மஹர பள்ளிவாசல் விவகாரம் : புதிதாக விசாரணை நடாத்தி சுமுகமான தீர்வு பெற்றுத் தருக

வக்பு சபையிடம் கோரிக்கை

0 110

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள, சிறைச்­சாலை வளா­கத்­தினுள் அமைந்­துள்ள மஹர ஜும்ஆ பள்­ளி­வாசல் தொடர்பில் புதி­தாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்து சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்­றுத்­த­ரு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வாகம் வக்பு சபையின் தலை­வரைக் கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் பள்­ளி­வா­சலின் தலைவர் ரி.எம்.ஹபீல் எஸ். ல­க்ஷானா, செய­லாளர் ரி.ஈ.பொர்ஹாம், பொரு­ளாளர் ரி.ரஜிஊன் எஸ். ல­க்ஷானா என்போர் கையொப்­ப­மிட்டு வக்பு சபையின் தலை­வ­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளனர்.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 2019 ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து மஹர பள்­ளி­வா­ச­லினால் மஹர சிறைச்­சா­லைக்கு பயங்­க­ர­வா­தி­களால் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம் எனக் கருதி அப்­பள்­ளி­வாசல் சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டது. பள்­ளி­வா­ச­லினுள் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டது.

இப்­பள்­ளி­வா­சலை இப்­ப­கு­தியில் வாழும் 350 குடும்­பங்கள் தங்­க­ளது சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தி வந்­தனர். கடந்த ஐந்து வருட கால­மாக இப்­ப­குதி மக்கள் தங்கள் சமய கட­மை­க­ளுக்கு பள்­ளி­வா­சல்­களைத் தேடி பல மைல்கள் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

இப்­பள்­ளி­வா­சலை மீள முஸ்­லிம்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கு­மாறு நாங்கள் ஜனா­தி­பதி, பிர­தமர், நீதி அமைச்சர், சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபை போன்­ற­வற்­றிடம் பல கோரிக்­கை­களை முன்­வைத்தும் இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. வக்பு சபை ஏற்­க­னவே இது தொடர்பில் விசா­ரணை ஒன்­றி­னையும் நடத்­தி­யுள்­ளது.

சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் மஹர ஜும்ஆ பள்­ளி­வாசல் மீண்டும் முஸ்­லிம்­க­ளி­டமே திரும்ப வழங்­கப்­பட வேண்­டு­மென 2020இல் சிபா­ரிசும் செய்­தி­ருந்தார். என்­றாலும் அந்த சிபா­ரி­சுகள் கவ­னத்திற் கொள்­ளப்­படவில்லை.

மஹர பள்­ளி­வாசல் உட­மைகள் பல தட­வைகள் சேத­மாக்­கப்­பட்டு வந்­துள்­ளன. 2013.03.04ஆம் திகதி பள்­ளி­வாசல் பிர­தான வாயி­லிலும், மதில் சுவ­ரிலும் பன்­றியின் படங்கள் வரை­யப்­பட்­டன. இத­னை­ய­டுத்து பொலிஸ் பாது­கா­வலும் வழங்­கப்­பட்­டது. இவ்­வா­றான நிலையிலே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை காரணம் காட்டி பள்­ளி­வாசல் சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தப் பள்­ளி­வாசல் 1903இல் சிறைச்­சா­லையில் பணி­பு­ரிந்த மலே சமூ­கத்தின் மத கட­மை­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும். பள்­ளி­வாசல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவும் செய்­யப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் நாம் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அல்ல. அன்­றாடம் சமயக் கட­மை­க­ளைப்­பூர்த்தி செய்து கொண்டு ஏனைய சமூ­கத்­துடன் நல்­லு­ற­வுடன் வாழ்ந்து வரு­ப­வர்கள். எங்­க­ளது பள்­ளி­வாசல் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு விட்டதால் வயதானவர்கள் சமயக் கடமைகளுக்காக தூர இடத்துப் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் வக்பு சபை இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடனும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு பெற்றுத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.