அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்!

0 390

எப்.அய்னா

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, பணத்­துக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட நாட­கமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுக்கும் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களில் இச்­சந்­தேகம் வலுத்­துள்­ள­தாக, விசா­ர­ணையின் உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இது­வரை இலங்­கையில் 8 பேர் கைது :
அதன்­படி இது­வரை (இக்­கட்­டுரை எழு­தப்­படும் போது) 8 பேர் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் நிலையில், அடை­யாளம் காணப்­ப­டாத நபர் ஒருவர் தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. விசா­ரணை தக­வல்கள் பிர­காரம் பெரும்­பாலும், இலங்­கையின் விசா­ர­ணை­களில் கைது செய்ய முடி­யு­மான அனை­வரும் கைது செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக அறிய முடி­கின்­றது. அதில் பிர­தான சந்­தேக நப­ராக தெமட்­ட­கொடை பகு­தியை சேர்ந்த ஒஸ்மன் ஜராட் புஷ்­ப­கு­மா­ரிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­யி­லேயே, அடை­யாளம் தெரி­யாத நபர் ஒருவர் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­பட்­ட­தா­கவும் அதன் உண்மைத் தன்மை மற்றும் அந் நபர் தொடர்பில் பிரத்­தி­யேக குழு­வொன்று விசா­ரித்து வரு­வ­தா­கவும் அறிய முடி­கின்­ற‌து.

இது­வரை கைது செய்­யப்­பட்­ட­வர்கள் என்று பார்க்­கின்ற போது, முதலில் மாளி­கா­வத்தை ஜும் ஆ மஸ்ஜித் லேனை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். பின்னர் சிலாபம் பங்­கெ­தெ­னிய பகு­தியை சேர்ந்த சகோ­த­ரர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவ்­வி­ரு­வரும் இலங்­கையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் முக்­கிய சந்­தேக நப­ராக கரு­தப்­படும் ஒஸ்மான் ஜெரோட்டின் உடன் பிறந்த சகோ­த­ரர்­க­ளாவர். பின்னர் மாவ­னெல்­லையை சேர்ந்த்த இருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில், அதன் பின்னர் கொழும்பில் தனது உரு­வத்தை மாற்றி மறைந்­தி­ருந்த ஒஸ்மன் ஜெரோட்டும் கைது செய்­யப்­பட்டார்.

அதனைத் தொடர்ந்து வத்­தளை பகு­தியில் வைத்து மேலும் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் சமூக வலைத்­த­ளங்­களில் அடிக்­கடி காணொ­ளி­களை வெளி­யிடும் இஸ்மத் என பல­ராலும் அறி­யப்­ப‌டும் நபரும் உள்­ள­டங்­கு­கின்றார்.

இந்­திய தொடர்பு மற்றும் வங்கிக் கணக்­குகள் குறித்த விசா­ரணை :
குறிப்­பாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில் ஒரு­வ­ருக்கு இந்­திய தொடர்­புகள் சில இருப்­ப­தாக கூறும் புல­னாய்­வா­ளர்கள் அது தொடர்­பிலும் அவ­ரது வங்கிக் கணக்­குக்கு இந்­தி­யா­வி­லி­ருந்து கிடைக்கப் பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­ப‌டும் ஒரு தொகை பணம் தொடர்­பிலும் விசா­ரிப்­ப­தாக கூறு­கின்­றனர்.

அதே நேரம், இலங்­கையில் கைது செய்­யப்­பட்­டுள்ள அனை­வ­ரி­னதும் வங்கிக் கணக்­குகள் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில், அதற்­காக கோட்டை நீதிவான் நீதி­மன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு சில கட்­ட­ளை­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

குஜராத் பொலிஸார் வருகை :
இந் நிலையில் குஜராத் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒருவர் தலை­மை­யி­லான சிறப்புக் குழு­வொன்று அடுத்த வாரம் அளவில் இலங்கை வர­வுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. அவர்கள் இலங்­கையில் கைது செய்­யப்­பட்­டுள்ள 8 பேரையும் விசா­ரிக்­க­வுள்­ள­தா­கவும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒருவர் தலை­மை­யி­லான குழு­வொன்று இந்­தியா சென்று, அங்கு கைதாகி உள்ள நால்வர் தொடர்பில் விசா­ரிப்­பது பற்றி ஆராய்ந்து வரு­வ­தா­கவும் அறிய முடி­கின்­றது.

பாது­காப்பு செய­லாளர் கூறு­வ­தென்ன? :
இந்­தி­யாவில் இலங்­கை­யர்கள் நால்வர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இலங்­கை­யி­னு­டைய பாது­காப்பு செய­லாளர் ஜெனரால் கமல் குண‌­ரட்ன தக­வல்­களை வெளி­யிட்­டுள்ளார். இது இலங்­கையின் பொறுப்பு வாய்ந்த அதி­காரி ஒருவர் பொது வெளியில் இந்த விவ­காரம் தொடர்பில் வெளி­யிட்ட உத்­தி­யோ­க­பூர்வ கருத்­தாக கொள்­ளப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக கடந்த இரு வாரங்­க­ளாக விடி­வெள்ளி இந்த விவ­காரம் தொடர்பில் வெளிப்­ப­டுத்­திய விட­யங்­களை பாது­காப்பு செய­லாளர் கமல் குண­ரட்­னவின் கருத்து மேலும் உண்­மைப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

அம்­பா­றையில் நடந்த வைபவம் ஒன்றின் பின்னர் ஊட­கங்­க­ளிடம் பேசிய பாது­காப்பு செயலர் கமல் குண­ரட்ன, “நாங்கள் தற்­போது அவர்­க­ளிடம் விசா­ரணை நடத்தி வரு­கிறோம். அவர்கள் போதைப்­பொ­ரு­ளுக்கு கடு­மை­யாக அடி­மை­யாகி இருப்­பதை கண்­ட­றிந்­துள்ளோம். அவர்கள் மத அடிப்­ப­டை­வா­திகள் அல்லர்” என இந்­தி­யாவில் கைதான நலவர் தொடர்பில் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் இந்­தி­யாவில் கைதான நால்­வ­ரு­டனும் நெருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளிடம் விசா­ரணை நடாத்­தப்­ப­டு­வ­தையும், அவ்­வி­சா­ர­ணை­களில் அவர்­களின் போதைப் பொருள் தொடர்­புகள் குறித்த விட­யங்கள் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­ட­தையும் ஜெனரல் கமல் குண­ரட்ன சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

விசா­ர­ணை­களில் நடாத்­தப்­பட்ட சோத­னைகள் :
அதன்­படி சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்­ப‌டும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரே­ம­ரத்­னவின் கட்­டுப்­பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸின் ஆலோ­சனை மற்றும் கட்­டுப்­பாட்டில் சிற‌ப்புக் குழு இவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இந்த விசா­ர­ணை­களில், மாளி­கா­வத்தை மற்றும் சிலாபம் பகு­தி­களில் உள்ள இரு வீடுகள் விஷேட சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக அதில் ஒரு வீட்டில் சந்­தே­கத்­துக்கு இட­மான கொடி­யொன்று எரிக்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ள­மைக்­கான எச்­சங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு அளித்­துள்ள தக­வல்கள் மற்றும் புகைப்­ப­டங்­களை ஒப்­பீடு செய்து, எரிக்­கப்­பட்ட கொடி ஐ.எஸ். கொடியா அல்லது வேறு ஏதுமா என்பது தொடர்பில் பகுப்பாய்வுகள் நடக்கின்றன. இந்தியா செல்ல முன்னர், தற்போது அங்கு கைதில் உள்ள நால்வரும் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்காக பையத் எனும் உறுதி மொழியை எடுத்துக்கொண்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளிப்ப‌டுத்தப்படவில்லை. எனினும் அது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகத்தின்படி விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஐ.எஸ். நாடகமொன்றினை பணத்துக் காக அரங்கேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகங்களை தோற்றுவிக்கவல்ல விடயங்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக அறிய முடிகின்ற‌து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.