நைஜீரிய ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நெரிசலில் சிக்குண்டு 14 பேர் பலி

0 544

போர்ட் காகோட்ஸ் நகரில் இடம்­பெற்ற நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹா­ரியின் தேர்தல் பிர­சாரக் கூட்ட நெரி­சலில் சிக்­குண்டு பதி­னான்கு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வைத்­தி­ய­சாலைப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

இறந்த நிலையில் 14 பேரின் சட­லங்கள் கொண்டு வரப்­பட்­ட­தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூவரைக் காப்­பாற்­று­வ­தற்கு நாம் போராடி வரு­கின்றோம் என போர்ட் காகோட்ஸ் பல்­க­லைக்­க­ழக வைத்­தி­ய­சா­லையைச் சேர்ந்த கெம் டேனியல் எலெ­பிகா செவ்­வாய்­க்கி­ழ­மை­யன்று தெரி­வித்தார்.

பின்னர் டசின்­க­ணக்­கானோர் பார­தூ­ர­மான காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தா­கவும் எலெ­பிகா தெரி­வித்தார்.

எதிர்­வரும் சனிக்­கி­ழமை சவால்­மிக்க ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நைஜீ­ரிய மக்கள் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர்.

உயி­ரி­ழந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கு ஜனா­தி­பதி தனது அனு­தா­பத்தைத் தெரி­வித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ளார். உயி­ரி­ழந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் தனது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்துக் கொள்­வ­தாக ஜனா­தி­பதி அவ்­வ­றிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

காய­ம­டைந்தோர் விரை­வாக குண­ம­டைய வேண்டும் என விரும்­பு­வ­தா­கவும் அவ­ரது ஊடக அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்டம் நடை­பெற்ற இட­மான அடோக்­கியே அமி­யேஸ்­மாக விளை­யாட்­ட­ரங்­கி­லி­ருந்து மக்கள் முறை­யாக வெளி­யே­றி­யி­ருந்தால் உயி­ரி­ழப்­புக்­களைத் தவிர்த்­தி­ருக்க முடியும் என புஹாரி தெரி­வித்தார்.

நைஜீ­ரிய மக்கள் தமது எதிர்­கா­லத்தை வடி­வ­மைப்­ப­தற்­கான முக்­கிய பங்­க­ளிப்பைச் செய்­ய­வி­ருக்கும் இத் தரு­ணத்தில் அவர்­க­ளது கனவை நிறை­வேற்­று­வ­தற்கு அவர்­க­ளது அர­சாங்கம் எந்­த­ளவு கடி­ன­மாக உழைக்­கின்­றது என நாம் கூறு­வதைக் கண்டும் கேட்டும் அறிந்து கொள்­வ­தற்கு வந்­தி­ருந்த அவர்­க­ளுக்கு உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மா­னது,  உண்­மையில் இது பார­தூ­ர­மான சம்­ப­வ­மாகும் எனவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, பாது­காப்பு மற்றும் ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­ப­வற்றின் அதி­க­ரிப்பு என்ற பெரும் எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த தனக்கு தனது சேவையின் அடிப்படையிலான மக்கள் அபிப்பிராயத்தைப் பெறுவது போன்ற தேர்தலாகும் என மீளத் தெரிவு செய்யப்படுவதற்காக சவால்மிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ள தனது 70 ஆவது வயதிலிருக்கும் புஹாரி தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.