நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சு வரப்பிரசாதம்

இதனூடாக துரித சேவை என்கிறார் அமைச்சர் ரிசாத்

0 672

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இணைந்து  நீண்­ட­காலம் இடம் பெயர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம் என்றோர்  அமைச்சை உரு­வாக்­கி­யி­ருப்­பது 1990 களில் இடம் பெயர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்­துள்ள  வரப்­பி­ர­சா­த­மாகும். அவர்­க­ளது மீள்­கு­டி­யேற்­றத்­தி­லுள்ள  தடைகள் அனைத்தும் துரி­த­க­தியில் நிவர்த்தி  செய்­யப்­படும் என  புதி­தாக  அமைச்சுப்  பத­வியைப்  பொறுப்­பேற்­றுள்ள  அகில இலங்கை  மக்கள் காங்­கி­ரஸின்  தலைவர்  ரிசாத்­ப­தி­யுதீன் தெரி­வித்தார்.

புதிய அமைச்­சுப்­ப­தவி தொடர்பில் வின­வி­ய­போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு  தெரி­வித்தார்.  அவர் தொடர்ந்தும் கருத்து  தெரி­விக்­கையில் நீண்­ட­கா­ல­மாக  இடம் பெயர்ந்­துள்ள முஸ்­லிம்­களை  மீள்  குடி­யேற்­று­வ­தற்­காக  நான் முன்பு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்­தி­ருந்தேன்.  அதற்­கி­ணங்க  மீள்­கு­டி­யேற்றச் செய­லணி ஒன்று  நிறு­வப்­பட்­டது.  அதன்  இணைத்­த­லை­வர்­க­ளாக  நான் உட்­பட  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைசர்  முஸ்­தபா, துமிந்த திசா­நா­யக்க மற்றும்  சுவா­மி­நாதன்  ஆகியோர்  செயற்­பட்டோம்.

தற்­போது  நீண்­ட­காலம் இடம் பெயர்ந்­தோர்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கென புதிய  அமைச்­சொன்றே உரு­வாக்­கப்­பட்­டு­விட்­டது.  இது எமது போராட்­டங்­க­ளுக்குக் கிடைத்த வெற்­றி­யாகும்.

அத்­தோடு கூட்­டு­றவு  அபி­வி­ருத்­தியும் எனது அமைச்­சுடன்  இணைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அமைச்சின் மூலம் எவ்­வித பேதங்­க­ளு­மின்றி எனது பணி­யினை முன்­னெ­டுப்பேன்.  இதுவரைகாலம் மீள்குடியேறமுடியாத பல்வேறு  சோதனை களுக்குட்பட்டிருந்த  மக்களது பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும்  என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.