சமூகத்தின் பிரச்சனைகளை சர்வதேசமயப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு போதாது

1 974

இலங்கை முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் முஸ்லிம் நாடுகள் உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­துக்கு  தெளி­வு­ப­டுத்தி வரு­கின்றோம் என இலங்கை சமூ­கத்­திற்­கான ஐரோப்­பிய நிலை­யத்தின் பொதுச்­செ­ய­லாளர் முயீஸ் வஹாப்தீன் தெரி­வித்தார்.

இந்த விட­யத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் பங்­க­ளிப்பு போது­மா­ன­தாக இல்லை என்றே கூற­வேண்டும். அவர்கள் தமக்கு தேவை­யான வாக்­கு­வங்­கியை பலப்­ப­டுத்திக் கொள்ளும் வகை­யி­லேயே இந்த விட­யத்தில் செயற்­ப­டு­கின்­றனர். இதுவும் ஒரு கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்­க­வேண்டும். அர­சாங்­கத்­துடன் பேரம் பேசு­கின்ற வலி­மை­களை அவர்கள் பெற­வேண்டும்  என்றும்  அவர் குறிப்­பிட்டார். ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக வந்­துள்ள முயீஸ் வஹாப்தீன் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்தார். அவ­ரு­டனான நேர்­காணல் வரு­மாறு:

நேர்­காணல் – ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்

 

Q – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பாளவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: 15 பக்­கங்­களைக் கொண்ட ஆணை­யா­ளரின் இந்த அறிக்­கையில் பல பரிந்­து­ரைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அங்­கத்­துவ நாடுகள், ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் இலங்கை அர­சாங்கம் ஆகிய தரப்­புக்கள் செய்­ய­வேண்­டிய பணிகள் தொடர்­பாக பரிந்­து­ரைகள் காணப்­ப­டு­கின்­றன. கடந்த வருடம் மார்ச் மாதம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்டி மாவட்­டத்தில் கல­வரம் இடம்­பெற்­றது. அது தொடர்­பாக இந்த அறிக்­கையின் 58,59,60 ஆவது பந்­தி­களில் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது ஒரு முக்­கி­ய­மான அம்­ச­மாகும். அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­ட­துடன் ஐ.நாவின் இந்த நட­வ­டிக்­கைகள் நின்­று­வி­டக்­கூ­டாது. அது தொடர்பில் நாங்கள் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள், முஸ்லிம் நாடுகள் போன்­ற­வற்­றுடன் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்.

Q – நீங்கள் தொடர்ச்சியாக இலங்கை முஸ்லிம்களின் நெருக்கடிகள் தொடர்பில் இவ்வாறான தெளிவுபடுத்தும் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?

பதில்: கடந்த சில வரு­டங்­க­ளாக இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் நட­வ­டிக்­கைகள், இன­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கொண்டு வரு­கிறோம். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடக்கம் இறு­தி­யாக நடை­பெற்ற நடவடிக்­கைகள் தொடர்­பா­கவும் நாம் இந்த செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­கின்றோம். கண்டி கல­வ­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்­களால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சாங்கம் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்க அந்த அசம்­பா­விதம் நடந்­தே­றி­யது. அது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

Q – முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் செயற்படும்விதம் போதுமானதாக இருக்கின்றதா?

பதில்: போது­மா­ன­தாக இல்லை என்றே கூற­வேண்டும். அவர்கள் தமக்குத் தேவை­யான வாக்­கு­வங்­கியை பலப்­ப­டுத்திக் கொள்ளும் வகை­யி­லேயே இந்த விட­யத்தில் செயற்­ப­டு­கின்­றனர். இதுவும் ஒரு கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்­க­வேண்டும். அர­சாங்­கத்­துடன் பேரம் பேசு­கின்ற வலி­மை­களை அவர்கள் பெற­வேண்டும். உதா­ர­ண­மாக கடந்த அர­சியல் நெருக்­கடி காலத்தின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு   முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்­டது. அர­சாங்­கத்­துடன் அவர்கள் பேரம் பேசி சரி­யான முறையில்  செயற்­பட்­டார்கள். அந்த அடிப்­ப­டையில் முஸ்லிம் அமைப்­புக்­களும் கட்­சி­களும் உறு­தி­யான ஒரு நிலைப்­பாட்­டுக்கு வந்து துணி­க­ர­மாக சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும்.

Q – இலங்கையிலிருந்து தமிழ் மக்களின் சார்பில் அதிகமான பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு வந்து செல்கின்றனர். அவர்களுடன் இணைந்து நீங்கள் செயற்பட்டு வருகின்றீர்களா?

பதில்: கடந்த கூட்டத் தொட­ரி­லி­ருந்து நான் தமிழ் தலை­மை­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றேன். கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், அனந்தி சசி­தரன், சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட தமிழ் தரப்பு தலை­மை­க­ளுடன் நான் எங்­க­ளது விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­கின்றேன். இதனை எதிர்­கா­லத்தில் மேலும் விஸ்­த­ரிக்க எதிர்­பார்க்­கின்றேன். இன்னும் பல அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­பட எதிர்­பார்க்­கின்றேன். புலம்­பெயர் அமைப்­புக்­க­ளு­டனும் இணைந்து செயற்­பட விரும்­பு­கின்றோம். அதற்­கான திட்­ட­மி­டல்­களை முன்­னெ­டுக்­கின்றோம்.

Q – இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவானது யுத்த காலத்தில் சீர்குலைந்தது. தற்போது மீண்டும் அது கட்டியெழுப்பப்படுகின்றது. ஆனாலும் கிழக்குபோன்ற இடங்களில் சில அசம்பாவிதங்கள் முரண்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளது உற­வா­னது மிகவும் பல­மாக இருக்­க­வேண்டும். அப்­ப­டித்தான் அது கடந்த காலங்­களில் இருந்­தது.   திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலோ அல்­லது யுத்தப் பிரச்­சி­னை­க­ளி­னாலோ இந்த உறவில் சிறு விரிசல் ஏற்­பட்­டது. அது தொடர்ந்தும் விரி­வ­டைந்து சென்­று­விட்­டது. அந்த உறவு சிறப்­பாக பல­ம­டை­ய­வேண்டும். யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்தும் நாம் நல்­லி­ணக்கம் குறித்து பேசு­கின்றோம். எனவே தமிழ் – முஸ்லிம், சிங்­கள உறவைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலமே ஒரு சிறந்த நாட்டை உரு­வாக்க முடியும். தமிழ் – முஸ்லிம் உற­வா­னது மிகவும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும். ஒரே மொழியைப் பேசக்­கூ­டிய தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு நிரந்­தரத் தீர்வை நோக்கிச் செல்­வது அடுத்த கட்ட அர­சியல் நகர்­வாக அமை­ய­வேண்டும்.

Q – உங்கள் அமைப்பு பிரான்ஸை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் உங்கள் அமைப்பின் செயற்பாட்டை விஸ்தரிப்பீர்களா?

பதில்: சில பிர­தி­நி­தி­களை அங்கு நிய­மித்து செயற்­பட்டு வரு­கின்றோம். அங்கு இடம்­பெ­று­கின்ற விட­யங்கள் தொடர்­பான தக­வல்­களை பெற்று வரு­கின்றோம். பாரிய அள­வி­லான வேலைத்­திட்­டங்­களை நாங்கள் அங்கு இன்னும் ஆரம்­பிக்­க­வில்லை. எமது அமைப்பு நான்கு வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றது. எதிர்­வரும் காலங்­களில் எமது பணி­களை இலங்­கையில் விஸ்­த­ரித்து அர­சியல் கட்­சிகள், அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான திட்­டங்­களை உரு­வாக்கி வரு­கின்றோம்.

Q – கடந்த முறை நடைபெற்ற ஜெனிவா கூட்டத் தொடரின் போது வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் சிலர் இங்கு வந்திருந்தார்கள். ஆனால் இம்முறை யாரும் வரவில்லையே?

பதில்: எதிர்­வரும் காலங்­களில் நாங்கள் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய இருக்கிறோம். காணிப்பிரச்சினை உள்ளது.

புத்தளத்தில் குப்பை பிரச்சினை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தளத்தில் முஸ்லிம் மக்கள் மட்டும் வாழவில்லை. மாறாக தமிழ், சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள்.

இந்நிலையில் கொழும்பு குப்பைகளை அங்கு கொண்டு சென்று கொட்டுவது அந்த மக்களை ஒடுக்கும் செயற்பாடாகவே தெரிகின்றது. அந்தப் பிரதேச மக்கள் பாரிய அளவில் இதனை எதிர்த்தும் அரசாங்கம் இதனை வலுக்கட்டாயமாக செய்கின்றது என்றால் அது பாரிய கேள்விக்குறியாகவே அமைகின்றது.

இது தொடர்பிலும் நாங்கள் செயற்படவிருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் சம்பந்தமான விசேட அறிக்கையாளரிடம் இது தொடர்பாக அறிக்கைகளையும் தகவல்களையும் பரிமாறி வருகின்றோம்.
-Vidivelli

1 Comment
  1. எதிர்கால திசை காட்டும் மிக முக்கியமான பேட்டி. இலங்கை சமூ­கத்­திற்­கான ஐரோப்­பிய நிலை­யத்தின் பொதுச்­செ­ய­லாளர் முயீஸ் வஹாப்தீன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆதரவும்.

Leave A Reply

Your email address will not be published.