உடல் உள ஆற்றுப்படுத்தலில் நோன்பு

0 1,172
  • எம்.எம்.ஏ.ஸமட்

வசந்த காலத்தின் வாயிற்­ப­டிதான் நோன்பு. உள்­ளத்­துக்கும் உட­லுக்கும் ஆரோக்­கி­யத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்­புத மா மருந்தே நோன்­பாகும். நோன்பின் மகத்­து­வத்­தினால், எமது அத்­தனை உறுப்­புக்­களும் அதன் செயற்­பா­டு­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தான ஒழுங்கு முறைக்கு உள்­ளா­கின்­றன. அதன் பய­னாக உடலும் உள்­ளமும் சுத்தம் செய்­யப்­ப­டு­கி­றது. ஆக, ஒட்­டு­மொத்த வாழ்­வையும் தூய்­மைப்­ப­டுத்­து­கின்­ற­தொரு மாத­­மாக  புனித ரமழான் மாதம் நோக்­கப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய நோன்பின் மகத்­துவம் விளங்­காது, இம்­மா­தத்தின் புனிதம் தெரி­யாது, நம்மில் பலர் அறிந்தும் அறி­யா­மலும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அதிலும் சில இளை­ஞர்கள் இவ்­வாறு ரமழான் மாதத்தின் தத்­துவம் புரி­யாது அல்­லது புரிந்தும் புரி­யா­த­துபோல் செயற்­ப­டு­வதே  மன வேத­னைக்­கு­ரி­யது. கேள்­வியும் அதற்­கான பதிலும்  நம் கரங்­களில் கிடைத்தும் கூட விடை­ய­ளிக்கத் தெரி­யா­த­வர்­க­ளாக நாம் இருப்­பதை என்­ன­வென்று சொல்­வது.

உண்­மையில் நோன்பின் பண்பு அது. மனி­தனின் அடிப்­ப­டை­யான அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இச்சை, உணவு மற்றும் பானம் என்­ப­வற்­றுடன் சம்­பந்­தப்­பட்­டது.

இம்­மூன்­றையும் குறிப்­பிட்ட மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்குத் தவிர்த்­தி­ருப்­பதே நோன்­பாகும். அதிலும் குறித்த நேர­கா­லத்தில் ஆசை­களைத் தவிர்த்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும். ஆனால், அடிப்­ப­டை­யான ஆசை­களைத் தவிர்த்­தி­ருப்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.

இருப்­பினும், அது மிகப் பெரிய மனப்­போ­ராட்­டத்­துடன் சம்­பந்­தப்­பட்­டது. ஆசை­களை அடக்கி நோன்பின் புனி­தத்தைப் பாது­காப்­போ­ருக்கு வல்ல இறைவன் பல கூலி­களை வைத்­தி­ருக்­கிறான். அவற்றை அடைய வேண்­டு­மாயின் ஆசை­களை அடக்­கித்­தா­னாக வேண்டும். “நோன்பு எனக்­கு­ரி­யது அதற்­கு­ரிய கூலியை நானே வழங்­குவேன். அவன் தனது உண­வையும், பானத்­தையும், இச்­சை­யையும் விட்­டு­வி­டு­கின்றான்” என வல்ல இறை­வன் வாக்­க­ளிக்­கின்றான்.

உணர்­வு­களும் இளை­ஞர்­களும்

உணர்வைக் கட்­டுப்­ப­டுத்தி உட­லையும், உள்­ளத்­தையும் ஆற்­றுப்­ப­டுத்தும் நோன்பின் மாண்பைப் பாது­காக்கும் பொறுப்பை சுமந்த ஒவ்­வொரு முஸ்­லி­மிலும் இளை­ஞர்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றனர். ஏனெனில், இளை­ஞர்­க­ளது இயல்­புகள் உணர்­வு­க­ளாலும், ஆசை­க­ளாலும் புடம்­போ­டப்­ப­டு­கின்­றன.

ஆசை­க­ளுக்கும், உணர்­வு­க­ளுக்கும் ஆட்­படும் ஒரு சிலரின் ஈனச் செயல்கள், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டுகள், தாக்­கு­தல்கள் ஒரு சமூ­கத்தை மாத்­தி­ர­மின்றி ஒரு நாட்­டையே பாதிக்கும் என்­பதை ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் உணர்த்தி நிற்­கி­றது. ஆதலால், உணர்­வு­களை அடக்கி, ஆசை­களைக் கட்­டுப்­ப­டுத்தும் நோன்பை நோன்­பாக நோற்க வேண்­டி­ய­வர்­க­ளாக இளை­ஞர்கள் மாற வேண்டும்.

ஆசை­க­ளுக்கு அடி­மைப்­பட்டு அவ­ச­ர­மாக செயற்­ப­டு­வதை இலட்­சி­ய­மா­கவும், இலக்­கா­கவும், அதை நாக­ரி­க­மா­கவும் கரு­து­கின்­ற­வர்கள் அவற்றை அடைந்­து­கொள்ள முனை­வது அவர்­களை அத­ல­பா­தா­ளத்தில் தள்­ளி­விடும் என்­பதை உணர்ந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். உணர்­வு­க­ளுக்கும் ஆசை­க­ளுக்கும் கட்டுப்­பட்டு வாழும் ஆற்­றுப்­ப­டுத்­தலை வழங்கும் நோன்பை மகத்­து­வத்­துடன் பேணு­வது முக்­கி­ய­மாகும்.

படைத்த இறை­வனின் நினைப்­போடும், இஸ்­லா­மிய நேரான உணர்­வோடும் நமது வாழ்­நாளை கடைப்­பி­டித்து வாழும் இளை­ஞர்­க­ளுக்கு இறை­வனின் அருள் நிச்­ச­ய­முண்டு. ரமழான் மாதத்தில் உணர்­வு­க­ளையும் ஆசை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் பலத்தை ரம­ழானின் பின்­ன­ரான காலங்­க­ளிலும் கட்­டுப்­ப­டுத்தி வாழும்­போது வழி­த­வ­றிய வாழ்க்­கை­யி­லி­ருந்து நேரான வாழ்வை ஏற்­ப­டுத்தி வாழ வழி­வ­குக்கும். அந்த வாழ்க்­கையே நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் பயன்­மிக்க இளைஞர் சமு­தா­யத்தின் வாழ்க்­கை­யா­கவும் அமையும்.

ஆசை­க­ளையும் உணர்­வு­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தி ஆற்­றுப்­ப­டுத்தும் நோன்­பா­னது உடல் ஆரோக்­கி­யத்­தையும் வழங்­கு­கி­றது. உண­வுக்­கட்­டுப்­பாடும் உண­வு­க­ளி­லுள்ள பேரா­சை­யையும் தவிர்ப்­பதன் மூலம் உடல் ஆரோக்­கியம் பேணும் மா மருந்­தா­கவும் நோன்பு அமை­கி­றது. இந்­நி­லையில், பணம், பட்டம் பதவி என்று அதைத்­தேடி ஓடு­வ­தற்­காக புனித ரமழான் மாதத்­தையும் மகத்­து­வ­மிக்க நோன்­பையும் விட்­டு­விடும் நம் சகோ­தர சகோ­த­ரி­களை எவ்­வாறு நோக்­கு­வது. அல்லாஹ் அவர்­க­ளுக்கு நல்­வழி காட்­டு­வா­னாக!

புனித நோன்பின் தாற்­ப­ரியம் பற்­றியும் அது கொண்­டுள்ள விஞ்­ஞான, மருத்­துவ மற்றும் உள­வியல் தன்­மை­பற்­றியும் அன்று முதல் இன்று வரை பல்­வேறு ஆய்­வு­களும் ஆராய்ச்­சி­களும் உல­க­ளா­விய ரீதியில் பல்­வேறு தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றின் பய­னாக நோன்பின் பல மருத்­துவ குணங்கள் மருத்­துவ ஆய்­வா­ளர்­களால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நோன்பின் ஆரோக்­கியம்

உல­க­ளா­விய ரீதியில் இடம்­பெறும் இறப்­புக்­க­ளுக்கு மிக முக்­கி­ய­மாக இருப்­பது தொற்றா நோய்­க­ளெனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யிலும் தொற்றா நோய்­க­ளினால் ஏற்­படும் இறப்­புக்­களே அதிகம் எனவும் கூறப்­ப­டு­கி­றது. இதற்­கான கார­ணங்­களில் ஒன்­றாக நமது உணவுப் பழக்க முறை காணப்­ப­டு­கி­றது. நோன்பு நோற்­ப­தற்­காக நாம் உண்ணும் நேரங்கள் அந்த நேரங்­களில் உணவு உட்­கொள்­ளும்­போது உடலில் ஏற்­படும் தொழிற்­பா­டுகள் தொடர்­பாக ஆய்­வுகள் பல உண்­மை­களை வெளி­யிட்­டுள்­ளன. அவற்றை நோக்­கு­கின்­ற­போது நோன்பின் பண்­பு­களை அறி­ய­மு­டி­கி­றது.

நுரை­யீரல் அதி­கப்­ப­டி­யாக இயங்கும் நேரம் அதி­காலை 3–-5 மணி வரை­யுள்ள 2 மணித்­தி­யால நேர­மாகும். நுரை­யீ­ர­லா­னது தூங்கும் போது இயங்­கு­வதை விட விழித்­தி­ருக்­கும்­போது சிறப்­பாக இயங்­கு­வ­தாக மருத்துவ ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

நுரை­யீரல் அதி­கப்­ப­டி­யாக இயங்கும் அதி­காலை நேரத்தில் (ஸஹர் நேரத்தில்) நாம் அதிக நேரம் விழித்­தி­ருப்­பதால் நமது நுரை­யீரல் மிகுந்த புத்­து­ணர்வு பெற்று சிறப்­பாக செயற்­ப­டு­கின்­றது.

இந்த நுரை­யீரல் அதி­க­மாக இயங்கும் அதி­காலை நேரத்­தைத்தான் வல்ல இறைவன் நமக்கு நோன்பு நோற்­ப­தற்­கான நேர­மாக ஆக்கித் தந்­தி­ருக்­கிறான். இருப்­பினும் இப்­பெ­று­மதி விளங்­காத நம்மில் பலர் இந்த நேரத்தை நோன்பு காலத்­தி­லேனும் அடை­யாமல் இருக்­கி­றார்கள். அடைந்தும் வீண­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்

அத்­துடன், காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்­பிட்டுப் பழ­கிப்­போன நமது வயிறு, மண்­ணீரல், கல்­லீரல், சிறு­குடல், பெருங்­குடல் போன்­றவை ரம­ழானின் ஒரு மாத காலத்தில் நாம் உண்ணும் நேர காலத்தில் மாற்றம் ஏற்­ப­டு­கி­றது. அதி­கா­லையில் (ஸஹர் நேரத்தில்) நாம் சாப்­பி­டு­வதன் மூலம் இந்த உறுப்­புக்­களின் வழக்­க­மான இயக்க முறை­களில் ஓய்வு கிடைத்து வழக்­கத்­துக்கு மாறாக அதி­காலை நேரத்தில் சாப்­பி­டு­வதன் மூலம் அவை புத்­து­ணர்ச்சி பெற்று இயங்க ஆரம்­பிக்­கின்­றன. இதன் மூலம் இந்த உறுப்­புக்கள் நல­மா­கின்­றன என ஆய்­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

ஸஹர் நேரத்தில் தூக்கக் கலக்­கத்தில் கட­மைக்­காக உட்­கார்ந்து சுய உணர்­வுடன் நன்கு விருப்­ப­மா­னதை நன்­றாக மென்று சாப்­பி­டு­வது ஆரோக்­கி­ய­மா­னது. அவ்­வாறு சாப்­பி­டு­கின்­ற­போது அதி­க­மாகச் சாப்­பிட வேண்­டு­மென்ற ஆசை குறைந்து நன்­றாகச் சாப்­பிட்ட திருப்தி கிடைக்கும். ஆனால் சிலர் பகல் முழுதும் பட்­டினி கிடக்­கப்­போ­கிறோம் என்­றெண்ணி அள­வுக்­க­தி­க­மாக உண்டு அவஸ்­தைப்­ப­டு­வ­தையும் அறி­யா­ம­லில்லை.

வழ­மை­யான நாட்­களில் நாம் உண்ணும், குடிக்கும் உண­வு­களும் பானங்­களும் நமது உடல் சுகா­தா­ரத்­துக்கு தீங்­கி­ழைக்­கின்­ற­போ­திலும் நோன்பு காலத்தின் பகற்­பொ­ழுதில்  அவை தவிர்க்­கப்­ப­டு­வதால் அவை உடல் நலி­வ­டை­வ­தி­லி­ருந்து காப்­பாற்றி உடலை சீராக இயங்க உத­வி­ய­ளிக்­கி­றது. இந்­நே­ரத்­தில்தான் உடலின் கொழுப்­புக்கள் கரைக்­கப்­ப­டு­வ­துடன் உட­லி­லுள்ள கழி­வுகள் நீக்­கப்­ப­டு­வ­தாக மருத்­துவ ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

ஒரு மாத கால நோன்பு உடற்­க­ழி­வு­களை நீக்கி, இரைப்பை, குடல் முத­லி­ய­வற்றைப் புதுப்­பிக்­கி­றது. அவற்றின் பணிகள் சிறக்க உத­வு­கின்­றன. உடல் பருமன் குறை­வ­தற்கு வழி­யேற்­பட்டு இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்­ற­வற்­றி­லி­ருந்து உடலை நோன்பு காக்­கி­றது.

உணர்ச்­சிகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு மனி­தனுள் காணப்­படும் ‘இட்’ எனும் மிருக உணர்வு அடைக்­கப்­ப­டு­கி­றது. உணவு உண்­ப­திலும் பானம் அருந்­து­வ­திலும், உறங்கும் முறை­யிலும் ஒழுக்­கத்­தையும் கட்­டுப்­பாட்­டையும் தோற்­று­விக்­கி­றது.

பசித்­தி­ருப்­பதும் பசித்த பின்பே உண்­ணு­வதும் நலம் தரும் செயல்­க­ளாகும். இந்த வகையில் நோன்­பா­னது உட­லுக்கு மிகுந்த நலனை வழங்­கு­கி­றது. உள்­ளத்­துக்கும் அமை­தியைக் கொடுக்­கி­றது

அது மாத்­தி­ர­மின்றி, இரத்த அழுத்தம், மார­டைப்பு, நீர­ிழிவு போன்ற நோய்­க­ளுக்­கான நிவா­ரணி நோன்­பென அமெ­ரிக்­கர்கள் அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். நோன்பு உடல் கழி­வு­களை நீக்க உத­வு­கி­றது. தசை­க­ளுக்கு வலு­வூட்­டு­கி­றது. உட­லி­ய­க் கத்த்தை சம­நி­லைப்­ப­டுத்­து­கி­றது.

ஏறக்­கு­றைய 14 மணித்­தி­யாலம் பசித்­தி­ருப்­பதன் மூலம் உடற் கலங்கள் புத்­து­ணர்வு பெறு­கின்­றன, சிதை­வுகள் சீர் செய்­யப்­ப­டு­கின்­றன. இந்­த­வ­கையில் நோன்­பா­னது உட­லுக்கும் உள்­ளத்­துக்கும் ஆரோக்­கி­யத்தை அள்ளி வழங்­கு­கி­றது.

‘நோயுற்­ற­வ­ரி­ட­மி­ருந்து உணவை நீக்கி விடுங்கள். அப்­போது பட்­டினி கிடப்­பது நோயுற்­ற­வ­ரல்ல அவ­ரது நோயே’ என அமெ­ரிக்க மருத்­துவர் டியூவே கூறி­யுள்ளார்.

மற்­று­மொரு அமெ­ரிக்க மருத்­து­வ­ரான ஹாஸ் கூறு­கையில், “நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்­துவம். மிகத் தொன்­மை­யான உல­க­ளா­விய நோய் நிவா­ரணி, என் வாழ்வில் ஒரு சமயம் நான் நோயுற்ற வேளையில் உணவைத் தவிர்ந்­தி­ருந்­த­தனால் என் உடல் நல­ம­டைந்­தது. புதிய சக்தி உடலில் பாய்­வதை உணர்ந்தேன். உட­லி­யக்­கத்தில் ஓர் உத்­வேகம் பளிச்­சி­டு­வ­தையும் உணர்ந்து கொண்டேன். ஆரோக்கியம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது என்று அவர் அனுபவத்தின் வாயிலாக நம் மீது கட்டாயமாகக் கடமையாக்கப்பட்ட நோன்பின் மருத்துவப் பண்புகள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

இவ்வாறு பல விஞ்ஞான மருத்துவ, உளவியல் பண்புகளைக் கொண்ட புனித ரமழான் மாதம் நம்மை அடைந்தும் அதன் மகத்துவம் புரியாமல் அழிந்து போகும் இந்த உலகத்துக்காகவும் மரணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் இவ்வாழ்க்கைக்காகவும் நாம் எத்தனையோ தியாகங்களை புரிகின்றோம். ஆனால், நமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நோன்பு வைத்திருக்கிறது. அதன் மகத்துவத்தைப் பேண, அதன் மருத்துவத்தை அடைந்துகொள்ள நம்மில் பலர்  மறந்துள்ள நிலையில் அதன் உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்ள, அறிந்துகொள்ள  விரும்பாத நிலையில் பிற மதத்தவர்கள் அதன் மகத்துவம் பற்றிப் பேசுவதை கண்டு நாம் வெட்கித் தலைகுனிவதா அல்லது இம்மாதத்தின் பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு நம்மை தியாகித்துக்கொள்வதா? என்ற கேள்வி ஒவ்வொரு முஸ்லிமும் தங்களுக்குள் எழுப்பி அதற்கான விடைகாண வேண்டிய காலமாக இந்த ரமழான் மாதம் விளங்குகிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.