சவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பயன்படுத்துகிறது

ஐ.நா. நிபுணர்கள் தெரிவிப்பு

0 551

சர்­வ­தேச சட்­டத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பேச்சுச் சுதந்­தி­ரத்தை மீறும் வகையில் செயற்­பாட்­டா­ளர்­களை மௌனிக்கச் செய்­வ­தற்­காக சவூதி அரே­பியா பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டத்தை பயன்­ப­டுத்தி வரு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஜெனீ­வாவில் நடை­பெறும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையின் கூட்­டத்­திற்கு ஒருங்­கி­சை­வாக கடந்த திங்­கட்­கி­ழமை சவூதி அரே­பியா – பொறுப்புக் கூறு­வ­தற்­கான தருணம் என்ற தலைப்பில் குழுக் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

சவூதி அரே­பி­யாவின் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டங்கள் மிகவும் பரந்து விரிந்­தவை என்­ப­தோடு புரிந்­து­கொள்ள முடி­யாத சிக்­கல்­க­ளையும் கொண்­ட­வை­யா­கு­மென பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்ளும் அதே­வேளை மனித உரி­மை­களைப் பாது­காப்­பது தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்­கை­யா­ள­ரான பியன்­னு­ஆலா நியி அஓ­லயின் தெரி­வித்தார்.

இந்தச் சட்­டங்கள் முன்­னணி மனித உரிமைக் காவ­லர்கள், சமயப் பிர­மு­கர்கள், எழுத்­தா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள், சிவில் செயற்­பாட்­டா­ளர்கள் ஆகி­யோரை நேர­டி­யாகத் தாக்­கு­ப­வை­யா­கவும், உரி­மை­களை மட்­டுப்­ப­டுத்­து­ப­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் இவ்­வா­றான அனைத்துக் குழுக்­களும் இந்த சட்­டங்­க­ளினால் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றன என நியி அஓ­லயின் மேலும் தெரி­வித்தார்.

றியாத் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து கடந்த ஒரு வருட கால­மாக தான் தொடர்ந்து தொடர்பில் இருப்­ப­தாக மனித உரிமைக் காவ­லர்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்­கை­யா­ள­ரான மைக்கல் பொரெஸ் தெரி­வித்தார்.

எனக்கு மிகவும் கவ­லை­ய­ளித்த விடயம் என்­ன­வென்றால் மனித உரிமைக் காவ­லர்­க­ளான பெண்கள் இலக்கு வைக்­கப்­பட்­ட­மை­யாகும் எனத் தெரி­வித்த அவர், கைது செய்­யப்­பட்ட அனை­வரும் தொடர்­பு­கொள்ள முடி­யாத இர­க­சிய இடத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையில் உரை­யாற்­றிய சவூதி அரேபியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் அப்துல் அஸீஸ் மோ அல்வாசில், சவூதி அரேபியா தனது நடவடிக்கைகளில் மனித உரிமைகள் விடயத்தில் அனைத்து சர்வதேச மற்றும் தேசிய நியமங்களுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.