அரசியல் நெருக்கடி நிலையினாலேயே தனியார் சட்ட திருத்தம் தாமதம்

விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை என்கிறார் அமைச்சர் தலதா

0 665

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து திருத்த சட்­ட­மூ­லத்தின் பணிகள் கடந்­த­கால அர­சியல் நெருக்கடி நிலையினாலேயே பிற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதனை துரி­த­மாக நிறை­வேற்ற விரைவில் நட­வ­டிக்கை எடுப்பேன் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து திருத்­தச்­சட்ட மூலம் தொடர்ந்து தாம­தித்து வரு­வது தொடர்­பாக தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட திருத்தம் தொடர்­பாக ஆராய 2009 ஆம் ஆண்டு  நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொட குழு­வொன்றை அமைத்­தி­ருந்தார். பல்­வேறு கார­ணங்­களில் குறித்த குழுவின் அறிக்கை பிற்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. என்­றாலும் நான் நீதி­ய­மைச்சை பொறுப்­பேற்ற பின்னர் இது­தொ­டர்­பாக பல­த­ரப்­பி­னரும் என்­னிடம் கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்க குழுவின் அறிக்­கையை துரி­த­மாகக் கைய­ளிக்­கு­மாறு கேட்­டி­ருந்தேன்.

அதற்­கி­ணங்க குழுவின் தலை­வ­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி சடத்­த­ரணி சலீம் மர்சூப் குழுவின் அறிக்­கையை சமர்ப்­பித்­தி­ருந்தார். என்­றாலும் குறித்த அறிக்­கையில் ஒரு­சில விட­யங்­களில் குழு­வி­லி­ருந்த உறுப்­பி­னர்கள் மத்­தியில் இணக்­கப்­பாடு இருக்­க­வில்லை. அதனால் அது­தொ­டர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பல­ருடன் கலந்­து­ரை­யாடல் நடத்தி பொது­வான இணக்­கப்­பாட்­டுக்கு வரு­மாறு நான் கேட்­டி­ருந்தேன்.

என்­றாலும் பல கட்டப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றதன் பின்னர் கடந்த நவம்பர் மாதத்­துக்குள் அதன் பணி­களை நிறை­வ­டை­யச்­செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். என்­றாலும் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் சதித்­திட்டம் கார­ண­மாக அதனை முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யாமல் போனது. தற்­போது மீண்டும் நான் நீதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து திருத்­தச்­சட்டம் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை நிறை­வுக்கு கொண்­டு­வரத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்ளேன். நான் முஸ்லிம் அல்­லா­தவர் என்­பதால் எனக்கு ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யாமல் இருக்­கின்­றது.

எனவே, குறித்த குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூப் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் கலந்துரையாட நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அத்துடன் இந்த விடயத்தை மேலும் காலதாமதமாக்க இடமளிக்க முடியாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.