மைத்திரியை அழைத்து சாட்சியம் பெறுங்கள்

‍உயிர்த்த ஞாயிறு தின சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் கோரிக்கை

0 50

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நிலையில் குறித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அழைத்து சாட்­சியம் பெறு­மா­று ­அவ்­வ­ழக்கில் 10 பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் கோரிக்கை முன் வைத்­துள்ளார்.

இந்த தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜா ஆகியோர் அடங்­கிய அமர்வு முன்­னி­லையில் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக முன் வைக்­கப்­பட்­டுள்ள 23,270 குற்­றச்­சாட்­டுக்­களும் வாசித்து முடிக்­கப்­பட்­டன.

இந் நிலையில் தாம் அனைத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் நிர­ப­ரா­திகள் என பிர­தி­வா­திகள் அறி­வித்­தனர். இத­னை­ய­டுத்தே சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை சுமார் 60 சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்­தப்­பட்டு குறுக்கு விசா­ர­ணை­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

குற்றம் சுமத்­தப்­பட்ட 25 பேரில் 17 ஆவது பிர­தி­வாதி விளக்­க­ம­றி­யலில் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களை மட்டும் சட்ட மா அதிபர் மீளப் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

கடந்த 2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதி சட்ட மா அதி­பரால் 23270 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்றப் பத்­தி­ரிகை 25 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நட­வ­டிக்­கைகள் கடந்த 2023 பெப்­ர­வ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந் நிலையில் தற்­போது தொடர்ச்­சி­யாக ஒவ்­வொரு மாதமும் திகதி ஒதுக்­கப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில், நேற்று முன்­தி­னமும், நேற்றும் அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

நேற்று முன்­தினம் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், இவ்­வ­ழக்கில் இது­வரை சுமார் 60 சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும், பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக அதில் எந்த வெளிப்­ப­டுத்­தல்­களும் இல்லை என சுட்­டிக்­காட்டி விஷேட சமர்ப்­பணம் ஒன்­றினை முன்­வைத்தார்.

‘இவ்­வ­ழக்கில் 10 பிர­தி­வா­தி­க­ளுக்­காக நான் ஆஜ­ரா­கின்றேன். அதில் ஒருவர் வழக்கு விசா­ரணை ஆரம்­பத்­தி­லேயே உயி­ரி­ழந்­து­விட்டார். முறைப்­பாட்­டாளர் அறியா தரப்­புடன் இணைந்து சதி செய்­த­தாக எனது சேவை பெறு­நர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால், இப்­போது இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடக்­கும்­போது நாட்டின் தலை­வ­ராக இருந்த, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த, முப்­ப­டை­களை வழி­ந­டாத்­திய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியை தனக்கு தெரியும் எனவும், நீதி­மன்றம் ஒன்றின் முன் அதனை வெளிப்­ப­டுத்த தயார் எனவும் கூறி­யுள்ளார்.

அப்­ப­டி­யானால், இந்த ட்ரயல் அட்பார் நீதி­மன்றை விட அதற்கு சிறந்த ஒரு இடம் இருக்க முடி­யாது. முதலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மன்­றுக்கு அழைத்து அவ­ரது சாட்­சி­யத்தை பதிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக வழக்கை முன்­கொண்டு செல்ல முடி­யுமா என்­பதை தீர்­மா­னிக்­கலாம். எனவே முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரியை முதலில் சாட்­சிக்கு அழைத்து அவ­ரது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்தி குறுக்கு விசா­ரணை செய்ய வேண்டும்’ என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் கோரினார்.

எனினும் இவ்­வ­ழக்கில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ராகும் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர அக்­கோ­ரிக்கை தொடர்பில் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

‘முன்னாள் ஜனா­தி­ப­தியின் கூற்று தொடர்பில், அவரை சாட்­சி­யாக அழைப்­பது தொடர்பில் இப்­போது தீர்­மா­னிக்க முடி­யாது. அதற்­கான நேரம் இது­வல்ல. அவர் இப்­போது சி.ஐ.டி. க்கு வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளார். அதன் உள்­ள­டக்கம் என்ன என்­பது கூட தெரி­யாத நிலையில், அவரை சாட்­சி­யா­ள­ராக அழைப்­பது பொருத்­த­மற்­றது’ என அவர் பதி­ல­ளித்தார்.

எனினும் இந்த விட­யத்தில் நீதி­மன்றம் எந்த கட்­ட­ளை­க­ளையும் இது­வரை ஆக்­க­வில்லை.

நேற்று சாட்சி விசா­ர­ணை­களின் போது தெஹி­வளை ட்ரொபிகல் இன் தங்கு விடு­தியில் நடந்த வெடிப்பு தொடர்பில் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 24 பிர­தி­வா­தி­களும் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு, போகம்­பறை உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் இருந்து அவர்கள் 24 பேரும் அழைத்து வரப்­பட்­டனர்.

பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி ஜி.கே. கரு­ணா­சே­கர, சட்­டத்­த­ரணி வஸீமுல் அக்ரம், சட்­டத்­த­ரணி சுரங்க பெரேரா, சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ், சட்­டத்­த­ரணி அசார் முஸ்­தபா, சட்­டத்­த­ரணி இம்­தியாஸ் வஹாப், சட்­டத்­த­ரணி சச்­சினி விக்­ர­ம­சிங்க உள்­ளிட்டோர் ஆஜ­ராகி வரு­கின்­றனர்.

இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்­பாக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் தலை­மையில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, பிரதி சொலி­சிட்டர் ஜென­ரால்­க­ளான‌ சுஹர்ஷி ஹேரத், சஜித் பண்­டார‌ உள்­ளிட்ட 8 பேர் கொண்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்­பிலும் சட்­டத்­த­ரணி சுரேன் டி பெரேரா தலை­மை­யி­லான குழாம் பிர­சன்­ன­மா­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.
பிர­தி­வா­திகள் :
1.அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி
2.அபூ ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்
5. அபூ பலா எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்­தெளஸ்
9. அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி
10. ஷாபி மெள­லவி அல்­லது அபூ புர்கான் எனப்­படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் (விளக்கமறியலில் வைத்து மரணித்துவிட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.