மதத் தலைவர்களின் இனவாத கருத்துகள் நிறுத்தப்பட வேண்டும்

0 744

உல­க­ளா­விய ரீதியில் பரந்­து­பட்­டுள்ள மதங்கள் கருணை, அன்பு, சகோ­த­ரத்­துவம் என்­ப­ன­வற்­றையே போதிக்­கின்­றன. மக்­களை நேர்­வ­ழியில் நெறிப்­ப­டுத்­து­வதே மதங்­களின் கோட்­பா­டு­க­ளாக அமைந்­துள்­ளன. இந்தக் கோட்­பா­டு­களை மதத்­த­லை­வர்­களே செயற்­ப­டுத்­து­கி­றார்கள். மதத்­த­லை­வர்­களின் பணியே இது.

இலங்கை பல்­லின சமூகம் வாழும் ஒரு சிறிய தீவாகும். இங்கு பல்­லின மக்கள் தமது கலா­சார அடை­யா­ளங்­க­ளுடன் நாடெங்கும் ஒன்­ற­ரக்­க­லந்து வாழ்­வதைக் காணக் கூடி­ய­தாக உள்­ளது. இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்தை சமய ரீதியில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வழி நடாத்­து­வது போன்று பெரும்­பான்­மை­யாக வாழும் பௌத்த மக்­களை பௌத்த உயர்­பீ­ட­மான அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் வழி­ந­டத்­து­கின்­றன.

முஸ்­லிம்கள் உல­மாக்­களை கௌர­வித்து மரி­யாதை செய்­வது போன்று பௌத்த தேரர்­க­ளையும் கண்­ணி­யப்­ப­டுத்­து­கி­றார்கள். மரி­யாதை செய்­கி­றார்கள். அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் அமைச்­சர்­களும் பௌத்த உயர்­பீ­டத்தைச் சேர்ந்த மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்­தார்கள். அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களின் அழைப்பின் பேரி­லேயே அவர்கள் அங்கு சென்­றார்கள்.

அஸ்­கி­ரிய, மல்­வத்­து­பீ­டங்­களின் மகா­நா­யக்க தேரர்­க­ளு­ட­னான, பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சந்­திப்பின் போது முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

‘நாங்கள் அமைச்­சர்கள் 9 பேர் எமது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தது பற்றி பர­வ­லாக கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டாலும் மகா­நா­யக்க தேரர்­களும், சங்­கைக்­கு­ரிய சங்க சபையும் எமக்கு வழங்­கிய ஆலோ­ச­னை­களை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். எமது கௌர­வத்தை அவர்­க­ளுக்குத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம்’ என ரவூப் ஹக்கீம் தெரி­வித்­தி­ருந்தார்.

மகா­நா­யக்க தேரர்கள் ‘இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும், மதங்­க­ளுக்­கி­டை­யிலும் ஒற்­றுமை பேணப்­பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலை­வர்கள் வழி­காட்­டி­க­ளாக இருக்க வேண்டும். எமக்குள் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்ற பாகு­பாடு இருக்­கக்­கூ­டாது. முஸ்லிம், சிங்­கள மக்­க­ளுக்­கி­டையே நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு நாம் நடு­நி­லை­யி­லி­ருந்து தீர்வு காண­வேண்டும்’ என எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் களிடம் தெரி­வித்­தி­ருந்­தார்கள்.

இதே­வேளை இன நல்­லி­ணக்கம், ஒற்­றுமை பற்றி வலி­யு­றுத்­திய அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் சமய நிகழ்­வொன்றில் பகிரங்கமாக தெரி­வித்த கருத்­துகள் முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல பெரும்­பான்மை சமூ­கத்தின் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­னோரை கவலை கொள்­ளச்­செய்­துள்­ளது.

கண்­டி–­யட்­டி­நு­வர திய­கெ­லி­னாவ கித்­சி­ரி­மெவன், ரஜ­மகா விகா­ரையில் அவர் ஆற்­றிய உரை பௌத்த தர்­மத்­துக்கு முற்றும் மாறு­பட்­ட­தாக அமைந்­துள்­ளது. “முஸ்­லிம்கள் சிங்­கள மக்­களை அழிப்­ப­தற்கு எடுத்த செயற்­பா­டுகள் இப்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. எனது மக்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊட­கங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இப்­ப­டி­யான சிங்­கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத் துரோ­கி­களை சுதந்­தி­ர­மாக விடக்­கூ­டாது. கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என பலர் என்­னிடம் கூறி­னார்கள். அப்­படிச் செய்­யுங்கள் என நான் கூற­மாட்டேன். ஆனால் செய்­யப்­பட வேண்­டி­யது அதுதான். என அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­தி­ருக்­கின்­றமை மிகவும் ஆபத்­தா­ன­தாகும்.

மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டிய, கரு­ணையைப் போதிக்க வேண்­டிய இன நல்­லி­ணக்­கத்­தையும், தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் பலப்­ப­டுத்த வேண்­டிய பௌத்த மதத்தின் உயர்­பீடத் தலைவர் இப்­படிக் கூறு­வதை எவ­ராலும் அனு­ம­திக்க முடி­யாது. நாடு இன ரீதி­யான பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்­ப­தாக அமையும் என்­பதை ஏன் மகா­நா­யக்க தேரர் உண­ர­வில்லை என்ற கேள்வி பர­வ­லாக எழுப்­பப்­ப­டு­கி­றது. மகா­நா­யக்க தேரர், முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள், முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­லா­தீர்கள், அக்­க­டை­களில் உண­வ­ருந்­தா­தீர்கள் என்றும் சிங்­க­ள­வர்­களைக் கோரி­யி­ருப்­பது ஓர் இன­வாத எழுச்­சி­யாகும்.

ஞான­ரத்ன தேரரின் கூற்­றினை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர வன்­மை­யாகக் கண்­டித்­துள்ளார். பௌத்த தர்­மங்­க­ளையும், உயரிய சிந்தனைகளையும் தீவிர வாதத்தினை நோக்கி திசை திருப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதர்களை கல்லால் அடித்துகொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தர்களும் எண்ண மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் மதத் தலைவர்கள் இனமோதல்களைத் தவிர்ப்பவர்களாகவும், மக்களை நல்வழிப் படுத்துபவர்களாகவுமே இருக்கவேண்டுமே தவிர தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர் களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.