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பீ.எஸ். திசே­ராவின் கீழ் அந்தப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வா­வுக்கு குறித்த விடயம் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்தே குரு­நா­க­லுக்கு சென்ற விஷேட சி.ஐ.டி. குழு ஷாபி டாக்­டரை பொறுப்­பேற்று கொழும்­புக்கு அழைத்­து­வந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

டாக்­ட­ருக்கு எதி­ரான முறைப்­பா­டுகள்

எவ்­வா­றா­யினும் ஷாபி டாக்டர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, ஏற்­க­னவே ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக வலைத்­த­ளங்கள் ஊடா­கவும் கருத்­தடை விவ­காரக் குற்­ற­வா­ளி­யா­கவே சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­ததால் அது­கு­றித்த விசா­ர­ணை­க­ளுக்கு சி.ஐ.டி.க்கு முறைப்­பா­டுகள் தேவைப்­பட்­டன. அதனால் அப்­படி எவ­ரேனும் சட்­ட­வி­ரோத கருத்­த­டைக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருப்பின் முறைப்­பா­ட­ளிக்­கு­மாறு அவரைக் கைது செய்த பின்­ன­ரேயே பொலிசார் கோரிக்கை முன்­வைத்­தனர்.

இந்­நி­லையில் பொலிஸ் நிலை­யங்கள், குரு­நாகல், கலே­வல மற்றும் தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லை­க­ளுக்­கென நேற்று முன்­தினம் மாலை வரை 1015 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றி­ருந்­தன.

விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலைமை

ஷாபி டாக்டர் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ர­ணை­களில், நேற்று மாலை­வரை டாக்­ட­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்த எந்த ஆதா­ரங்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றே நான்காம் மாடியின் உள்­ளக தக­வல்கள் எமக்கு வெளிப்­ப­டுத்­தின.

குறிப்­பாக சட்­ட­வி­ரோ­த­மாக சொத்து சேர்த்­தமை குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ரான அடிப்­படை குற்­றச்­சாட்டு தொடர்­பில்­கூட நேற்று முன்­தினம் மாலை வரை, அக்­குற்­றச்­சாட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராகக் கூறப்படும் சட்ட விரோத கருக்­க­லைப்பு தொடர்­பி­லான விடயம் தொடர்பில் சி.ஐ.டி. குழு 758 வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­துள்­ளது. அதில் சட்­ட­வி­ரோத கருத்­தடை விவ­காரம் தொடர்பில் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முறைப்­பா­டு­களை முன்­வைத்த தாய்­மார்­களில் 601 பேரி­டமும், பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபு­ணர்கள் 7 பேரி­டமும், ஷாபி வைத்­தி­யரின் தரத்­துக்கு சம­னான தரத்தை உடைய குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவு வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும், குழந்­தைகள் தொடர்­பி­லான 6 வைத்­தி­யர்­க­ளி­டமும், சிசே­ரியன் வைத்­தி­யர்­க­ளுக்கு உதவி வைத்­தி­யர்­க­ளாகக் கட­மை­யாற்றும் 11 வைத்­தி­யர்­க­ளி­டமும், உணர்­வி­ழக்கச் செய்யும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் 10 வைத்­தி­யர்­க­ளி­டமும் பதிவு செய்த வாக்­கு­மூ­லங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

இத­னை­விட, சிசே­ரியன் சிகிச்­சை­க­ளின்­போது குறைந்­தது இரு தாதி­யர்கள் அந்­ந­ட­வ­டிக்­கை­களில் பங்­கேற்கும் நிலையில், அவ்­வாறு அந்த சிகிச்­சை­களில் பங்­கேற்ற பிர­தான தாதி ஒருவர் உள்­ளிட்ட 70 தாதி­யர்­க­ளி­டமும், 18 உத­வி­யா­ளர்­க­ளி­டமும் பலோ­பியன் உறுப்­புகள் தொடர்­பி­லான வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன் மேலும் முக்­கி­ய­மான 31 வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளதாம்.

ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்டு

ஷாபி டாக்டர் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று மற்றும் பிர­சவம் தொடர்­பி­லான சிரேஷ்ட வைத்­தி­யர்­களில் ஒருவர். அவர் முன்­னெ­டுக்கும் சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­க­ளின்­போது அவ­ருக்கு மேல் அவரை மேற்­பார்வை செய்ய வைத்­திய நிபுணர் ஒரு­வரும், அவ­ருடன் சக வைத்­தி­யர்கள் குறைந்­த­பட்சம் இரு­வரும் தாதி­யர்­களும் இருப்பர். அவ்­வா­றான சூழலில் ஷாபி டாக்டர், பெண்­களின் கர்ப்பப் பையை அண்­மித்­துள்ள பலோ­பியன் குழாயில் முடிச்­சுப்­போட்டு இந்தக் கருத்­த­டையை அல்­லது மலட்டுத் தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. எனினும், இத்­தனை பேர் சேர்ந்து செய்யும் சத்­திர சிகிச்­சையின் இடையே ஷாபி டாக்­ட­ருக்கு மட்டும் அதனை எப்­படி செய்ய முடியும் என்­பதே பிர­தான கேள்வி.

எவ்­வா­றா­யினும் இது­வரை சி.ஐ.டி.க்கு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ள பல பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­திய நிபு­ணர்கள், அவ்­வா­றான கருத்­தடை சிசே­ரியன் ஒன்­றினை ஒருவர் தனித்து செய்ய சாத்­தி­யமே இல்லை என குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­துடன் வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ள 70 தாதி­யர்­களும் தங்­களை மீறி தனித்து வைத்­தியர் ஷாபியால் அவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முடி­யா­தெ­னவும், தாம் கட­மை­யி­லி­ருந்­த­போது அவரால் எந்த சட்­ட­வி­ரோ­த­மான செயல்­களும் முன்­னெ­டுக்­கப்ப­ட­வில்லை எனவும் வாக்கு மூல­ம­ளித்­துள்­ள­தாக நான்காம் மாடித் தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்­நி­லையில் முறைப்­பா­ட­ளித்­துள்ள பெண்­களை விசேட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி அவர்கள் சட்­ட­வி­ரோத கருத்­த­டைக்கு உள்­ளாக்­கப்பட்­டுள்­ள­னரா என்­பதை கண்­ட­றிய சி.ஐ.டி. தீர்­மா­னித்­துள்ள நிலையில் அதற்­கான நீதி­மன்ற அனு­ம­தி­யி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இந் நிலையில் கொழும்பு சட்ட வைத்­திய அதி­கா­ரியின் கீழான விஷேட குழு­வொன்று முன்­னி­லையில் இவர்கள் வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அந்­தக்­கு­ழுவில் இரு பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­திய நிபு­ணர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்த விட­யத்தில் முறைப்­பா­ட­ளித்­துள்ள பெண்கள் பலர், திவ­யின பத்­தி­ரிகை செய்­தியை அடுத்து ஏற்­பட்ட சந்­தே­கத்தின் கீழேயே முறைப்­பா­ட­ளித்­துள்­ள­தாகக் கூறு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், அந்தப் பெண்கள் அனை­வரும் கொழும்பு காசல் மற்றும் டி சொய்ஸா பெண்கள் மருத்­து­வ­ம­னையில் சோத­னை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதற்­கான அனைத்து வச­தி­க­ளையும் செய்­து­கொ­டுக்­கு­மாறு சுகா­தார அமைச்சின் செய­ல­ருக்கு நீதி­மன்றம் கட்­ட­ளையும் பிறப்­பித்­துள்­ளது.

குரு­நாகல் வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எதி­ரான உத்­த­ரவு

இந்­நி­லையில் டாக்டர் ஷாபிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களின் பின்­ன­ணியில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் தற்­போ­தைய பணிப்­பா­ளரின் பங்­க­ளிப்பும் இருக்­கலாம் என்­பது அவ­ரது நட­வ­டிக்­கைகள் ஊடாக தெள்­ளத்­தெ­ளி­வாக வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. அதா­வது, திவ­யின பத்­தி­ரிகை செய்­தியை அடுத்து குரு­நாகல் வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் ஊட­கங்­களை கூட்டி அங்கு முன்­வைத்த கருத்­துக்கள், ஷாபி வைத்­தி­ய­ரு­டன் தனிப்­பட்ட முரண்­பா­டு­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்க வேண்­டு­மென்ற பர­வ­லான சந்­தே­கங்கள் உள்­ளன.

இந்­நி­லையில் குறித்த பணிப்­பாளர் சி.ஐ.டி.யின் விசா­ர­ணை­களை புறக்கணித்த நிலையில், அவருக்கு எதிராக சி.ஐ.டி. நீதிமன்றம் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அவர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குருநாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குள்ள சிக்கல்

இந்நிலையில் ஷாபி டாக்டர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சி.ஐ.டி. விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் எதிர்வரும் வாரம் குருநாகல் நீதிவான் நீதிமன்றுக்கு விரிவான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஷாபி டாக்டர் சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கையிலோ, சொத்துக் குவிப்பிலோ ஈடுபட்டிருப்பின் அவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும், பொய்யாகப் புனையப்பட்ட அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரை மட்டும் இலக்குவைத்து இடம்பெறும் பழிவாங்கல்களுக்கு இடமளிக்க முடியாது.

பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவரின் தகவல் பிரகாரம், ஷாபி டாக்டர் தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் மருத்துவ சோதனைகள் மிக முக்கியமான திருப்பமாக அமையுமாம். அந்த சோதனைகளில் ஷாபி டாக்டர் தவறிழைக்கவில்லை என்பது தெரியவந்தால், குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலைமை உருவாகுமென அந்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டுகின்றார்.

குறிப்பாக முறைப்பாடொன்றுகூட இருக்காத நிலையில் ஒரு விடயத்தை ஊடகம் வாயிலாக பிரசாரம் செய்து, இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவித்தமை தொடர்பில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கூட அந்நடவடிக்கைகள் அமையப்பெறலாமென அந்த உயரதிகாரி சுட்டிக்கடடினார்.

உண்மையில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது சோடிக்கப்பட்டவையே. அது குறித்த விசாரணைகள் தொடர்வதால், உண்மை மிக விரைவில் வெளிச்சத்துக்கு வருமென எதிர்பார்க்கலாம். முறைப்பாடுகளின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியிட்டு ஷாபி டாக்டருக்கு எதிராகப் பெரும் சதி செய்யப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. சட்டம், ஒரு வைத்தியர் தொடர்பிலேயே இவ்வளவு வளைக்கப்படுமானால், சாதாரண ஒரு மனிதன் தொடர்பில் எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கப்படலாம்.

எனவே, சட்டத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பதாக மமதை கொண்டு இவ்வாறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தனக்கு வேண்டாதோரைப் பழிதீர்க்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். ஷாபி டாக்டரின் கைதும் அதுசார்ந்த விசாரணைகளும் பலரது முகத்திரைகளைக் கிழிக்கும் என எதிர்பார்க்கலாம்.

எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.