புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்

அமைச்சர்அலி சப்ரி

0 659

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டாத வகையில், சர்­வ­தேச அள­வு­கோல்­க­ளின்­படி தயா­ரிக்­கப்­பட்ட புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் எதிர்­வரும் சில தினங்­களில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும் என வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்தார்.

இந்­நாட்டு மக்­களின் மனித உரி­மை­களை பாது­காக்கும் வகையில் சம­நி­லை­யான சட்­ட­மொன்றைக் கொண்­டு­வரும் நோக்கில் தற்­போ­துள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்டம் திருத்­தப்­ப376ட்­ட­தா­கவும் அமைச்சர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி இதனைத் தெரி­வித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அலி சப்ரி,
“சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அள­வு­கோல்­க­ளின்­ப­டியும், நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டாத வகை­யிலும், நாட்டு மக்­களின் மனித உரி­மை­களைப் பாது­காக்கும் வகை­யிலும் சம­நி­லை­யான சட்­டத்தைக் கொண்­டு­வரும் நோக்­கத்­துடன் தற்­போ­துள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் நீதி­ய­மைச்­சரின் தலை­மையில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு, இந்த புதிய சட்டம் சாத­க­மான மட்­டத்தில் திருத்­தப்­பட்­டுள்­ளது. நமது நாட்டில் சட்­டங்­களைத் திருத்­தவும், புதிய சட்­டங்­களை உரு­வாக்­கவும் ஒரு பொறி­முறை உள்­ளது. எனவே அந்த முறை­க­ளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்ட பிறகு, இந்த சட்டம் குறித்த புரி­தலை நாட்டு மக்கள் அனை­வரும் பெற முடியும்.

இதன்­படி, பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் நீக்­கப்­பட்டு, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் என்ற இந்த புதிய சட்­டத்தை, இந்த வாரத்­திலோ அல்­லது அடுத்த வாரத்­திலோ விரை­வாக வர்த்­த­மா­னியில் வெளி­யிட  எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதன் பின்னர் முதலாம் வாசிப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதன்­படி, இந்­நாட்டு மக்­க­ளுக்கு இந்த சட்டம் தொடர்பில் கருத்­து­வே­று­பா­டுகள் இருப்பின், ஒரு வாரத்­திற்குள் அதை சவா­லுக்கு உட்­ப­டுத்தி உயர் நீதி­மன்­றத்­திற்கு செல்லும் வாய்ப்பும் உள்­ளது.

உயர் நீதி­மன்­றத்­திற்கு தனி­யான, விசா­ரணை நீதி­மன்ற அதி­காரம் உள்­ளது. அதன் பிர­காரம் உயர் நீதி­மன்றம் வழங்­கக்­கூ­டிய அறி­வு­றுத்­தல்­க­ளின்­படி, மேலும் திருத்­தங்­களை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ராக உள்­ளது. இந்த புதிய சட்டம் ஏற்­க­னவே உள்ள சட்­டத்­துடன் ஒப்­பி­டும்­போது மிகவும் முற்­போக்­கான புதிய விட­யங்­க­ளு­ட­னேயே திருத்­தப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் முதன்­மு­தலில் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்­திற்­காக கொண்டு வரப்­பட்­டது. ஆனால் தொடர்ந்தும் இந்­நாட்டில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் தீவி­ர­மாக இடம்­பெற்­றதன் கார­ண­மாக, இன்­று­வரை பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் என்­பது தொடர்ந்தும் அமுலில் உள்ள ஒரு சட்­ட­மாக இருக்­கின்­றது. ஆனாலும் 2009 இல் யுத்தம் நிறை­வுக்கு வந்த பின்னர் இந்த சட்டம் தேவையா? என பல்­வேறு விமர்­ச­னங்கள் இது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்டு வந்­ததன் கார­ண­மாக, 2017 மற்றும் 2018 இல்,  இந்த சட்­டத்­திற்கு திருத்­தங்­கள கொண்­டு­வர முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன.

ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக 2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்­குதல் கார­ண­மாக அந்த முயற்­சிகள் தடைப்­பட்­ட­துடன், மீண்டும் இந்த பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை வலு­வாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கருத்­துகள்  மேலோங்­கின.

பின்னர், கடந்த கடந்த காலங்­களில் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்ற பின்னர், பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை தளர்த்­து­வ­தற்­கான வேலைத்­திட்டம் ஒன்றை தயா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. 2021 செப்­டெம்பர் மாதத்தில், பொலிஸ் மா அதிபர், பயங்­க­ர­வாத செயல்­களில் நேர­டி­யாக ஈடு­பட்­ட­வர்­களைத் தவிர வேறு யாரையும் இந்த சட்­டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது என்று பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு ஒரு சுற்­ற­றிக்கை மூலம் அறி­வு­றுத்­தினார்.

இதன்­படி, பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்கை விகி­தா­சார அடிப்­ப­டையில் குறைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ், தடுப்புக் காவலில் வைத்­தி­ருக்கும் காலத்­திற்கு எந்த எல்­லையும் இருக்­கவும் இல்லை.

ஆனால், இந்த புதிய சட்­டத்தின் மூலம் 60 நாட்கள் மாத்­தி­ரமே தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க முடியும். மேலும், அவர்­களை சட்ட பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மையங்­களில் மாத்­தி­ரமே தடுத்து வைக்­கவும் முடியும். இந்தப் புதிய சட்­டத்­திற்கு ஏற்ப ஒரு­வரைக் கைது செய்த பிறகு, 48 மணி நேரத்­திற்குள் நீதி­ப­தியின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்தி இது தொடர்பில் விப­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்டும்.

மேலும், ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் (confession) அடிப்­ப­டையில் யாருக்கும் வழக்குத் தொடர முடி­யாது. அவ்­வாறு வழக்குத் தொடர வேண்­டு­மெனில், அது பொது­வான சட்­டத்­தின்­படி நீதி­ப­தியின் முன் செய்­யப்­பட்ட ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் படியே அமைய வேண்டும்.

புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர், சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சமூகம், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறுபட்டவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தினோம்.
அதன்படி, புதிய பரிந்துரைகளுடன் திருத்தப்பட்ட சட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.