காஸாவில் போர் நிறுத்தத்தை தொடருமாறு இரு தரப்புக்கும் அழுத்தம்

0 105

ஏ.ஆர்.ஏ.பரீல்

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்­கும் இடை­யி­லான நான்கு நாட்கள் தற்­கா­லிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது.
மேல­திக இரண்டு நாட்கள் அதா­வது செவ்­வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்ரேல் – பலஸ்தீன் விவ­கா­ரத்­துக்கு மத்­தி­யஸ்தம் வகிக்கும் கட்டார் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது. வெள்ளை மாளிகை தற்­கா­லிக போர் நிறுத்­தம்­ இ­ரண்டு நாட்கள் நீடிக்­கப்­பட்­டுள்­ள­மையை உறுதி செய்­துள்­ளது.

ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்­டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது. இத் தாக்­கு­தலில் 1200 இஸ்­ரே­லி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். 240 பேர் பணயக் கைதி­க­ளாக சிறை பிடிக்­கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து ஹமா­ஸுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் யுத்தம் மூண்­டது. 49 நாட்­க­ளுக்குப் பின்பு இரு தரப்­புக்­கு­மி­டையில் தற்­கா­லிக போர் நிறுத்தம் நான்கு நாட்­க­ளுக்கு அமு­லுக்கு வந்­தது. இரு தரப்­பி­னரும் இரு தொடர்­பான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர். கத்தார் இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் மத்­தி­யஸ்தம் வகித்து இந்த ஒப்­பந்­தத்தை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­தது.
ஹமாஸ் இயக்கம் பணயக் கைதி­க­ளாக கைது செய்­யப்­பட்ட 240 பேரில் 50 கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும். இஸ்ரேல் ஏற்­க­னவே சிறை­களில் அடைத்­துள்ள பலஸ்­தீன கைதி­களில் 150 பேரை விடு­தலை செய்ய வேண்டும். நிவா­ரண உத­வி­களை எடுத்துச் செல்லும் 200 வாக­னங்களை தினமும் காஸா­விற்குள் அனு­ம­திக்க வேண்டும். காஸாவின் தென் பகு­தியில் இஸ்ரேல் தனது தாக்­கு­தலை முற்­றாக நிறுத்த வேண்டும். வட காஸாவில் பகல் நேரங்­களில் இஸ்­ரே­லினால் வான் வழித்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது எனும் நிபந்­த­னை­களே ஒப்­பந்­தத்தில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன.

கடந்த அக்­டோபர் மாத இறு­தியில் இந்த தற்­கா­லிக போர் நிறுத்த பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்ற போதும் இஸ்ரேல் மேற்­கொண்ட பாரிய தரை வழித்­தாக்­கு­தல்கள், ஷிபா வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்கள் மற்றும் வைத்­தி­ய­சாலை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டமை கார­ண­மக இப்­பேச்­சு­வார்த்தை பின்­ன­டைவைச் சந்­தித்­தது.

ஹமா­ஸினால் சிறைப்­பி­டிக்­கப்­பட்ட பணயக் கைதிகள் அனை­வ­ரையும் எப்­ப­டி­யா­வது மீட்டே தீருவோம். யுத்த நிறுத்­தத்­துக்கு இணங்க மாட்டோம் என்று இஸ்ரேல் பிர­தமர் சூளு­ரைத்து வந்தார்.
இறு­தியில் இஸ்ரேல் பிர­தமர் பென்ஜமின் நெதன்­யாகு தனது நிலை­யி­லி­ருந்தும் இறங்கி வந்தார். கத்­தாரின் மத்­தி­யஸ்­தத்தின் கீழ் அவர் இணக்­கப்­பட்­டுக்கு வந்தார்.

தற்­கா­லிக போர் நிறுத்­தத்தின் இறுதி நாளான திங்­கட்­கி­ழமை இரவு ஹமாஸ் 11 இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­வித்­தது. இவர்­களில் மூன்று வய­தான இரட்டை சிறு­மி­களும் உள்­ள­டங்­குவர். இதன் அடிப்­ப­டையில் ஒப்­பந்­தத்தின் படி 50 இஸ்­ரே­­லிய பணயக் கைதிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை இஸ்ரேல் தனது சிறை­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்த 33 பலஸ்­தீன கைதி­களை விடு­தலை செய்­துள்­ளது. இவர்­களில் 30 சிறு­வர்­களும் 3 பெண்­க­ளு­மாவர்.
செவ்வாய் மற்றும் புதன் கிழமை தற்­கா­லிக போர் நிறுத்­தத்தில் ஹமாஸ் 20 இஸ்­ரே­லிய பணயக் கைதி­களை விடு­வித்­துள்­ளனர் என அமெ­ரிக்க தேசிய பாது­காப்புச் சபை பேச்­சாளர் ஜோன்ன கிர்பி தெரி­வித்­துள்ளார்.

தற்­கா­லிக போர் நிறுத்த ஒப்­பந்தம் அமு­லுக்கு வரு­வ­தற்கு முன்பு யுத்­தத்தில் சுமார் 14850 பலஸ்­தீ­னர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ் எண்­ணிக்­கையில் பெரும்­பா­லானோர் குழந்­தை­களும் பெண்­க­ளு­மாவர். சுமார் ஆறா­யிரம் பேர­ளவில் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்­கி­டையில் சிக்­கி­யி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

காஸா மீதான தரை வழித்­தாக்­கு­தலின் போது கொல்­லப்­பட்ட தனது இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்கை மற்றும் விப­ரங்­களை இஸ்ரேல் முழு­மை­யாக வெளி­யி­ட­வில்லை. ஏரா­ள­மான இரா­ணுவ வாக­னங்­க­ளையும் இஸ்ரேல் இழந்­துள்­ளது.

ஹமா­ஸினால் பணயக் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்ட இஸ்ரேல் மக்­களின் உற­வி­னர்­களின் அழுத்தம் மற்றும் ஆர்ப்­பாட்­டங்கள், இஸ்­ரே­லிய பிர­த­ம­ருக்கு எதி­ரான கோஷங்­களே இஸ்­ரே­லிய பிர­த­மரை தற்­கா­லிக போர் நிறுத்­தத்­துக்கு அடி­ப­ணிய வைத்­தது என்று கூறப்ப­டு­கி­ற­து.

இதே­வேளை கடந்த சில தினங்­க­ளாக காஸாவில் கடும் மழை பெய்து வரு­வதன் கார­ண­மாக மக்கள் பல அசெ­ள­க­ரி­யங்­களை எதிர் கொண்­டுள்­ளனர். அங்­குள்ள மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இஸ்ரேல் வான் வழித்­தாக்­கு­தல்­க­ளினால் வீடு­களை இழந்­துள்ள மக்கள் தற்­கா­லிக கூடா­ரங்­களில் குளிரைத் தாங்கக் கூடிய ஆடைகள் இன்று அவ­திப்­ப­டு­கின்­றனர் என பி.பி.சி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னர்கள் குளிர் தாங்க முடி­யாது தங்­க­ளது சிதைந்த வீடு­க­ளுக்குச் சென்று இடி­பா­டு­க­ளுக்­கி­டையில் உடைகள் மற்றும் போர்­வை­களைத் தேடு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருப்­ப­தாக பி.பி.சி. செய்­தி­யாளர் தெரி­வித்­துள்ளார்்.

கத்தார் வெளி­வி­வ­கார அமைச்சு
மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னுக்­கு­மி­டை­யி­லான தற்­கா­லிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பணயக் கைதிகள் மற்றும் இஸ்ரேல் சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீன கைதி­களின் விடு­தலை தொடர்பில் கத்தார் மத்­தி­யஸ்தம் வகித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக கத்தார் வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் மஜீட் அல் அன்­சாரி ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு தற்­கா­லிக போர் நிறுத்த நீடிப்பில் 20 இஸ்­ரே­லிய பணயக் கைதி­களை விடு­தலை செய்­வ­தாக உறு­தி­ய­ளிப்­ப­தா­கவும் அவர் கூறினார்.
மேலும் தற்­கா­லிக போர் நிறுத்தம் 2 நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்குப் பின்­னரும் போர் நிறுத்த கால எல்லை நீடிக்­கப்­ப­டுமா? என ஊட­கங்கள் அவ­ரிடம் வின­விய போது நீடிக்­கப்­ப­டலாம் என நாம் எதிர்­பார்க்­கிறோம். ஆனால் இது இல­கு­வான காரி­ய­மல்ல என அவர் பதி­ல­ளித்­தார்.

போர் முடி­வுக்கு வர­வில்லை
இது தற்­கா­லிக போர் நிறுத்­தமே தவிர போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இஸ்ரேல் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் வரை நாங்களும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்போம் என ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறியுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸிடமிருக்கும் தனது பணயக் கைதிகளை மீட்டுக் கொண்ட பின்பு தாக்குதலைத் தொடர்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.