மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்

0 517

மாகா­ண­சபைத் தேர்தல் விரைவில் நடாத்­தப்­படும் என்று கூறியே அர­சாங்கம் காலத்தை நகர்த்தி வரு­கி­றது. ‘மாகாண சபைத் தேர்­தல்கள் சட்­டத்தில் திருத்­தங்கள் உரிய காலத்தில் மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் தேர்­தலை நடாத்த முடி­யாத நிலை ஏற்­படும்’ என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­தோடு ‘மாகா­ண­சபைத் தேர்­தலை எந்தச் சட்­டத்தின் கீழ், புதிய முறை­மையின் கீழா அல்­லது பழைய முறை­மையின் கீழா நடத்த வேண்டும் என உயர் நீதி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கோரி­யுள்ளார். தேர்­தலை எந்த முறை­மையின் கீழ் நடாத்­து­வது என சட்­டப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யி­ருப்­ப­தாலே இதனைத் தெளி­வு­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­க உயர்­நீ­தி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் ஜனா­தி­ப­திக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

ஒன்­பது மாகா­ண­ச­பை­களில் 6 மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் எப்­போதோ காலா­வ­தி­யா­கி­விட்­டது. அம்­மா­கா­ணங்கள் தற்­போது ஆளு­நர்­களின் அதி­கா­ரத்தின் கீழ் இயங்­கி­வ­ரு­கின்­றன. ஏனைய மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் இன்னும் சில மாதங்­களில் காலா­வ­தி­யா­க­வுள்­ளன.

மாகா­ண­சபை தேர்தல் சட்­டத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திக­திக்கு முன் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் மாத்­தி­ரமே எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் தேர்­தலை நடாத்த முடியும்’ என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் சட்­டத்தின் கீழ் புதிய கலப்பு முறை­மையில் தேர்­தலை நடாத்­து­வ­தென்றால் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்கை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட வேண்டும். ஆனால் மீளாய்வு அறிக்கை இது­வரை சமர்ப்­பிக்கப் பட­வில்லை. இன்றேல் பழைய முறை­மையின் கீழ் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகா­ண­ச­பைகள் தேர்தல் சட்­டத்தின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் 2/3 பெரும்­பான்­மை­யுடன் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும்.

ஆனால் இதில் எந்த ஏற்­பா­டு­களும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு – செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்­புடன் பாரா­ளு­மன்றம் ஒரு­மாத காலம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. மே மாதம் முதல் வாரத்­திலே பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது. அதன் பின்பு மாகா­ண­சபைத் தேர்தல் திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் இவ்­வ­ரு­டத்தில் மாகா­ண­சபைத் தேர்தல் நடத்­து­வது சாத்­தி­யப்­ப­டாது.

பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தான கட்­சி­க­ளான ஸ்ரீல.சு கட்சி மற்றும் ஐ.தே.கட்சி என்­பன மாகாண சபைத்­தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வதை எதிர்ப்­ப­தாகத் தெரி­வித்­தாலும் தேர்­தலை விரைவில் நடாத்­து­வ­தற்­கான சட்ட திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­யையும் அவை முன்­னெ­டுக்­க­வில்லை. இதிலிருந்து மாகாண சபைத் தேர்­தலை எதிர்­கொள்ள இக்­கட்­சிகள் தயா­ராக இல்லை என்­பது தெளி­வா­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தா­ன­மாகக் கொண்­டுள்ள பொது­ஜன பெர­முன மாத்­திரமே எந்தத் தேர்­த­லையும் எதிர்­கொள்­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்து வரு­கி­றது.

மாகா­ண­சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறை­மையின் கீழேயே நடாத்­த­வேண்டும் என அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளார்கள். எதிர்க்­கட்சித் தலை­வரும் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

மீண்டும் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு விசேட பாராளுமன்ற அமர்வொன்றின் மூலம் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.