முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப் போகும் தாக்கங்கள்

0 828

சட்டத்தரணி
சபானா குல் பேகம்

இலங்­கையின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யா­னது, பல தசாப்த கால முன்­னெ­டுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்ஷூப் அவர்­களின் தலை­மை­யி­லான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நீதி அமைச்­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்து உத்­வேகம் அடையத் தொடங்­கி­யது என்­பது உண்மை. பல பிரச்­சி­னை­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் வகையில் ஆழ­மாக ஆரா­யப்­பட்டு சமர்ப்­பிக்­கப்­பட்ட இவ்­வ­றிக்கை சில முஸ்­லிம்கள் மத்­தியில் பல விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்டு, இது ஷரீஆவிற்கு முரண்­பட்­டது என்று அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா உட்­பட சில குழுக்­க­ளி­னாலும் தவ­றாகப் பேசப்­பட்ட ஒரு அறிக்­கை­யாக அமைந்­தி­ருந்­தது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் முற்­றிலும் இல்­லாது ஒழிக்­கப்­பட வேண்டும் என்று ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரினால் தனி நபர் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டமை போன்ற பல அழுத்­தங்­களின் பின்னர் ஷரீ­ஆவிற்கு முர­ணான விட­யங்கள் என முன்னர் கூறப்­பட்ட அதே விட­யங்­களை யார் அவ்­வாறு கூறி­னார்­களோ அவர்­களே அவை ஷரீ­ஆ­விற்கு உட்­பட்­டது என்று முன்மொழிந்த விட­யத்­தையும் நாம் மறக்க முடி­யாது. இது ஒரு வர­லாறு.

இதன் பின்னர் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி அவர்­க­ளினால் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைக் குழுவின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் மீண்டும் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது.

ஷரீஆ என்றால் அது எக்­கா­லத்­திற்கும் ஒரே மாதி­ரி­யா­ன­தாக இருக்க வேண்டும். எமது தேவை­க­ளுக்கு ஏற்ற வகை­யிலும், எம்மீது செலுத்­தப்­ப­டு­கின்ற அழுத்­தங்­களின் பிர­தி­ப­லிப்­பா­கவும் ஷரீ­ஆவின் நிலைப்­பாடு மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகி, மீண்டும் அவ்­வா­றான அழுத்­தங்கள் குறையும்போது எம் பிடி­வாதப்போக்கு தலை­தூக்­கு­வ­தற்கு எமது முஸ்லிம் சமூகம் எவ்­வாறு நியாயம் காணப்போகின்­றது என்­பது இலங்­கையின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு முஸ்­லிமும் தனக்குள் கேட்டு நியாயம் காண வேண்­டிய ஒரு கேள்­வி­யாகும்.

இவ்­வாறு இருக்­கையில் கடந்த ஜுன் மாதம் எட்டாம் திகதி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் (ஒரு சிலர் தவிர) கையொப்பம் இடப்­பட்ட, இது தொடர்­பான அவர்­க­ளது சிபா­ரி­சுகள் அடங்­கிய, நீதி அமைச்­ச­ருக்கு அவர்­க­ளினால் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற ஒரு ஆவணம் எம்­மத்­தியில் உல­வு­கின்­றது. எமது முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளினால் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­னரும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்­திலும், இவ்­வாண்டு ஜூன் எட்டாம் திக­தியும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலைப்­பா­டு­களில் மாறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன என்­ப­துவும் ஒரு கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். எது­வுமே அறி­யாத, பாதிக்­கப்­பட்ட, தங்­க­ளுக்கு நீதியே கிடைக்­காதா என ஏங்கி தவித்துக் கொண்­டி­ருக்­கின்ற அப்­பாவி பாமர மக்­களை எண்ணி கவ­லையும் வேத­னையும் அடைந்து கொண்டு 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் திகதி எமது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையெ­ழுத்­துடன் (ஒரு சிலரைத் தவிர) நீதி­ய­மைச்­சிற்கு வழங்­கப்­பட்ட அறிக்­கை­யென எம்மத்­தியில் உல­வு­கின்ற இந்த அறிக்­கையின் மீது நாம் ஒரு கண்­ணோட்­டத்தை செலுத்­துவோம். இவ்­வ­றிக்­கை­யா­னது அமைச்சர் அலி சப்ரி அவர்­க­ளினால் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைக் குழுவின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்னர் இவர்­களால் வழங்­கப்­பட்ட அறிக்­கை­யாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மத்­ஹப்­க­ளுக்கு சட்­டங்­களும், நிவா­ர­ணங்­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா மற்றும் கியாஸ் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையில் சிறந்த நிவா­ர­ணங்­களைப் பெறும் வகையில் சட்டம் விரி­வாக்­கப்­பட வேண்டும் என ஆலோ­சனைக் குழு பரிந்­துரை செய்­துள்ள போது, இந்த அறிக்­கையில், ஷாபி மத்­ஹப்பை முன்­னி­லைப்­ப­டுத்­திய வகையில் சட்டம் அமைய வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­ப­ரிந்­து­ரைக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில், இலங்­கையின் பெரும்­பான்­மை­யான பௌத்­தர்கள் ஏதேனும் விட­யங்­களில் மகா­ய­னாவைக் குறிப்­பி­டாமல் தேர­வா­தத்­தையே பின்­பற்­று­கி­றார்கள் என்று உதா­ர­ணமும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம், இஸ்­லா­மிய ஷரீஆ கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் அதா­வது, அல் குர்ஆன், அல்­ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டை­யி­லேயே அமைய வேண்டும் என்று இவ்­வ­றிக்­கையின் முதற் பந்­தியில் கூறி­விட்டு, உடன் அடுத்த பந்­தியில், ஷாபி மத்­ஹப்­பிற்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகையில் சட்டம் அமைக்­கப்­பட வேண்டும் என்று, முன்­னுக்குப் பின் முர­ணாக செய்­யப்­பட்­டுள்ள இந்த பரிந்­து­ரை­யினால் மக்­களே! உங்­க­ளுக்­கு­ரிய நிவா­ர­ணங்கள் ஷாபி மத்­ஹப்பின் கட்­டுப்­பாட்­டுக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட போகின்­றன.

ஒரு முஸ்லிம், எந்த மத்­ஹபை பின்­பற்­று­பவர் என்று யார் தீர்­மா­னிப்­பது? அல்­லது ஒரு முஸ்லிம் கட்­டா­ய­மாக ஒரு மத்­ஹப்பை பின்­பற்றித் தான் ஆக வேண்டும் என்று ஷரீ­ஆவில் எந்த இடத்தில் உள்­ளது? என்­பதை இவர்கள் மக்­க­ளுக்கு கோடிட்டுக் காட்ட வேண்டும்.

சட்ட ஏற்­பு­டை­மையில் இச்­சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பு­டைத்­தான சட்டம் என்­ப­தற்கு பதி­லாக, “இஸ்­லாத்தைப் பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கு -Persons professing Islam” ஏற்­பு­டைத்­தான சட்டம் என திருத்­தப்­பட வேண்டும் என ஆலோ­சனைக் குழு முன்­வைத்த பரிந்­து­ரையை இவ்­வ­றிக்கை நிரா­க­ரித்­துள்­ளது. “முஸ்லிம்” என்ற சொல் எவ்­வித மாற்­றங்­களும் செய்­யப்­ப­டாமல் அவ்­வாறே அமைய வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. தாங்கள் “முஸ்­லிம்கள்” என்று உரி­ய­வர்கள் பிர­க­டனம் செய்­யாத வரையில் ஒரு­வரை அவர் “முஸ்லிம்” என்று நிரூ­பிக்க முடி­யாது. ஆகவே, “முஸ்லிம்” என்ற சொல் சட்­டத்தில் மாற்­றப்­ப­டாமல் இருக்க வேண்டும் என்று காரணம் கூறப்­பட்­டுள்­ளது. “முஸ்லிம்” என்றால் “இஸ்­லாத்தைப் பின்­பற்­று­பவர்” என்று அர்த்தம். “Persons professing Islam” என்­றாலும் “இஸ்­லாத்தைப் பின்­பற்­று­பவர்” என்­றுதான் அர்த்தம். “Persons professing Islam” என்­பது “முஸ்லிம்” என்ற சொல்லை விட சட்­ட­ரீ­தியில் ஆணித்­த­ர­மா­னதும், உறு­தி­யா­னதும், விரி­வா­ன­து­மாகும் என்­பது ஏன் உண­ரப்­ப­ட­வில்லை என்று மக்­களே சற்று சிந்­தி­யுங்கள்.

“நிகாஹ் நிகழ்வு” என்று தற்­போ­துள்ள சட்­டத்தில் உள்ள சொற்­றொ­டரை “Solemnization – புனி­த­மாக நிறை­வேற்­றுதல்” என்ற சொற்­றொ­ட­ராக மாற்­று­வ­தற்கு ஆலோ­சனை சபை முன்­வைத்த கோரிக்­கையை நிரா­க­ரித்து “நிகாஹ் நிகழ்வு” என்ற சொற்­றொடர் எவ்­வித மாற்­றமும் செய்­யப்­ப­டாமல் அமைய வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. அரபு மொழியில் “நிகாஹ்” என்­கின்றோம். ஆங்­கி­லத்தில் “Solemnization”என்­கின்றோம். மொழி பெயர்ப்பிற்கு ஏன் இவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றது? “Solemnization” என்றால் சட்ட ரீதியில் சற்று வலி­மை­யா­னது. “நிகாஹ்” என்ற அரபு மொழியை கூறி மக்­களை அஞ்ச வைத்து எழுத்­திலே ஆதா­ரங்கள் எதையும் வைக்­காமல் தற்­போது நடை­பெ­று­வது போலவே விரும்­பி­ய­வாறு விரும்­பிய எண்­ணிக்­கையில் திரு­மணம் செய்து கொள்­ளலாம். பின்னர் பொறுப்­பு­டை­மைகள், சட்ட ரீதி­யிலும், சமூக ரீதி­யிலும், திரு­ம­ணத்தின் ஊடாக சுமத்­தப்­படும் போது, ஆதாரம் எதுவும் இல்­லாத சந்­தர்ப்­பத்தில், “எனக்கும் இதற்கும் சம்­பந்­தமே இல்லை” என மனை­வி­யையும், பிள்­ளை­க­ளையும் தவிக்க விட்டு தப்­பித்துக் கொள்­ளலாம்.

திரு­மண பதிவுப் பத்­தி­ரத்தில் மண­ம­களின் கையொப்­பத்­திற்கு அனு­மதி அளித்­துள்ள அதே­வேளை, ஒரு செல்­லு­ப­டி­யான திரு­ம­ணத்­திற்கு வலியின் கையொப்பம் அவ­சி­ய­மான தேவைப்­பாடு என்று வலி­யு­றுத்­து­வதன் மூலம் அம்­ம­ண­ம­களின் கையொப்­பத்­திற்கு எவ்­வித பெறு­மா­னங்­க­ளையும் வழங்­காத வகையில் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போ­துள்ள சட்­டத்­திலும், வலியின் தேவைப்­பாடு ஷாபி மத்­ஹப்­பிற்கு மாத்­தி­ரமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஏனைய மத்­ஹப்­களை பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கு வலியின் தேவைப்­பாடு கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அத்­துடன் எந்த மத்­ஹப்பை பின்­பற்­று­ப­வர்­க­ளாக இருந்­தாலும் குறிப்­பிட்ட சில சந்­தர்ப்­பங்­களில் வலியின் தேவைப்­பாடு அவ­சியம் இல்லை என்று கட்­டளை பிறப்­பிப்­ப­தற்கு மாத்­தி­ரமே காதிக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

மண­ம­களின் கையொப்­பத்­திற்கு எவ்­வி­த­மான சட்ட வலி­து­டை­மையும் வழங்­காமல், மேற்­கூ­றப்­பட்ட விட­யங்கள் அனைத்­தையும் புறக்­க­ணித்து, வலியின் தேவைப்­பாட்டை திரு­மண வலி­து­டை­மைக்கு கட்­டா­யப்­ப­டுத்தி, செய்­யப்­பட்­டுள்ள இந்த சிபா­ரி­சு­களின் மூலம் ஏனைய மத்­ஹப்­களை பின்­பற்­று­ப­வர்கள் முஸ்­லிம்­களே அல்ல என்று கூற எத்­த­னிக்­கப்­ப­டு­கின்­றதா? அல்­லது தற்­போது சட்­டத்தில் உள்ள காதிக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் மூலம், வலி அவ­சியம் இல்லை என்ற கட்­ட­ளையின் பிர­காரம் நடை­பெ­று­கின்ற திரு­ம­ணங்கள், அதே­போன்று நடை­பெற்ற திரு­ம­ணங்கள், ஏனைய மத்­ஹப்­­களை பின்­பற்­று­கின்­ற­வர்­களால் வலியின் தேவைப்­பாடு இல்­லாமல் நடை­பெற்ற திரு­ம­ணங்கள் அனைத்தும், இஸ்­லாத்­திற்கு முர­ணாக செய்­யப்­பட்ட திரு­ம­ணங்கள் என்று கூற எத்­த­னிக்­கப்­ப­டு­கின்­றதா? மக்­களே சற்று சிந்­தி­யுங்கள்!

திரு­மணப் பதிவு சம்­பந்­த­மாக செய்­யப்­பட்ட சிபா­ரி­சுகள் இவ்­வாறு அமை­கின்­றன. திரு­ம­ணத்தை பதிவு செய்தல் கட்­டாயம். ஆனால், திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டா­விட்­டாலும் அத்­தி­ரு­மணம் செல்­லு­ப­டி­யான திரு­ம­ணமே. நிகாஹ் முடிந்த உட­னேயே திரு­மணம் பதிவு செய்­யப்­பட வேண்டும். திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டா­விட்டால் அது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக்­கப்­பட வேண்டும். இதுவே இந்த சிபா­ரி­சுகள். சற்று நடை­முறைச் சாத்­தி­ய­மாக சிந்­திக்க மாட்­டார்­களா? தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக்­கப்­பட்டால், யாருக்கு எதி­ராக யார் வழக்­கி­டு­வது? யாருக்கு யார் தண்­டனை பெற்றுக் கொடுப்­பது? எது தண்­டனை? தண்டப் பணமா? சிறைத் தண்­ட­னையா? வச­தி­யுள்­ள­வர்கள், தண்டப் பணத்தைச் செலுத்தித் தப்­பித்துக் கொள்­வார்கள். வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கு தண்­டப்­பணம் செலுத்­தா­விடில், தண்­டனை சிறை­வாசம். திரு­மணம் செய்த தம்­ப­தியர் சிறை­வாசம் அனு­ப­விக்கப் போகின்­றார்கள். சட்­டத்தை வசதி படைத்­த­வர்­க­ளுக்கு மாத்­திரம் சார்­பா­கவே அமைத்துக் கொள்ள எத்­த­னிக்­கப்­ப­டு­கின்­றது.

வழக்­காற்று திரு­ம­ணங்­களை, அதா­வது பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று சிபா­ரிசு செய்து அதற்­கான கார­ணங்­க­ளாக, அவ்­வாறு அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­விடில், அவ்­வா­றான திரு­ம­ணங்­களின் மூலம் பெண்­க­ளுக்­கும், பிள்­ளை­க­ளுக்கும் கிடைக்­கின்ற சொத்­து­ரி­மை­களும், பரம்­பரைச் சொத்­து­க­ளுக்­கு­ரிய சட்ட அங்­கீ­கா­ரங்­களும் இல்­லாமல் போவ­தனால், பெண்­களும், பிள்­ளை­களும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்று தமது சமூ­கத்தில் உள்ள பெண்­க­ளையும் பிள்­ளை­க­ளையும் பாது­காக்க முனை­கின்­றார்கள்.

பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­க­ளினால் கண­வனோ, தகப்­பனோ தான் திரு­ம­ணமே செய்­ய­வில்லை என்று ஆதா­ரங்கள் எதுவும் இல்­லாத கார­ணத்­தினால் தப்­பித்துக் கொள்­கின்ற போது, உண்ண உண­வின்றி, உடுக்க உடை­யின்றி, வசிக்க இட­மின்றி, வாழ வழி­யின்றி தவிக்­கின்ற பெண்­க­ளி­னதும், பிள்­ளை­க­ளி­னதும் நிலைப்­பா­டு­க­ளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றோம்.

எதிர்­கா­லத்தில் வரப் போகின்ற சொத்­து­ரி­மை­களைப் பற்றி சிந்­திக்கப் போகின்­றோமா? நிகழ்­கா­லத்தில் அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­ப­டு­கின்ற உணவு, உடை, உறையுள் போன்­ற­வற்றைப் பற்றி சிந்­திக்கப் போகின்­றோமா? மக்­களே அவ­சியம் எது? அத்­தி­யா­வ­சியம் எது என்று சிந்­தி­யுங்கள். திரு­மணப் பதிவு கட்­டா­ய­மாக்­கப்­படக் கூடாது என ஷரீ­ஆவின் எந்த இடத்தில் கூறப்­பட்­டுள்­ளது என இவர்கள் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் திரு­மணப் பதி­வா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­படக் கூடாது என்று பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. திரு­மணப் பதிவு அதி­க­ள­வான ஆண்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் நடை­பெ­று­வ­தா­கவும், திரு­மணப் பதி­வுகள் பெரும்­பாலும் பள்­ளி­வா­சல்­களில் நடை­பெ­று­வது பாரம்­ப­ரிய கலாச்­சாரம் என்­ப­த­னாலும் பெண்­க­ளினால் சில சந்­தர்ப்­பங்­களில் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்ல முடி­யாது காணப்­படும் என்றும் இச் சிபா­ரி­சு­க­ளுக்­கான கார­ணங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இஸ்­லா­மிய வர­லா­றுகள் அறி­யப்­ப­டாமல், உண­ரப்­ப­டாமல் செய்­யப்­பட்ட சிபா­ரி­சு­க­ளா­கவே இவை காணப்­ப­டு­கின்­றன. வர­லா­று­களை திரும்பிப் பார்க்­கின்ற போது பெண்­க­ளுக்கு இஸ்­லாத்தில் வழங்­கப்­பட்­டுள்ள அந்­தஸ்­து­களும், பெண்­களின் பங்­க­ளிப்­பு­களும் எத்­தனை முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­கின்­றன என்­பது இச் சிபா­ரி­சு­க­ளினால் மறக்­க­டிப்­பட்­டுள்­ளது. பெண்கள் பள்­ளி­வா­ச­லுக்கு எந்த சந்­தர்ப்­பத்­திலும் செல்லக் கூடாது என்று எந்த தடை­யையும் இஸ்லாம் விதிக்­கவும் இல்லை. திரு­மணப் பதி­வுகள் கட்­டா­ய­மாக பள்­ளி­வா­சல்­களில் தான் நடை­பெற வேண்டும் என்று இஸ்லாம் எந்த கட்­டாய விதி­க­ளையும் அமைக்­கவும் இல்லை. இவ்­வாறு இருக்­கையில் முஸ்லிம் பெண்கள் திரு­மணப் பதி­வா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­படக் கூடாது என்று முன் வைக்­கப்­பட்­டுள்ள சிபா­ரிசு இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்கு மாத்­தி­ர­மல்ல, உலக மனித உரிமைக் கோட்­பா­டு­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, இஸ்­லா­மிய மனித உரிமைக் கோட்­பா­டு­க­ளுக்கும் முற்­றிலும் முர­ணா­னது என்­பதை சமூகம் உணர வேண்டும்.

பெண் காதி­களின் நிய­மனம் தொடர்பில் இச் சிபா­ரி­சு­களில் மிகவும் சம­யோ­சி­த­மான உத்­திகள் கையா­ளப்­பட்­டுள்­ளன. காதிகள் நிய­மனம் தொடர்­பி­லான முழுப் பொறுப்­பையும் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கி­யுள்ள அதே­வேளை, இஸ்­லா­மியக் கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் ஆண்கள் தான் காதி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று ஒரு துப்பும் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­விற்கு இச் சிபா­ரி­சு­க­ளினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் பார்­வையில், நாங்கள் பெண் காதிகள் நிய­ம­னத்தை எதிர்க்­க­வில்லை என்ற ஒரு எண்­ணப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இச்­ச­ம­யோ­சி­தத்தை என்­ன­வென்று சொல்­வது? காதிகள் நிய­ம­னங்கள், வர்த்­த­மா­னியில் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு நேர்­முக பரீட்­சை­களின் பின்னர் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வி­னால்தான் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

பல முஸ்லிம் நாடு­களில், பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், பல இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு இஸ்­லாத்தில் எவ்­வித தடையும் இல்லை என்று கூறி­யுள்ள போதிலும், இலங்­கையில் மட்டும் பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­பட முடி­யாது என்று குரல் எழுப்­பு­வது எந்த விதத்தில் நியாயம்? முஸ்லிம் பெண்­களை பாது­காக்­கின்றோம் என்ற பெயரில் அவர்­களை அடி­மைப்­ப­டுத்­து­வது மனித உரிமைக் கோட்­பா­டு­க­ளுக்கும் இஸ்­லாத்­திற்கும் முர­ணா­னது என்­பதை மக்கள் உணர வேண்டும்.

திரு­மண வயதைப் பொறுத்­த­வ­ரையில் ஆண் பெண் இரு பாலா­ருக்கும் திரு­ம­ணத்­திற்­கான ஆகக் கூடிய வய­தெல்­லையை 18 ஆக ஆக்க வேண்டும் என்று சிபா­ரிசு செய்­துள்ள அதே­வேளை, 16 வய­திற்கும் 18 வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு காதியின் அனு­ம­தி­யுடன் திரு­மணம் நடை­பெ­றலாம் என்று ஒரு விலக்­க­ளிப்பும் இச் சிபா­ரி­சு­களில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் முஸ்­லிம்­களை பொறுத்­த­வ­ரையில் பால்ய திரு­ம­ணங்கள் மிகக் குறை­வா­கவே நடை­பெ­று­கின்­றன என்று புள்ளி விபரம் ஒன்றும் இவ்­வ­றிக்­கையில் காட்­டப்­பட்­டுள்­ளது. அறிக்­கையில் காட்­டப்­பட்­டுள்ள திரு­ம­ணங்கள், பதிவு செய்­யப்­பட்ட திரு­ம­ணங்கள் மாத்­தி­ரமே என்­ப­துவும், முஸ்­லிம்­களின் திரு­ம­ணங்கள் பதிவு செய்­யப்­பட வேண்­டி­யது கட்­டாயம் இல்லை என்­ப­தனால் பதிவு செய்­யப்­ப­டாத பால்ய திரு­ம­ணங்­க­ளுக்கு புள்ளி விப­ரங்கள் எதுவும் இல்லை என்­ப­துவும் மறந்தும் இருக்­கலாம். மறைக்­கப்­பட்டும் இருக்­கலாம்.

18 வய­திற்கு குறைந்­த­வர்கள் “சிறு­வர்கள்” என்ற சட்­டத்தை நாம் ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்றோம். சிறு­வர்­க­ளுக்கு கட்­டாயக் கல்வி அவ­சியம் என்­ப­தையும் நாம் ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்றோம். சிறு­வர்கள் உரி­மைகள் பிர­க­ட­னத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள நாட்டின் பிர­ஜை­க­ளாக நாம் இருக்­கின்றோம். ஆனால் சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைக்கு நாம் வழி­கோ­லு­ப­வர்­க­ளாக இருக்­கின்றோம். இதனை எவ்­வாறு நியா­யப்­ப­டுத்­து­வது?

சவுதி அரே­பியா உள்­ளிட்ட பல முஸ்லிம் நாடு­களின் திரு­ம­ணத்­திற்­கான ஆகக் குறைந்த வய­தெல்­லையை 18 ஆக மாற்­று­வ­தற்­கான திருத்தச் சட்டம் அமு­லாக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் இலங்­கையின் முஸ்லிம் சட்­டத்தில் மாத்­திரம் மாற்றம் செய்­வ­தற்கு ஏன் இந்த தயக்கம்?

காதி முறை­மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு சாத­க­மான கார­ணங்­க­ளாக, இல­கு­வான அணுகல், குறைந்த செலவு, குறைந்த நேரம், தரப்­பினர் தனி­யாக விசா­ரிக்­கப்­ப­டுவர், மூன்று மேன்­மு­றை­யீ­டுகள் அதா­வது காதிகள் சபை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் மற்றும் உயர் நீதி­மன்றம் என்­பன காணப்­ப­டு­கின்­றன என கூறப்­பட்­டுள்­ளது. காதி முறைமை, ஏனைய நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­வ­தனால் பின்­வரும் பாதிப்­புக்கள் ஏற்­படும் என்றும் கருத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. செலவு அதிகம், காலம் அதிகம், சட்­டத்­த­ர­ணி­களின் உத­வி­களை நாட வேண்­டிய பொறுப்பு போன்­றவை காணப்­படும் என்றும், இதன் மூலம் பெரும்­பா­லான முஸ்லிம் பெண்கள் நிவா­ரணம் தேடிப் பெறு­வது மறுக்­கப்­ப­டு­கி­றது என்றும், இதனால் அவர்­க­ளது மன அழுத்­தங்கள் அதி­க­ரிக்கும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது. பெண்­களில் கரி­சனை காட்டிப் பெண்­களின் மன அழுத்­தங்­களை குறைப்­ப­தற்­காக, காதி முறை­மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து, அது தொடர்­பி­லான நிவா­ர­ணங்­க­ளுக்­காக வேண்டி, காதி முறை­மையை நாடிய அனு­ப­வங்­களை கொண்ட பெண்­களே! ஆண்­களே! சற்று உங்கள் மனதை தொட்டு சொல்­லுங்கள். இந்த கருத்து சரி­யா­ன­வையா? நீதியை இல­கு­வாக அணுக முடி­கின்­றதா? செல­வில்­லாமல் கச்­சி­த­மாக காரி­யத்தை நிறைவு செய்ய முடி­கின்­றதா? கால, நேரம் வீணா­க­வில்­லையா? நீங்கள் தனி­யாக, நிதா­ன­மாக விளங்­கப்­ப­டு­கின்­றீர்­களா? நீங்கள் எவ்­வித மன அழுத்­தங்­க­ளுக்கும் ஆளா­க­வில்­லையா?

மூன்று மேன்­மு­றை­யீட்டு நடை­மு­றை­களை சாத­க­மான ஒரு கார­ண­மாக முன் வைக்கும் போது அதில் காணப்­ப­டு­கின்ற கால தாமதம் உண­ரப்­ப­ட­வில்­லையா? பொத்­துவில் முதல் பொலன்­ன­றுவை வரை­யுள்ள காதி மேன்­மு­றை­யீ­டுகள் கல்­முனை காதிகள் சபைக்கும், ஏனைய அனைத்துப் பாகங்­க­ளிலும் உள்ள காதி மேன்­மு­றை­யீ­டுகள் கொழும்பு காதிகள் சபைக்கும் நியா­யா­திக்கம் பெற்­றுள்­ள­மை­யினால், போக்­கு­வ­ரத்­திற்கும், தங்­கு­மிட வச­தி­க­ளுக்கும், மக்கள் படும் அவ­லங்­க­ளுக்கு இங்கு எவ்­வாறு தீர்வு காணப்­படப் போகின்­றது? மாவட்ட நீதி­மன்­றங்­களும், அதற்­கு­ரிய மேன்­மு­றை­யீட்டு நியா­யா­திக்கம் கொண்ட மாகாண மேல் நீதி­மன்­றங்­களும் அந்­தந்த பிர­தே­சங்­க­ளி­லேயே காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் இத்­த­கைய பிரச்­சி­னைகள் ஓர­ள­விற்­கா­வது தீர்க்­கப்­படும் என்ற உண்­மையை நாம் ஏன் மறைக்­கின்றோம்? மறுக்­கின்றோம்?

ஒரு முறை­மை­யற்ற நிலைப்­பாட்டில் இருந்து ஒரு நீதி முறை­மை­யான கட்­ட­மைப்­பிற்குள் நாம் முன்­னேறிச் செல்லப் போகின்றோம் என்ற உண்­மையை மக்­க­ளுக்கு நாம் ஏன் மறைக்­கின்றோம்?

பல­தார மணம் நிபந்­த­னை­க­ளினால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தனை ஆமோ­தித்­துள்ள இச் சிபா­ரி­சுகள், நிபந்­த­னை­க­ளையும், சட்­டத்­தையும் மீறி செய்­யப்­ப­டு­கின்ற பல­தார மணமும் செல்­லு­ப­டி­யா­ன­தா­கவே இருக்க வேண்டும் என்றும் சிபா­ரிசு செய்­துள்­ள­தனால், விதிக்­கப்­பட்ட மட்­டுப்­பா­டு­களின் அமு­லாக்கும் தன்மை எந்த அள­விற்கு வலி­து­டைமை பெறும் என்ற கேள்வி உரு­வா­கின்­றது. நிபந்­த­னை­களை மீறிய பல­தார மணம் தண்டப் பணத்­திற்­கு­ரிய தண்­ட­னை­யாக கரு­தப்­பட வேண்­டுமே தவிர செல்­லு­ப­டி­யற்­ற­தாக மாற்­றப்­படக் கூடாது என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. பணம் உள்­ள­வர்கள் தண்டப் பணத்தை செலுத்தி தப்­பித்துக் கொள்­வார்கள். பணம் இல்­லா­த­வர்கள் தண்டப் பணம் செலுத்­தா­மைக்கு சிறைத் தண்­டனை அனு­ப­விப்­பார்கள். யாருக்கு எதி­ராக யார் முறைப்­பாடு செய்­வது? கணவன் சிறைத் தண்­டனை அனு­ப­விக்கும் போது, மனை­வி­யி­னதும் பிள்­ளை­க­ளி­னதும் நிலை என்ன? தற்­போ­துள்ள சட்­டத்தின் பிர­காரம் பல­தார மணத்­தினால் பெண்­க­ளுக்கும், சிறு­வர்­க­ளுக்கும் நடை­பெ­று­கின்ற பாதிப்­பு­களை விடவும் மேல­தி­க­மான பாதிப்­பு­களை இப்­பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே இந்த சிபா­ரி­சுகள் அமைந்­துள்­ளன என்­பதை மக்கள் உணர வேண்டும்.

விவா­க­ரத்தும், விவா­க­ரத்து நடை­மு­றை­களும் மத்­ஹபு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று இந்த சிபா­ரி­சு­களில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கண­வனின் தவ­று­களை அடிப்­ப­டையாகக் கொண்டு மனை­வி­யினால் கோரப்­ப­டு­கின்ற பஸ்ஹ் விவா­க­ரத்­துக்கள் மத்­ஹ­பு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அமு­லாக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு இருக்கும் இந்த நிலையில் சில மத்­ஹபு­களில் கண­வனின் தவ­று­களை அடிப்­ப­டை­யாக வைத்து மனை­வி­யினால் விவா­க­ரத்துப் பெற முடி­யாத அள­விற்கு இறுக்­க­மான சட்ட திட்டம் காணப்­ப­டு­கின்ற போது இத்­த­கைய பெண்­க­ளுக்கு இந்த சிபா­ரி­சுகள் மூலம் எவ்­வாறு விடிவு ஏற்­படப் போகின்­றது?

குல்உ விவா­க­ரத்தின் போது, அதா­வது கண­வனில் எவ்­வித தவ­று­களும் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் அக்­க­ண­வ­னோடு வாழ முடி­யாது என்று அந்தப் பெண்­ணினால் கோரப்­ப­டு­கின்ற விவா­க­ரத்து நடை­மு­றையில், கண­வனின் சம்­மதம் கட்­டாயத் தேவைப்­பா­டாக சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. இஸ்லாம், குல்உ விவா­க­ரத்து முறை­களில் இவ்­வாறு தான் கூறு­கின்­றதா என்­பதை நாம் இத­யத்தைத் தொட்டுச் சொல்ல வேண்டும். குல்உ விவா­க­ரத்து முறைக்கு மிகவும் ஆதா­ர­மாக காணப்­ப­டு­கின்ற வர­லாற்றுச் சம்­ப­வத்தை நாம் மறந்து சமூ­கத்­திற்கு, அதிலும் விஷே­ட­மாக பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு, தீங்கு விளை­விக்க முனை­வது மிகவும் தவ­றான ஒரு செயற்­பா­டாகும். நிரூ­பிக்க முடி­யாத வகையில் கண­வ­னினால் நிசப்­த­மாக விளை­விக்­கப்­ப­டு­கின்ற தவறு மற்றும் கொடு­மை­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற பெண்கள், மத்­ஹ­பு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி விவா­க­ரத்து நடை­மு­றை­க­ளுக்கு அவ­சி­ய­மற்ற மட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­ப­டு­கின்ற நிலையில் இதனால் பாதிக்­கப்­ப­டு­கின்ற பெண்கள், குல்உ விவா­க­ரத்­திற்கு கண­வனின் சம்­மதம் கட்­டாயத் தேவை­யாக்­கப்­ப­டு­கின்ற போது, இதனால் பாதிக்­கப்­ப­டு­கின்ற பெண்கள், இவ்­வி­றுக்­க­மான பிணைப்­பு­களில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு எங்கே வழி தேடு­வார்கள்?

காதிக் கட்­ட­மைப்­பிற்கு அப்பால் கண­வ­னினால் மொழி­யப்­ப­டு­கின்ற தலாக் விவா­க­ரத்தை அங்­கீ­க­ரிக்கும் வகையில் அமைந்­துள்ள தற்­போ­துள்ள சட்­டத்தின் பிரிவு 30 ஐ தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிபா­ரிசு செய்­கின்ற போது, இதனால் பாதிக்­கப்­ப­டு­கின்ற பெண்­களும், சிறு­வர்­களும் நிவா­ரணம் தேடி எங்கே செல்­வார்கள் என்­பதை சிந்­திக்கமாட்­டோமா?

எவ்­வித பிரச்­சி­னை­களும் இல்­லா­ம­லேயே விடு­தலை பெறு­வ­தற்கு ஆண்­க­ளுக்கு மட்­டுப்­பா­டுகள் எதுவும் அற்ற சுதந்­தி­ரத்தை வழங்­கு­வ­தற்கு சிபா­ரிசு செய்து அதே­வேளை, பிரச்­சி­னை­க­ளிலும், சிக்­கல்­க­ளிலும் இருந்து விடு­தலை பெறு­வ­தற்கு பெண்­க­ளுக்கு எவ்­வி­த­மான சுதந்­தி­ரங்­க­ளையும் வழங்­காமல், மட்­டுப்­பா­டு­க­ளுக்கு மேல் மட்­டுப்­பா­டு­களை விதித்து, சிபா­ரிசு செய்­வதன் மூலம் என்ன வெற்றி காணப்­படப் போகின்­றது?

அறிக்­கையில் செய்­யப்­பட்ட சிபா­ரி­சு­களில் தற்­போ­துள்ள சட்­டத்தில் உள்ள தலாக், பஸஹ் என்ற சொற்கள் அகற்­றப்­ப­டாமல் இருக்க வேண்டும் என்று சிபா­ரிசு செய்­த­வர்கள், பஸஹ் என்ற ஒரு சொல் தற்­போ­துள்ள சட்­டத்தில் இல்­லவே இல்லை என்­பதை அறிந்து கொள்ளத் தவ­றி­யமை கவ­லைக்­கு­ரிய விடயம்.

விவா­க­ரத்தின் பின்­ன­ரான மத்தா கொடுப்­ப­னவு சட்­டத்தில் சேர்க்­கப்­பட்டு அது தொடர்­பி­லான முழு அதி­கா­ரமும் காதியின் தற்­று­ணிபின் கீழ் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்று சிபா­ரிசு செய்யப்­பட்­டுள்­ளது. மத்தா என்­பது பணம் மாத்­தி­ரமா? அல்­லது அசையும் ஆதனம் மாத்­தி­ரமா? அசை­யாத ஆத­னங்கள் மத்­தா­வினுள் உள்­ள­டக்­கப்­படமாட்­டாதா? மத்தா தவிர்ந்த ஏனைய விவா­க­ரத்து தொடர்­பான நிவா­ர­ணங்கள், உதா­ர­ண­மாக, சொத்­து­ரி­மைகள், சொத்துப் பகிர்­வுகள், இவை தொடர்பில் விசா­ரணை செய்து தீர்ப்பு செய்­வ­தற்­கு­ரிய நியா­யா­திக்கம் காதிக்கு வழங்­கப்­ப­ட­லாமா? இது தொடர்பில் ஏன் சிந்­திக்க தவ­று­கின்றோம்? சிவில் வழக்கு நடை­மு­றை­க­ளுக்கு உட்­பட்ட விவ­கா­ரங்கள் எவ்­வாறு காதியின் நியா­யா­திக்­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது? இது பற்றி ஏன் சிந்­திக்கத் தவ­று­கின்றோம்?

குடி­யியல் நடை­முறைச் சட்டக் கோவையில், இது தொடர்­பான விட­யங்­களில் முஸ்­லிம்கள் விலக்­க­ளிக்­கப்­ப­டு­கின்­றனர். காரணம், முஸ்­லிம்­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் காணப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில், இவை தொடர்பில் எந்த ஏற்­பா­டு­களும் இல்லை. இவ்­வா­றான ஏற்­பா­டுகள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இவை தொடர்­பி­லான நியா­யா­திக்கம் சட்டரீதி­யாக காதிக்கு வழங்­கப்­பட முடி­யாது. ஏனென்றால் காதி, ஒரு நீதி­பதி அல்ல. இதனை எப்­போது உணரப் போகின்றோம்? இதனால் சமூ­கத்­திற்கு ஏற்­ப­டு­கின்ற பாதிப்­பு­க­ளுக்கு எவ்­வாறு நிவா­ரணம் காண போகின்றோம் என்று ஏன் சிந்­திக்க தவ­று­கின்றோம்?

தாப­ரிப்பு தொடர்பில் இவ்­வ­றிக்­கையில் எந்த சிபாரிசுகளும் முன் வைக்கப்படவில்லை. ஆனால் நடைமுறையில் உள்ள சட்டத்தில் காதிக்கு வழங்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களும் காதிக்கு வழங்கப்பட வேண்டும் என மாத்திரம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தாபரிப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தில் காதிக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் உள்ளதே தவிர கட்டளையை அமுலாக்கும் அதிகாரம் இல்லை. கட்டளையை அமுலாக்கும் அதிகாரத்தை காதிக்கு வழங்கவும் முடியாது. ஏனென்றால், காதி, ஒரு நீதிபதி அல்ல. வழங்கப்படுகின்ற கட்டளையை அமுலாக்குவதற்கு கணவன் வாழுகின்ற பிரதேச நீதவான் நீதிமன்றத்திற்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்திற்கு காதியின் அமுலாக்கல் பத்திரம் செல்வதற்கு இடையில் தாபரிப்பு நிலுவைகள் அதிகரித்து விடுகின்றன. இதனை பெற்றுக் கொள்வதற்கு, உரிய இடத்திற்குச் செல்ல வேண்டிய போக்குவரத்து செலவு வேறு. இத்தகைய நடைமுறை சிக்கல்கள் இன்றி பெண்கள் வாழுகின்ற பிரதேச நீதவான் நீதிமன்றத்தினாலேயே முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் பிரகாரம் கட்டளை பிறப்பித்து கட்டளையை அமுலாக்குகின்ற போது, நிலுவைகள் அதிகரிக்காது. செலவுகள் மீதமாகும். உடனடி நிவாரணங்கள் கிடைக்கும். இதனை பற்றி ஏன் சிந்திக்க தவறுகின்றோம்? பெண்களையும் பிள்ளைகளையும் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை சீரழிக்கும் வகையில் சிபாரிசு செய்வது எந்த வகையில் நியாயம் என்பதை சமூகம் உணர வேண்டும்.

மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற விவாக, விவாகரத்து மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலான தீர்ப்புகளுக்கு எதிராக மாகாண மேல் நீதிமன்றங்களில் செய்யப்படுகின்ற மேன்முறையீடுகள், தாபரிப்பு தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களில் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் செய்யப்படுகின்ற மேன்முறையீடுகள் என்பனவற்றின் எண்ணிக்கையையும், இவை தொடர்பில் காதியினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிராக காதிகள் சபைக்கு செய்யப்படுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கையையும், விகிதாசார அடிப்படையில் ஒரு புள்ளி விபரக் கணிப்பீடு செய்கின்ற போது எவை அதிகம் என்கின்ற உண்மை நிச்சயமாக புரியும். நிதர்சனத்தை மக்களுக்கு கோடிட்டுக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற போது மக்களினால் எதிர்நோக்கப்படுகின்ற பாதிப்புக்கள் குறையும் என்பது கண்கூடு. அதை சிந்திக்கவும் தவறுகின்றோம். ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றோம். இது, முஸ்லிம் சமூகத்திற்கு இது பற்றி அறிந்த புத்தி ஜீவிகள் செய்கின்ற பாரிய துரோகம்.
சமூகத்திற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நன்மை செய்கின்றோம் என்ற பெயரில் செய்யப்படுவது என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஏதோ ஒன்றை தவற விடக் கூடாது என்ற ஒரு வரட்டு கௌரவத்திற்காகவும், சுய இலாபங்களுக்காகவும், தவற விடக் கூடாத பல விடயங்கள் தவற விடப்படுகின்றன என்ற உண்மை எப்போது உணரப்படப் போகின்றது. மக்களே! சுயமாக சிந்தியுங்கள்.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.