கல்முனைக்கான தீர்வு

0 779
  • எம்.எம்.ஏ.ஸமட்

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­மை­யைத்தான் தென்­கி­ழக்கின் முக­வெற்­றிலை என வர்­ணிக்­கப்­படும் கல்­மு­னையில் காண முடி­கி­றது. கல்­மு­னையின் தெற்கே சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி சபை தேவை­யென்ற போராட்டம்  ஒரு­புறம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­வேளை கல்­மு­னையின் வடக்கே தமிழ் உப பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­பட வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தரப்­புக்­க­ளி­லி­ருந்து ஏக­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நி­லை­யில், இலங்­கையில் எந்­த­வொரு பிர­தே­சத்­திலும் இன ரீதி­யாக பிர­தேச செய­ல­கங்கள் பிரிக்­கப்­பட்டு செயற்­ப­டு­வ­தில்லை. ஆனால், கல்­மு­னையில் மாத்­திரம் இவ்­வாறு இன­ரீ­தி­யான செய­லக பிரி­வுகள்  உரு­வாக்­கப்­பட்டு நிர்­வாக நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வதைக் காணலாம். இந்­நி­லை­யில்தான், இவ்­விரு விட­யங்­களும் இப்­பி­ர­தே­சத்தின் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இவ்­வி­ட­யங்கள் தேசிய அர­சி­ய­லிலும் செல்­வாக்கு செலுத்­து­வ­தையும் நோக்க முடி­கி­றது.

தனிச் சபையும் தனிச் செய­லக நிர்­வாக தர­மு­யர்வும்

4,726 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்ட தற்­போ­தைய கல்­முனைத் தொகு­தி­யா­னது 106,780 மக்கள் தொகை­யையும் 74,946 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ளது. கல்­முனை முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரிவு, கல்­முனை தமிழ் உப­பி­ர­தேச செய­லகப் பிரிவு மற்றும் சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகப் பிரிவு ஆகிய நிர்­வாக பிரி­வு­களைக் கொண்­ட­தாக கல்­முனைத் தேர்தல் தொகுதி உள்­ளது.

2012 ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம், கல்­முனை முஸ்லிம் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவின் 29 கிராம சேவகர் பிரி­வு­களும் 10,459 குடும்­பங்­க­ளையும் 29,094 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன், சிங்­க­ள­வர்கள் 124 பேரையும் இலங்கைத் தமி­ழர்கள் 66 பேரையும் இந்­தியத் தமிழர் 8பேரையும்  இலங்கை முஸ்­லிம்கள் 44,306 பேரை­யு­மாக 44,509 மக்கள் தொகையைக் கொண்­டுள்­ளது.

கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லகப் பிரிவின் 29 கிராம சேவகர்  பிரி­வு­களும் 7,533 குடும்­பங்­க­ளையும் 20,099 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன், 231 சிங்­க­ள­வர்­க­ளையும்  26,564 இலங்கைத் தமி­ழர்­க­ளையும், 50 இந்­தியத் தமி­ழர்­க­ளையும் 2376 இலங்கை முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்­டுள்­ளது.

சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லப்­பி­ரிவின் 17 கிராம சேவகர் பிரி­வு­களும் 6,081 குடும்­பங்­க­ளையும் 16,936 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன் 25,389 முஸ்­லிம்­களை உள்­ள­டக்­கிய 25,412 மக்கள் தொகையை கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில். 1993ஆம் ஆண்டு முதல் கல்­முனை பிர­தேச உப அலு­வ­ல­க­மாக இயங்கும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­மாறு காலத்­திற்குக் காலம் தமிழ் அர­சி­யல்­வா­திகள் முதல் சிவில் சமூக அமைப்­புக்கள் உட்­பட பலர் கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றன. அவ்­வப்­போது இவ்­வி­டயம் பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யிலும் பேசப்­பட்டு வந்­தாலும் கடந்த சில நாட்­க­ளாக இவ்­வி­டயம் வீரியம் பெற்­றி­ருப்­பதை வெளி­வரும் அறிக்கைச் சமர்கள், பரஸ்­பர குற்­றச்­சாட்­டுக்கள் மூலம் அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

அறிக்கை சமர்­களும் வர­லாற்றுப் பின்­ன­ணியும்

“கல்­மு­னையைத் துண்­டாடி புதிய பிர­தேச செய­லகம் அமைக்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. அது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு  உறுப்­பி­னர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். கல்­மு­னையில் புதிய பிர­தேச செய­லகம் தொடர்­பாக ஏற்­க­னவே பேசப்­பட்­ட­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும்  இணைந்து இணக்­கப்­பாட்­டுக்கு வர வேண்­டு­மெனப் பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் தற்­கால அரசின் நிலையைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு  கூட்­ட­மைப்பு கல்­மு­னையை  துண்­டாட முயற்­சிக்­கி­றது.

இது கல்­மு­னையில் தமிழ் முஸ்லிம் ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் செயற்­பா­டாகும்.  “கல்­முனைப் பிர­தேச செய­லகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முதலில் எங்­க­ளுடன் கலந்­து­ரை­யாட முன்­வர வேண்டும். அவ்­வா­றில்­லாமல் அர­சியல் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி பிர­த­ம­ருக்கு அழுத்தம் கொடுக்க முற்­பட்டால் நாங்­களும் அழுத்தம் கொடுப்போம்” என இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இரா­ஜாங்க அமைச்­சரின் இப்­பேச்சு தமிழ் தரப்­பி­லி­ருந்து எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யி­ருந்­ததை ஊடக அறிக்­கைகள் மூலம்  காண முடிந்­தது. “கல்­முனை வடக்குப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு பிர­தமர் உறு­தி­ய­ளித்­துள்ள நிலையில், அதனைத் தடுப்­ப­தற்கு  ஹரிஸ் எம்.பி யார்? கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில்  பிர­தமர் இதற்­கான வாக்­கு­று­தியைக் கொடுத்­தி­ருந்தார். எனினும், வடக்கு பிர­தேச செய­ல­கத்தை பிரிக்கக் கூடாது  என ஹரிஸ் எம்.பி. தெரி­விந்­தி­ருந்தார். இது தமிழ் மக்கள் மத்­தியில் மிகவும் மன வேத­னைக்­கு­ரிய விட­ய­மா­கும” என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர். கோடீஸ்­வரன் வரவு செல­வுத்­திட்­டத்தின் 3 ஆவது வாசிப்­பின்­போது குறிப்­பிட்­டுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கைச் சமர்கள் இடம்­பெற்­று­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. “கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கத்தை சகல அதி­கா­ரங்­களும் கொண்ட முழு நிறை­வான பிர­தேச செய­ல­க­மாக  ஓரிரு தினங்­க­ளுக்குள் தற்­போ­தைய அர­சாங்கம் தர­மு­யர்த்தி தராத பட்­சத்தில் அரசின் வரவு செல­வுத்­திட்­டத்தை தோல்­வி­யடைச் செய்­யுங்கள் என அம்­பாறை மாவட்ட சிவ­நெறி அறப்­பணி மன்றம் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில், “கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்­வ­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களே குறுக்­கீ­டா­க­வுள்­ளனர்” என ஈழ மக்கள் புரட்­சி­கர  விடுலை முன்­ன­ணியின் அமைப்­பாளர் இரா­சையா குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இச்­சந்­தர்ப்­பத்தில், “ஒன்­றாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களை பிரிப்­ப­தற்கு சில தரப்­பினர் வேண்­டு­மென்றே  முனை­கி­றார்கள்” என தேசிய காங்­கி­ரஸின்  தலைவர் ஏ.எல்.எம். அதா­வுல்லா குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இவ்­வாறு இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கை சமர்கள் இடம்­பெற்று வரு­கின்ற வேளை “கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தை நிலத்­தொ­டர்­பற்ற ரீதியில் பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­தாமல்  இரு சமூ­கமும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் எல்லை மீள்­நிர்­ணயம் செய்­யப்­பட்ட பின்னர் நிலத்­தொ­டர்பு அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே  தர முயர்த்­தப்­படும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ள சூழ்­நி­லையில் “முஸ்லிம் –- தமிழ் மக்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில்  கல்­முனை பிர­தேச செய­லகம் குறித்த பிரச்­சி­னைக்கு தீர்வை எட்ட முயற்­சிக்­கின்றோம்” என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இவ்­வாறு அதி­கா­ரத்­தி­லுள்ள அர­சியல் தரப்­புக்­களும், சிவில் அமைப்­புக்­களும் கல்­முனைப் பிர­தே­சத்­திற்கு வெளி­யி­லி­ருந்து அறிக்கைச் சமர் செய்­வதும் ஒரு தரப்பை மற்­றைய தரப்பு குற்றம் குறையும் சொல்லி; வரு­கின்ற நிலையில் கல்­மு­னையில் வாழும் இரு சமூ­கங்­க­ளையும் சார்ந்த­வர்­களின் பிர­தி­நி­திகள் இதய சுத்­தி­யுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசி இப்­பி­ரச்­சி­னையை எதிர்­கால சமூ­கத்­திடம் விட்­டு­வி­டாது தீர்ப்­ப­தற்கு ஏன்  ஆரோக்­கி­ய­மான முயற்­சி­களை மேற்­கொள்ள முடி­யாது. ஏனெனில் இப்­பி­ர­தே­சத்தில் வாழப்­போ­வது இரு சமூ­கங்­க­ளும்தான். அர­சி­யல்­வா­தி­களும், சுய­நல விரும்­பி­க­ளும் இப்­பி­ரச்­சி­னையை இதய சுத்­தி­யுடன் தீர்த்து வைக்க விரும்­ப­வில்லை என்­ப­தையே இரு சமூ­கங்­க­ளையும் கவ­லை­ய­டையக் கூடிய வித­மாக அறிக்கை விடு­வதன் மூலம் காண முடி­கி­றது.

அர­சி­யல்­வா­திகள் மற்றும் சுய நிகழ்ச்சி நிரலைக் கொண்­ட­வர்­களின் சுக­போ­கங்­க­ளுக்­காக இரு சமூ­கங்களையும் சார்ந்த அப்­பா­விகள் ஒற்­றுமை இழந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் சூழல் ஏன் உரு­வாக வேண்டும். ஏன்  அப்­பாவி சமூக அங்­கத்­த­வர்கள் பலிக்­க­டாக்­க­ளாக வேண்டும் என கேட்க வேண்­யுள்­ளது.

இந்­நி­லை­யில்தான் சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி அதி­கார சபைக் கோரிக்கை தொட­ராக முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. பண்­டைய கல்­மு­னையின் நிர்­வா­கத்தை நோக்­கு­கின்­ற­போது கல்­முனை மூன்று நிர்­வாக கிராம சபை­க­ளையும் ஒரு பட்­டின சபை­யையும் கொண்­டி­ருந்­தது. கர­வாகு வடக்கு, கர­வாகு மேற்கு, கர­வாகு தெற்கு மற்றும் கல்­முனை பட்­டின சபை என்­பன அவை­யாகும். கர­வாகு வடக்கு கிராம சபை கல்­லாறு, துறை­நீ­லா­வணை, பெரிய நீலா­வணை, மரு­த­முனை, பாண்­டி­ருப்பு கிரா­மங்­களைக் கொண்­டி­ருந்­தது. இருப்­பினும், 1960ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து பிரிக்­கப்­பட்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­ட­போது கல்­லாறும் துறை­நீ­லா­வ­ணையும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தோடு இணைக்­கப்­பட்­டன.

கர­வாகு மேற்கு கிராம சபை நற்­பிட்­டி­முனை, மணற்­சேனை, சேனக்­கு­டி­யி­ருப்பு, துர­வந்­தி­யன்­மேடு ஆகிய கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும். கர­வாகு தெற்கு சபை சாய்ந்­த­ம­ருது கிரா­மத்தை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருந்­த­துடன், கல்­முனைப் பட்­டின சபையின் எல்­லை­யா­னது கல்­முனை சனிட்­டரி போட்டின் எல்­லை­யாக அதா­வது, தாள­வட்­டுவான் வீதி முதல் கல்­முனை ஸாஹிறா வீதி வரை­யா­னது என கல்­மு­னையின் வர­லாற்றுப் பதி­வுகள் சுட்­டிக்­காட்­டு­கி­றது.

இந்­நி­லையில், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிர­தேச சட்ட மூலத்தின் பிர­காரம், பட்­டின சபை மற்றும் கிராம சபைகள் என்ற அதி­கார சபைக்­க­ளுக்குப் பதி­லாக பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் கல்­முனைக் கரை­வா­குவின் 3 கிராம சபை­களும் ஒரு பட்­டின சபையும் கல்­முனைப் பிர­தேச சபைக்குள் உள்­வாங்­கப்­பட்­டன.

நாட­ளா­விய ரீதியில் இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் 1991ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இருப்­பினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்­பட்­டி­ருந்த அசா­தா­ரண சூழ்­நி­லை­களின் கார­ண­மாக இத்­தேர்தல் இவ்­விரு மாகா­ணத்­திலும் குறித்த காலங்­களில் நடாத்­தப்­ப­ட­வில்லை. கல்­முனை பிர­தேச சபைக்­கான முத­லா­வது தேர்தல் 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்­றது. இத்­தேர்­தலில் சாய்ந்­த­ம­ருது மக்­களும் தாங்கள் விரும்பும் கட்­சிக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளித்­தி­ருந்­தார்­களே தவிர தங்­க­ளுக்கு ஒரு தனி­யான சபை வேண்­டு­மென்று அப்­போது கேட்­கவில்லை.

1994 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சாய்ந்­த­ம­ருது மக்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான பிர­தேச செ­யலகம் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­றுதி மறைந்த தலைவர் அஷ்­ர­பினால் வழங்­கப்­பட்டு அவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டது.

இதன் பிர­காரம், 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி உப பிர­தேச செய­ல­க­மாக உரு­வாக்­கப்­பட்ட சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகம் 2001ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி முதல் தனி­யான பிர­தேச செய­ல­க­மாக தரம் உயர்த்­தப்­பட்டு செயற்­பட ஆரம்­பித்­தது. இதன் பின்­னரே தனி­யான பிர­தேச சபைக்­கான கோஷமும் எழத்­தொ­டங்­கி­யது. இக்­கோ­ஷங்­க­ளுக்கு மத்­தியில் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான உயர்­மட்டக் குழு­வொன்று அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வி­டயம் தொடர்பில் புதிய குழு விரைவில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

சாய்ந்­த­ம­ரு­துக்­கு தனி­யான பிர­தேச சபைக்­கான கோஷம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இதி­லுள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆரோக்­கி­ய­மாகப் பேசப்­பட்டு இதற்­கான தீர்வு எட்­டப்­பட்­டி­ருந்தால் தொப்­புள்­கொடி உற­வாக விளங்கும்  சாய்ந்­த­ம­ரு­தூ­ரிலும், கல்­மு­னை­யிலும்  அதி­காரப் பசிக்­காக பழி­சொல்லும் நிலை உரு­வா­கி­யி­ருக்­காது. தாக்­குதல் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­காது. சாய்ந்­த­ம­ருது இளை­ஞர்கள் பிழை­யாக வழி­ந­டத்­தப்­ப­டு­வதன் ஊடாக வன்­முறைக் கலா­சாரம் உரு­வா­கி­யி­ருப்­ப­தாக பல்­வேறு தளங்­களில் பேசப்­ப­டு­கின்­றன.

பிழை­யான வழி­காட்­டல்­களும்; கல்­மு­னைக்­கான தீர்வும்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ஆரிப் சம்­சு­டீனின் வாகனம் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட  தாக்­குதல் இப்­பி­ர­தேச அப்­பாவி இளை­ஞர்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கி­றார்கள் என்­பதை உணர்த்­து­கி­றது.

“தங்­க­ளு­டைய கோரிக்­கைகள் நிறை­வேறும் வரை எந்­த­வொரு அர­சியல் செயற்­பா­டு­களும் தங்­க­ளது பிர­தே­சத்தில் மேற்­கொள்ளக் கூடாது என்­பது அர­சியல் நீரோட்­டத்தில் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல. எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் அர­சியல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கும்­போதோ, அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­கொண்டு செல்­லும்­போதோ அவற்றை வன்­முறைக் கலா­சா­ரத்தைக் கொண்டு தடுக்க முடி­யாது.

அவர்­களின் சொத்­துக்­களை, வாக­னங்­களைச் சேதப்­ப­டுத்தி  வன்­மு­றை­களைக் கொண்டு தமது கோரிக்­கை­களை நிறை­வேற்ற முனை­வது அல்­லது இளை­ஞர்­களை அதற்­காகத் தூண்­டி­வி­டு­வது அவர்­களை வழி­கெ­டுக்கும் செயற்­பா­டாகும்” என ஆரிப் சம்­சுடீன் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­ப­தோடு முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்தை கட்டிக் காப்­பதே எமது பணி. அப்­பணியை செயற்­ப­டுத்­து­வது நமது கடமை. அவ்வாறே சகோதரத்துவத்துடன் வாழவும் நாம் ஏவப்பட்டுள்ளோம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காக செயற்படும் எங்களை நோக்கி கற்களை வீசிக் காயப்படுத்தி, இரத்தத்தையோட்டி, முஸ்லிம் சகோதரத்துவத்தை அழிக்க முனையும் விஷமிகளிடமிருந்து அப்பாவி இளைஞர்கள் வழி தவறாது விலகி நடக்க வேண்டுமென”  சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதாக சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா குறிப்பிட்டிருக்கிறார்

இவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுதல் மற்றும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை என்ற இவ்விரு விடயங்களும் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கும் பிரதேசங்களுக்கிடையில் பிளவுகள் உருவாகாமல் பிரதேச ஒற்றுமையை காப்பாற்றுவதற்கும் தீர்வு எட்டப்படுவது அவசியமாகவுள்ளது.

அந்தவகையில், சாய்ந்தமருது பிரதேச செயலகம் தவிர்ந்த கல்முனையில் இயங்கும் நிர்வாக ரீதியான இரண்டு பிரதேச செயலகங்களும் சம அதிகாரங்களுடன் செயற்படுவதற்கும் பண்டைய நிர்வாக எல்லைகளைக் கொண்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கவும் விட்டுக்கொடுப்புடன் வழிவிடப்பட்டால் மாத்திரமே கல்முனையில்  தலைக்குமேல் வெள்ளம் என்ற நிலையில் உருவாகியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும். இல்லையேல் இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக தொடர்ந்து கல்முனையில் எரிந்து  கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.