பால்மா விவ­காரம் குறித்து உடன் விசா­ரணை நடத்­துக

வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை

0 567

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவின் தரம் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளதால் அவற்றில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை அறி­வ­தற்கு முறை­யான விசா­ர­ணை­யொன்­றினை நடத்­து­மாறு அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எழுத்­து­மூலம் கோரி­யுள்­ளது.

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் உட்­பட வேறு சேர்க்­கைகள் அடங்­கி­யுள்­ள­னவா என்றும் சுகா­தார அமைச்சில் தற்­போது பணி­பு­ரியும் அதி­கா­ரிகள் மற்றும்  முன்­னைய அதி­கா­ரி­க­ளுக்கு பால்மா நிறு­வ­னங்­க­ளு­ட­னான உற­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யு­மாறும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

பால்மா வகை­களில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக கைத்­தொழில் மற்றும் வர்த்­தக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன தெரி­வித்­துள்ள கருத்­து­களின் உண்மை நிலை­யினை அறிந்து கொள்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரப்­பட்­டுள்­ளது.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் டாக்டர் அனு­ருத்த பாதெ­னிய மற்றும் செய­லாளர் டாக்டர் ஹரித அலுத்கே ஆகி­யோரின் கையொப்­பங்­க­ளுடன் குறிப்­பிட்ட கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

சுகா­தார திணைக்­க­ளத்தில் உணவு சுகா­தாரம் தொடர்­பான பத­வி­களை வகித்­த­வர்கள்  ஓய்­வு­பெற்­றதன் பின்பு வெளி­நாட்டு பால்மா நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளாக நிய­மனம் பெற்­றுள்­ளமை தொடர்­பிலும் ஆராய வேண்டும். நாட்டு மக்­களின் சுகா­தா­ரத்­தினைப் பாது­காக்க வேண்­டிய, உறு­திப்­ப­டுத்த வேண்­டிய சுகா­தார அமைச்சர் பால்மா நிறு­வனங்­க­ளுக்குச் சார்­பாக கருத்து வெளி­யி­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அத்­தோடு அமெ­ரிக்கா மற்றும் மலே­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து அதி­கமான தாவர எண்ணெய் இறக்­கு­மதி செய்யும் நாடாக நியூ­சி­லாந்து இருக்­கின்­றமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

உலக சந்­தையில் பால் கொழுப்பு கிலோ ஒன்றின் விலை இலங்கை ரூபாவில் 900 ரூபா­வாகும். இதே­வேளை தாவர எண்ணெய் ஒரு கிலோவின் விலை 150 ரூபா மாத்­தி­ரமே. அதனால் இலங்கை போன்ற பொரு­ளா­தார வசதி குறைந்த மக்கள் வாழும் சந்­தை­க­ளுக்கு குறைந்த விலையில் பால்­மா­வினை வழங்­கு­வ­தற்­காக பல மாற்று வழி­களைக் கையாள்­வ­தாக தக­வல்கள் வெளியாகியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு தூய்மையான பால்மாவினை நுகர்வதற்கு வழிவகை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.