மாவனெல்லை சிலை தகர்ப்பு விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த சாதிக் , ஷாஹித் கைது

தற்கொலை குண்டுத் தாக்குதலுடனும் தொடர்பு என சந்தேகம்

0 648

மாவ­னல்லை, குரு­ணாகல் பொது­ஹர சிலை உடைப்பு விவ­கா­ரங்கள் மற்றும் கடந்த வாரம் நாட்டை உலுக்­கிய தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர்­களை கம்­பளை பொலிஸார் நேற்று அதி­காலை கைது செய்­துள்­ளனர்.

கடந்த 5 மாதங்­க­ளாக தலை­ம­றை­வாக வாழ்ந்­து­வந்த மாவ­னெல்லை தெல்­க­ஹ­கொடை பகு­தியைச் சேர்ந்த முஹம்மத் இப்­றாஹிம் சாதிக் அப்­துல்லாஹ் மற்றும் முஹம்மத் இப்­றாஹிம் சாஹித் அப்­துல்லாஹ் ஆகிய இரு­வ­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஏலவே கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மௌலவி இப்­ரா­ஹீமின் புதல்­வர்­க­ளாவர்.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேனொன்று பய­ணிப்­ப­தாக அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதி­காரி சூலானி வீர­ரட்­ன­வுக்கு கிடைக்கப் பெற்ற இர­க­சிய தகவல் ஒன்­றுக்­க­மைய தொலை­பே­சியை மையப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தலில் குறித்த வேன் நாவ­லப்­பிட்டி கொரக்­கோயா பொல்­வ­து­ரையில் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவ்­வா­க­னத்தில் சார­தி­யாக செயற்­பட்­ட­வ­ரென சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட 23 வய­து­டைய இளைஞர் ஒரு­வ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­னை­க­ளை­ய­டுத்து, தனது வேனில் பயணம் செய்த இரு­வ­ரையும் கம்­பளை நகரில் பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில் இறக்­கி­விட்­ட­தாக தகவல் கிடைக்கப் பெற்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து, சந்­தேக நபர்கள் இரு­வரும் கம்­பளை சாலி­ய­வல விகா­ரைக்கு அருகில் பூட்­டப்­பட்ட வர்த்­தக நிலை­ய­மொன்­றினுள் இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைக்கப் பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து வர்த்­தக நிலை­யத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மூன்றாம் மாடியில் மறைந்­தி­ருந்த நிலையில் இரு சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­தனர்.

இவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­னை­க­ளுக்­க­மைய சந்­தேக நபர்கள் மாவ­னல்லை குரு­ணாகல் பொது­ஹர சிலை உடைப்பு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் ஒருவர் சிரி­யா­வுக்கு சென்று வந்­தவர் என்றும் இச்­சந்­தேக நபர்­களில் ஒருவர் கம்­ப­ளையில் பிர­பல பாட­சா­லையில் சில மாதங்கள் தொண்டர் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்­துள்ளார் என்றும் தெரிய வந்­துள்­ளது.

இவர்கள் கம்­ப­ளையில் உள்ள வீடொன்றின் மூன்றாம் மாடியில் இர­க­சிய வகுப்­புக்­களை நடாத்தி வந்­துள்­ளனர் என்றும் தெரிய வந்­துள்­ளது.
இச்­சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து வேன் ஒன்றும் இரா­ணுவ சீரு­டை­க­ளுக்கு ஒப்­பான உடை­களும் சமயப் புத்­த­கங்கள், சாவிப் பை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இச்சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி புரிந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றிவளைப்பை கம்பளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.