வெற்றியளித்து வரும் கத்தாரின் மத்தியஸ்தம்

0 155

இரு­பத்தி ஏழு இலட்­சமே மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடான கத்தார் மத்­திய கிழக்­கிலும் உல­கெங்­கிலும் அதன் செல்­வாக்கை அதி­க­ரித்து வரு­கி­றது.

மூன்று பக்­கங்­க­ளிலும் பார­சீக வளை­கு­டாவால் சூழப்­பட்ட இந்த நாட்டின் பரப்­ப­ளவு 11,581 சதுர கிலோ­மீட்டர் தான். இது மத்­திய கிழக்கு நாடு­களின் வரை­ப­டத்தில் ஒரு புள்ளி போல் தெரி­கி­றது.

ஆனால் கடந்த சில வரு­டங்­களில் கத்தார் தனது இரா­ஜ­தந்­தி­ரத்தை உலகம் முழு­வதும் பிர­ப­ல­மாக்­கி­யுள்­ளது.

இன்று ஒரு மத்­தி­யஸ்­த­ராகச் செயல்­ப­டு­வதில் கத்­தா­ருடன் போட்­டி­யிடக் கூடிய எந்த நாடும் உலகில் இல்லை.

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் என்ற செய்தி, இந்தப் போரினால் எழுந்­துள்ள மனி­தா­பி­மான பிரச்­சி­னை­களை முடி­வுக்கு கொண்டு வரலாம் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அமெ­ரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய முத்­த­ரப்பும் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி இந்த ஒப்­பந்­தத்தை நிறை­வேற்­று­வதில் கத்தார் பெரும் பங்கு வகித்­துள்­ளது.

அதே சமயம், மத்­திய கிழக்கில் உள்ள இந்த சிறிய நாடு, அப்­பி­ராந்­தி­யத்தின் மறுக்­க­மு­டி­யாத மத்­தி­யஸ்தர் என்­பதை மீண்டும் நிரூ­பித்­துள்­ளது.
ஒக்­டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்தி பலரை பணயக் கைதி­க­ளாகப் பிடித்­ததில் இருந்து அவர்­களை விடு­விக்க அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடு­க­ளுடன் கத்தார் நெருக்­க­மாக செயல்­பட்டு வரு­கி­றது.
இந்த முயற்­சி­களின் விளை­வாக ஒக்­டோபர் 20 அன்று இரண்டு அமெ­ரிக்கப் பெண் பண­யக்­கை­திகள் ஹமா­ஸினால் விடுவிக்கப்பட்­டனர்.

இதற்குப் பிறகு, இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­தன. இறு­தியில் இரு தரப்பும் நான்கு நாள் போர் நிறுத்தம் என்­ப­துடன் பண­யக்­கை­தி­களை விடு­விக்­கவும் ஒப்­புக்­கொண்­டன. அது மாத்­தி­ரமன்றி தற்­போது மேலும் இரண்டு நாட்­களுக்கு போர் நிறுத்-­தத்தை நீடிக்­கவும் இணங்­கியுள்­ளன.

கத்­தாரின் பங்கு பண­யக்­கை­தி­களை மீட்­பதில் மட்டும் முடிந்­து­வி­ட­வில்லை. இஸ்­ரேலின் முற்­று­கையின் கீழ் காஸா­விற்கு மனி­தா­பி­மான உத­வி­களை அனு­ம­திப்­ப­தற்­காக எகிப்­து­ட­னான எல்­லையைத் திறப்­பதில் இந்த நாடு முக்­கிய பங்கு வகித்­துள்­ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு­த­ரப்­பு­க­ளு­டனும் உற­வு­களைக் கொண்ட நாடு கத்தார் ஆகும். 2012 இல், ஹமாஸ் தனது அர­சியல் அலு­வ­ல­கத்தை கத்தார் தலை­ந­க­ரான தோஹாவில் திறந்­தது. ஹமாஸின் பல முக்­கிய தலை­வர்கள் தோஹாவில் வசிப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

சமீ­பத்தில், ஹமாஸ் அலு­வ­ல­கத்தை மூடு­வ­தற்கு அமெ­ரிக்கா கத்­தா­ருக்கு அழுத்தம் கொடுக்க முயற்­சித்­தது. ஆனால் ஹமாஸின் அர­சியல் அலு­வ­ல­கத்தின் நோக்கம் அப்­பி­ராந்­தி­யத்தில் பேச்­சு­வார்த்­தைக்­கான வழி­மு­றை­யாக இருப்­பதே தவிர எந்த போரையும் அல்­லது தாக்­கு­த­லையும் தூண்­டு­வது அல்ல என்று கத்தார் தெளி­வு­ப­டுத்­தி­யது.

ஹமா­ஸுடன் பேச்சு நடத்­து­வ­தற்­கான வழி­களைத் திறந்து வைத்­தி­ருப்­பது முக்­கியம் என்று இப்­போது அமெ­ரிக்­காவும் இதைப் புரிந்­து­கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கலாம் என்றும் கத்தார் கூறு­கி­றது.

கடந்த சில ஆண்­டு­களின் உதா­ர­ணங்­களைப் பார்த்தால், கத்தார் மத்­தி­யஸ்தம் அல்­லது பேச்­சு­வார்த்­தை­களை எளி­தாக்கும் நட­வ­டிக்­கை­களில் ஒரு தேர்ந்த நாடா­கவே மாறி­யுள்­ளது போல் தெரி­கி­றது.

2020 ஆம் ஆண்டில் கத்தார் தலை­நகர் தோஹாவில் கையெ­ழுத்­தி­டப்­பட்ட அமெ­ரிக்கா – தலிபான் அமைதி ஒப்­பந்தம் இதற்கு ஒரு முக்­கிய எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கி­றது. அதன் கீழ் அமெ­ரிக்கா தனது படை­களை ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து திரும்பப் பெறு­வது என்று முடிவு செய்­யப்­பட்­டது.

2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் அர­சியல் அலு­வ­ல­கங்­களைத் திறக்க தலி­பான்­க­ளுக்கு அனு­மதி வழங்­கிய ஒரே நாடு கத்தார் மட்­டுமே.
இந்த ஆண்டு செப்­டம்­பரில், ஐந்து அமெ­ரிக்க கைதி­களும் ஐந்து ஈரா­னிய கைதி­களும் விடு­விக்­கப்­பட்ட உயர்­மட்ட கைதிகள் பரி­மாற்ற நட­வ­டிக்­கைக்கு கத்­தாரின் மத்­தி­யஸ்தம் ஒரு எடுத்­துக்­காட்­டாக இருக்­கி­றது. ஐந்து அமெ­ரிக்க கைதி­களும் தெஹ்­ரானில் இருந்து தோஹா­விற்கு அழைத்து வரப்­பட்டு அங்­கி­ருந்து அமெ­ரிக்­கா­விற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

இந்த ஆண்டு ஒக்­டோ­பரில், கத்­தாரின் முயற்­சியின் பேரில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்தம் ஒன்றின் கீழ், ரஷ்யா நான்கு யுக்­ரே­னிய குழந்­தை­களை அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்க ஒப்­புக்­கொண்­டது.

கத்­தாரின் மத்­தி­யஸ்த முயற்­சிகள் இது­வரை பல வெற்­றி­களைக் கொடுத்­துள்­ளன. டார்­பூரில் தோஹா சமா­தான உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கும், எரித்­ரி­யாவில் ஜிபூட்­டியின் போர்க் கைதி­களை விடு­விப்­ப­தற்கும், சிரி­யாவில் பண­யக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்கும், லெப­னானில் அதிபர் மாளிகைப் பிரச்­சி­னை­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கும் கத்­தாரின் மத்­தி­யஸ்தம் முக்­கிய பங்கு வகித்­துள்­ளது.

ஜாமியா மிலியா இஸ்­லா­மியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் அமைதி மற்றும் மோதல் தீர்­வுக்­கான நெல்சன் மண்­டேலா மையத்தில் உதவிப் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றும் டாக்டர் பிரே­மானந்த் மிஸ்ரா கத்­தாரின் மத்­தி-­யஸ்தம் குறித்துப் பேசு­கையில் “கத்தார் ஒரே உல­க­ளா­விய சக்­தி­யான அமெ­ரிக்­கா­வுடன் வலு­வான மற்றும் நம்­பிக்­கை­யான உற­வு­களைக் கொண்­டுள்­ளது. கத்தார் அனைத்து இஸ்­லா­மியத் தரப்­பு­க­ளி­டமும் அவை­களின் அமைப்பு நோக்­கங்­க­ளுக்­கான மைய­மாக உள்­ளது. இது கத்­தாரை மத்­திய கிழக்கு பகு­தியில் தவிர்க்க முடி­யாத ஒரு நாடாக ஆக்­கு­கி­றது. மத்­தி­யஸ்தம் செய்­வது ஒரு மார்க்க கடமை என்றும் அந்­நாடு நம்­பு­கி­றது,” என்றார்.

“இந்த கார­ணிகள் அனைத்தும் கத்­தாரை ஒரு வெற்­றி­க­ர­மான மத்­தி­யஸ்­த­ராக ஆக்­கு­கின்­றன. அதே நேரம், கத்­தாரின் பார்­வையில், இப்­படி மத்­தி­யஸ்தம் செய்­வது அந்­நாட்­டுக்கு உலக அளவில் ஒரு நற்­பெ­ய­ரையும், நம்­ப­கத்­தன்­மை­யையும் பெற்றுத் தரு­கி­றது. அதன் பிராந்­திய அண்டை நாடு­களை விட அளவில் சிறி­தாக இருந்­தாலும், அந்­நாடு தன்னை ஒரு தீவிர பிராந்­திய சக்­தி­யா­கவும், மத்­தி­யஸ்­த­ரா­கவும் நிலை­நி­றுத்த இது உத­வு­கி­றது.” என்றும் மிஸ்ரா குறிப்பி­டுகிறார்.

ஜோர்டான் மற்றும் லிபி­யா­வுக்­கான இந்­திய தூத­ராக பணியாற்றிய அனில் திரி­கு­ணாயத் குறிப்­பி­டு­கையில் “மிக முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், கத்­தாரில் அமெ­ரிக்கா மிகப் பெரிய படைத் தளத்தைக் கொண்­டுள்­ளது. தனி­நபர் வரு­மா­னத்தைப் பொறுத்­த­வரை, கத்தார் அந்தப் பிராந்­தி­யத்தில் பணக்­கார நாடாகத் திகழ்­கி­றது. கத்­தாரின் தனி­நபர் வரு­மானம் 138,000 டாலர்கள் என்­ப­துடன் அவர்­க­ளிடம் பெரிய எரி­வாயு இருப்­புக்கள் உள்­ளன” என்றார்.
“சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு, தலி­பான்­களால் பிடி­பட்ட ஒரு அமெ­ரிக்க கைதிக்கு ஈடாக ஐந்து தலிபான் கைதி­களை விடு­விக்க கத்தார் உத­வி­யது. பின்னர் அவர்கள் கத்­தாரில் அலு­வ­லகம் திறக்க தலி­பான்­களை அனு­ம­தித்­தனர்” என்றார்.

“கத்­தாரின் உத­வி­யுடன், அமெ­ரிக்­கா­விற்கும் தலி­பா­னுக்கும் இடையில் தோஹா ஒப்­பந்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்­கான பேச்­சு­வார்த்­தையில் ஏதேனும் சிக்­கல்கள் ஏற்­பட்ட போதெல்லாம், கத்தார் உத­வி­யது. இத­னால்தான் கத்­தா­ருக்கு நேட்டோ அல்­லாத நட்பு நாடு என்ற அந்­தஸ்தை அமெ­ரிக்கா வழங்­கி­யது.”

மத்­திய கிழக்கைப் பொறுத்த வரையில் கத்தார் ஆரம்பம் முதலே முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தை ஆத­ரித்து வரு­வ­தாக அனில் திரி­கு­ணாயத் கூறு­கிறார்.

சவூதி அரே­பியா, எகிப்து, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் 2017 இல் கத்தார் மீது தடை­களை அமுல்­ப­டுத்­தி­ய­தற்கு இதுவே காரணம் என்று அவர் கூறு­கிறார்.

இந்த நான்கு நாடு­களும் 2017 இல் கத்­தா­ருடன் இரா­ஜ­தந்­திர மற்றும் வர்த்­தக உற­வு­களை முறித்துக் கொண்­டன என்­ப­துடன் அதன் மீது கடல், தரை மற்றும் வான்­வழி முற்­று­கையை அறி­வித்­தன.

கத்தார் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தா­கவும், ஈரா­னுடன் மிகவும் நெருக்­க­மாக இருப்­ப­தா­கவும் இந்த நாடுகள் தெரி­வித்­தன.
மேலும் பேசிய திரி­கு­ணயத், “கத்தார் தனது சர்­வ­தேச செல்­வாக்கை அதி­க­ரிக்க இந்த முற்­று­கையின் போது கிடைத்த நேரத்தை எல்லாம் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு உற­வு­களை மேம்­ப­டுத்­தி­யது. இப்­போது அதன் விளை­வுகள் நன்­றாகத் தெரி­கின்­றன. கத்தார் மீது விதிக்­கப்­பட்ட தடை­களை அந்­நாடு நன்­றாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது,” என்றார்.

“அதன் கார­ண­மாக, கத்தார் உலகின் அனு­தா­பத்தைப் பெற்­றது என்­ப­துடன் அந்­நாட்டின் செல்­வாக்கு அதி­க­ரித்­தது, மேலும் FIFA உலகக் கோப்பை விளை­யாட்டுப் போட்­டியை நடத்­தி­யது போன்ற நிகழ்­வு­களால், அந்­நாட்டின் அந்­தஸ்து தொடர்ந்து வளர்ந்­தது. கத்­தா­ருக்கு இப்­போது இரா­ஜ­தந்­திர செல்­வாக்கும் அதிகரித்துள்ளது.” என்றார்.

அமெரிக்காவுடன் கத்தார் நல்லுறவை வைத்திருக்கும் வரை அதன் செல்வாக்கு குறையாது என்று முன்னாள் தூதுவர் அனில் திரிகுணயத் கூறுகிறார்.

ஒரு காலத்தில் கத்தாருக்கு தடை விதித்த சவூதி அரேபியா, இன்று அதே கத்தாருடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மத்திய கிழக்கு நாடுகள் பல மௌனப் புரட்சிகளின் உச்சத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல மோதல்கள் உருவாகும் ஆபத்துள்ளதாகவும் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்.
இது குறித்து அவர் பேசியபோது, “மத்திய கிழக்கு பகுதி மேலும் பல அரபு எழுச்சிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். மேலும், பிராந்திய நடவடிக்கைகளில் ஈரானின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, கத்தாரின் நிலை வலுவடையும் வாய்ப்புகளே அதிகம்” என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.