கொழும்பு குப்பை பிரச்சினைக்கு தீர்வே அருவாக்காடு! கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தெளிவின்மையினாலேயே எதிர்க்கின்றனர்

பாராளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

0 754

கொழும்பில் சேரும் குப்பை பிரச்­சி­னைக்கு இன்னும் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயுள்­ளதால் வெளி­நாட்டு உத­வி­யுடன் புத்­தளம் அரு­வாக்­காடு பிர­தே­சத்தில் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

எமது நாட்டில் இருக்கும் பிரச்­சி­னைதான் எந்த அர­சாங்­க­மா­னாலும் குப்­பை­களை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு பிர­தே­சத்­துக்கு கொண்டு செல்­லும்­போது அந்த பிர­தேச மக்கள் எதிர்ப்பு தெரி­விப்­ப­தாகும். இதற்கு அனைத்து மத­கு­ரு­மாரும் தலை­மைத்­துவம் வழங்­கு­வார்கள். அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இது இடம்­பெ­று­கின்­றது. நவீன தொழில்­நுட்­பங்­களைக் கொண்டு குப்­பை­களை சுழற்சி செய்­வது தொடர்­பாக மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு இல்­லா­மையே இந்த எதிர்ப்­புக்கு ஒரு கார­ண­மாகும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் ஜனா­தி­ப­தியின் கீலுள்ள பாது­காப்பு அமைச்சு மற்றும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு, உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

கொலன்­னாவ குப்பை மேடு சரிந்து விழுந்த பின்னர் அர­சாங்கம் என்ற வகையில் குப்பை பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்து வந்தோம். கொழும்பில் சேரும் குப்பை பிரச்­சி­னைக்கு இன்னும் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயுள்­ளதால் வெளி­நாட்டு உத­வி­யுடன் புத்­தளம் அரு­வாக்­காடு பிர­தே­சத்தில் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

எமது நாட்டில் இருக்கும் பிரச்­சி­னைதான் எந்த அர­சாங்­க­மா­னாலும் குப்­பை­களை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு பிர­தே­சத்­துக்கு கொண்­டு­செல்­லும்­போது அந்த பிர­தேச மக்கள் எதிர்ப்பு தெரி­விப்­ப­தாகும். இதற்கு அனைத்து மத­கு­ரு­மாரும் தலை­மைத்­துவம் வழங்­கு­வார்கள்.

அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இது இடம்­பெ­று­கின்­றது. நவீன தொழி­நுட்­பங்­க­ளைக்­கொண்டு குப்­பை­களை சுழற்சி செய்­வது தொடர்­பாக மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு இல்­லா­மையே இந்த எதிர்ப்­புக்கு ஒரு கார­ண­மாகும்.

அதனால் அர­சாங்கம் என்ற வகையில் குப்பை முகா­மைத்­துவம் செய்­வது தொடர்­பாக பொது தீர்­மானம் ஒன்­றுக்கு செல்­ல­வேண்­டிய நிலை இருக்­கின்­றது. அது­தொ­டர்­பாக கொள்கை தீர்­மானம் ஒன்றை எடுக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அப்­போது நாட்­டுக்­காக, எதிர்ப்­புகள் வந்­தாலும் தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. குப்­பை­களை அகற்றும் போது ஏற்­ப­டு­கின்ற எதிர்ப்­புகள் கார­ண­மா­கவே அந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாமல் இருக்­கின்­றது. அதனால் குப்பை அகற்­று­வ­தற்கு தேசிய வேலைத்­திட்டம் ஒன்று தேவை­யாக இருக்­கின்­றது.

அத்­துடன் குப்­பை­களை அகற்றும் பொறுப்பு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். என்­றாலும் அந்த மன்­றங்­க­ளுக்கு குப்­பை­களை அகற்றத் தேவை­யான இயந்­தி­ரங்கள் வாக­னங்கள் இல்லை. அதனால் குப்­பை­களை வேறு பிர­தே­சங்­க­ளுக்கு முறை­யாக அகற்ற முடி­யாத பிரச்­சினை இருக்­கின்­றது. அதனால் மாகாண சபை அமைச்­சி­னூ­டாக இந்த மன்­றங்­க­ளுக்கு தேவை­யான இயந்­திர உப­க­ர­ணங்­களை பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும் மகா­வலி அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்தின் கீழ் மொர­ஹா­கந்த , களு­கந்த திட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வந்­துள்ளோம். அத்­துடன் உமா ஓயா திட்­டத்­தையும் இந்த வரு­டத்­திற்குள் முடி­வுக்கு கொண்டு வருவோம். மகா­வலி வேலைத்­திட்­டத்தில் காணி வழங்கும் நட­வ­டிக்­கை­களில் முறை­கே­டுகள் இடம்­பெ­று­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. எவ்­வா­றா­யினும் காணி­களை வழங்கும் போது அர­சியல் ரீதியில் அதனை செய்ய முடி­யாது. காணி இல்­லாத, விவா­க­மான, பிள்­ளைகள் இருக்­கின்ற, வழங்­கப்­படும் புள்­ளிகள் போன்ற முறை­மை­களை பின்­பற்­றியே அது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. எந்­த­வொரு அர­சியல் வாதி­களின் தேவை­க­ளுக்கும் ஏற்றால் போன்று எந்த பட்­டி­ய­லையும் தயா­ரிக்க முடி­யாது. எந்த வகை­யிலும் ஊழல் மோச­டிகள் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தனை தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

அத்­துடன் பாது­காப்பு அமைச்சு தொடர்­பாக கதைக்கும் போது முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் நாட்­டுக்­காக பாரிய பங்­க­ளிப்பை வழங்­கு­கின்­றனர். வடக்கு அர­சி­யல்­வா­திகள் படை­யினர் தொடர்பில் எந்த நிலைப்­பாட்டில் இருந்­தாலும் வடக்கில் சாதா­ரண மக்கள் இரா­ணு­வத்­தி­ன­ருடன் நெருங்கி பழ­கு­கின்­றனர். அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்­பட்ட போது முப்­ப­டை­யி­னரும் அவர்­க­ளுக்கு உத­வினர். முப்­ப­டை­யி­ன­ருக்கும் வளங்கள் தொடர்­பான குறை­பா­டுகள் இருக்­கின்­றன. இவற்றை தீர்க்க நட­வ­டிக்கை எடுப்போம்.

அத்­துடன் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பேர் இருக்­கின்­றனர். இவர்­களுள் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் அடங்­கு­கின்­றனர். இவர்கள் போதைப் பொருளை ஒழிப்­ப­தற்­காக பாரிய பங்­க­ளிப்பை செய்­கின்­றனர். புதிய தொழில்­நுட்பம் இல்­லாத நிலை­யிலும் இவர்கள் அந்த பணி­களை செய்­கின்­றனர். திற­மையின் மூலமே அதனை அவர்கள் முன்­னெ­டுக்­கின்­றனர். போதைப்­பொ­ருளை கண்­டு­பி­டிக்க நவீன தொழில்­நுட்­டபம் எமக்­கில்லை. நவீன தொழில்­நுட்ப இயந்­தி­ரங்கள் இருக்கும் நாடு­களில் இந்த பிரச்­சினை இல்லை. அதனால் நாங்­களும் அவ்­வா­றான நவீன தொழில்­நுட்ப இயந்­தி­ரங்­களை கொள்­வ­னவு செய்ய இருக்­கின்றோம். இதே­வேளை பொலிஸ் திணைக்­க­ளத்தின் பணி­களை கௌர­விக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. பொலிஸ் சட்ட திட்­டங்­களை மாற்­றி­ய­மைக்­கவும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை சுற்­றாடல் , மகா­வலி இரா­ஜாங்க அமைச்சராக மான்னப் பெரும இருப்பதுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜேவர்தன இருக்கின்றார். இவர்கள் இருவரும் நேர்மையானவர்கள். சிறந்த அரசியல்வாதிகள். எனது கொள்கைக்கு பொருத்தமானவர்களே எனக்கு கிடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் மிகவும் கஷ்டப்பட்டே கண்டுபிடித்தேன். நான் அவர்களுக்கு எனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளேன். அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதால்தான் இதனை மேற்கொண்டு செல்ல முடியுமாக இருக்கின்றது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.