2019 ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு பூர்த்தி

0 506

ஏ.ஆர்.ஏ.பரீல்

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் பயணிகளின் தெரிவு பதி­வுகள் அனைத்தும் பூர­ண­மாகி விட்ட­தா­கவும் ஹஜ் கட­மைக்­கான மேன்முறையீடுகள் எதுவும் இதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெ­னவும் அரச ஹஜ் குழுவின் பதில் தலைவர் எம்.எச்.எம். பாஹிம் தெரிவித்தார்.

ஹஜ் தொடர்­பான விழிப்­பூட்டும் கருத்­த­ரங்­குகளில் கலந்து கொள்­ளாத ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இம்­மாத இறு­தியில் ஹஜ் தொடர்­பான கருத்­த­ரங்­கு­களை நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

ஹஜ் செயற்­பா­டுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக தெரிவு செய்­துள்ள ஹஜ் முக­வர்­க­ளுடன் உடன்­ப­டிக்­கை­யினைச் செய்து கொள்­ள­வேண்டும். அதில் ஹஜ் கட்­டணம், மக்­கா­விலும் மதீ­னா­விலும் தங்­கு­மிட வச­திகள், ஹஜ் கட­மையின் கால எல்லை என்­பன விப­ர­மாக உள்­ள­டக்கிக் கொள்­ள­வேண்டும்.

உப முக­வர்கள் ஊடாக ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உப முக­வர்­க­ளுடன் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஏதும் உடன்­ப­டிக்­கை­களைச் செய்து கொண்டால் அதற்கு அரச ஹஜ் குழு பொறுப்­பாக மாட்­டாது.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு கருத்­த­ரங்­குகள், விழிப்புணர்வு மாநாடுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.