தாடி! மத உரிமைக்காக நீதிமன்ற படி ஏறிய பல்கலை மாணவன்

0 239

எம்.எப்.அய்னா

தாடி வளர்த்­த­மைக்­காக, வகுப்­புக்­களில் கலந்­து­கொள்­ளவும் பரீட்­சைக்கு தோற்­றவும் அனு­மதி மறுக்­கப்­பட்ட, கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாண­வ­னுக்கு, பரீட்­சைக்கு தோற்ற அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கிழக்கு பல்­கலைக் கழ­கத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹம்மட் நுசைப் எனும் அக்­க­ரைப்­பற்றில் வசிக்கும் மாணவன் தாக்கல் செய்த எழுத்­தாணை மனுவை விசா­ர­ணைக்கு ஏற்று, மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இந்த‌ நிலையில், மனு தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு நீதி­மன்றம், பிர­தி­வா­தி­க­ளான கிழக்கு பல்­கலைக்கழக சுகா­தார அறி­வியல் பீடத்தின் பீடா­தி­பதி, குறித்த கற்கை பீடத்தின் தலைமை அதி­காரி உள்­ளிட்ட பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.

இந்த மனுவில் 38 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். கிழக்கு பல்­கலைக் கழ­கத்தின் உப வேந்தர் பேரா­சி­ரியர் வி. கன­க­சிங்கம், கிழக்கு பல்­கலைக்கழக சுகா­தார அறி­வியல் பீடத்தின் பீடா­தி­பதி கலா­நிதி ரி. சதா­நந்தம், தாதியர் கற்கை குறித்த சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் ஜெனோசா நமசி­வாயம், சுகா­தார அறி­வியல் பீடத்தின் தலைவர் ஏ.எம். சஷி சாரதா அழ­கக்கோன், கிழக்கு பல்­கலைக் கழக பிரதி உப வேந்தர் பேரா­சி­ரியர் கே.ஈ. கரு­ணா­கரன், சட்ட மா அதிபர் உள்­ளிட்ட 38 பேரே முறையே 1,2,3,4,5 மற்றும் 38 ஆம் பிர­தி­வா­தி­க­ளாக இந்த வழக்கில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். அர­சி­ய­ல­மைப்பின் 140 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய இந்த எழுத்­தணை மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
Eu/IS/2017/NUR/29 எனும் மாணவ அடை­யாள அட்­டையை உடைய மனு­தா­ர­ரான மாணவன் 2017 ஆம் ஆண்டு கிழக்கு பல்­கலைக் கழ­கத்தில் அனு­மதி பெற்­றுள்­ள­துடன் அங்கு தாதியர் துறையில் விஞ்­ஞான இள­மானி பட்­டத்­துக்­காக கற்­கை­களை ஆரம்­பித்­துள்ளார். அதன்­படி அவர் அங்கு 4 வரு­டங்கள் கற்­கை­களை நிறைவு செய்­துள்ளார்.

தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவின் பிர­காரம், 2 ஆம் பிர­தி­வாதி ‘ தொழி­லாளர் சட்டம் மற்றும் மனித உரி­மைகள்’ எனும் பாடத்­திட்­டதை கற்­பிக்கும் நிலையில், கடந்த 2023 பெப்­ர­வரி 7 ஆம் திகதி விரி­வு­ரை­களின் இடையே ஆண் மாண­வர்கள் கண்­டிப்­பாக சவரம் செய்­து­விட்டு வர வேண்டும் என எச்­ச­ரித்­துள்ளார். இது தொடர்பில் மனு­தா­ர­ரான மாணவன் குறித்த 2 ஆம் பிர­தி­வா­தியை சந்­தித்து, தாடி வைப்­பது தனது மத நம்­பிக்கை பிர­கா­ர­மான வழி­முறை என்­பதை விளக்­கி­யுள்­ள­துடன், இதன்­போது 2 ஆம் பிர­தி­வாதி, ‘ உமக்கு பட்டம் பெற வேண்­டு­மாக இருந்தால் கண்­டிப்­பாக முழு­மை­யாக சவரம் செய்­து­விட்டு வாருங்கள்’ என குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க கடந்த 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி மனு­தாரர் இரு முகக் கவ­சங்கள் ஊடாக தனது தாடியை மறைத்­த­வாறு விரி­வு­ரை­களில் பங்­கேற்­றி­ருந்த நிலையில் 4 ஆவது பிர­தி­வாதி அவரை விரி­வுரை மண்­ட­பத்தில் இருந்து ஏனைய சக மாண­வர்கள் பார்த்­தி­ருக்க வெளி­யேற்­றி­யுள்ளார்.

அதே போல 3 ஆவது பிர­தி­வா­தியும், அனைத்து ஆண் மாண­வர்­களும் கண்­டிப்­பாக முழு­மை­யாக தாடி, மீசை­களை சவரம் செய்தே விரி­வு­ரை­க­ளுக்கு வர வேண்டும் என அறி­வித்­துள்ளார். இது குறித்தும் மனு­தா­ர­ரான மாணவன் அந்த விரி­வு­ரை­யா­ளரை சந்­தித்து தனது மத நம்­பிக்கை தொடர்பில் விளக்­கி­யுள்ளார். இதன்­போது 3 ஆம் பிர­தி­வாதி ‘எனக்கு உங்­க­ளு­டைய மத நம்­பிக்கை குறித்து விளங்­கு­கின்­றது. ஆனால், பீடா­தி­ப­தியை மீறி என்னால் செயற்­பட முடி­யாது. எனவே அவரின் கடி­தத்­துடன் வாருங்கள். எனக்­கொன்றும் பி­ரச்­சினை இல்லை’ என குறிப்­பிட்­ட­தாக மனுவில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இதனைத் தொடர்ந்த்து கடந்த மே மாதம், மனு­தா­ர­ரான மாணவன் வகுப்­புக்­க­ளுக்கு வருகை தந்த போதும், தாடி வைத்­தி­ருந்­த­மையால் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு வருகை தர­வில்லை என வரவு பதி­வேட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 80 வீத வரவு இல்லை என்­ப­தாக கூறி அவரை பரீட்­சை­க­ளுக்கு தோற்­ற­வி­டாமல் செய்­வ­தா­கவும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யி­லேயே முதலில் மனு­தாரர் கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவில் முறை­யிட்ட நிலையில், பின்னர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் இந்த்த ரிட் மனு­வையும் தாக்கல் செய்­துள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட, எழுத்­தாணை மனு பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது மனு­தா­ர­ருக்­காக மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தி­ருந்தார்.

தனது சேவை பெறு­ந­ரான பல்­கலைக் கழக மாணவன், கிழக்கு பல்­கலைக் கழ­கத்தின் தாதியர் பீட இறு­தி­யாண்டு மாணவன் என இதன்­போது மன்றில் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், அவர் இஸ்லாம் மதத்தை பின்­பற்றும் மாணவன் எனவும், அவர் தாடி வைத்­த­மைக்­காக வகுப்­புக்­களில் கலந்­து­கொள்­ளவும் பரீட்­சைக்கு தோற்­றவும் பல்­க‌லைக் கழக நிர்­வாகம் அனு­மதி மறுத்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

வகுப்­புக்­களில் கலந்­து­கொள்­ளவும் பரீட்­சைக்கு தோற்­றவும் அவ­சியம் எனில், தடையை வெட்டி அகற்­று­மாறு பல்­கலைக் கழகம் தனது சேவை பெறு­ந­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் குறிப்­பிட்டார்.
இந்த மாணவன், தனது மத நம்­பிக்­கைக்கு அமைய தாடி வளர்ப்­ப­தா­கவும், அதனை அகற்­று­மாறு கட்­டளை இட பல்­கலைக் க்ழக நிர்­வா­கத்­துக்கு எவ்­வித சட்ட ரீதி­யான அதி­கா­ரமும் இல்லை எனவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் குறிப்­பிட்டார்.

இவ்­வா­றான சட்டம் ஒன்­றினை கொண்­டு­வர, பல்­கலைக் கழக சட்­டத்தின் கீழ் எவ்­வித அதி­கா­ரமும் நிர்­வா­கத்­துக்கு இல்லை என வாதிட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், தனது சேவை பெறுநர் பல்­கலைக் கழ­கத்தில் அனு­மதி பெறும் போது அங்கு இவ்­வா­றான எந்த ஒழுங்­கு­மு­றை­மை­களும் இருக்­க­வில்லை எனவும் அவ்­வா­றான நிலையில் இறு­தி­யாண்டில் இவ்­வா­றான சட்­ட­மொன்­றினை கொண்­டு­வ­ரு­வது அவ­ரது மத நம்­பிக்கை மற்றும் கற்றல் நட­வ­டிக்­கை­களை வெகு­வாக பாதித்­துள்­ள­தாகவும் குற்றம் சுமத்­தினார்.

அதனால் எதிர்­வரும் 9 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பரீட்­சைக்குத் தோற்ற தனது சேவை பெறு­ந­ருக்கு சந்தர்ப்பம் அற்றுப் போயுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் இதன்­போது பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான அரச சட்­ட­வாதி, பல்­கலைக் கழ­கத்தின் ஒழுக்­காற்று தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் வழக்­குடன் தொடர்­பு­பட்ட முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார். அந்த பல்­கலைக் கழ­கத்தில் இருக்கும் ஏனைய முஸ்லிம் மாண­வர்கள் அந்த தீர்­மா­னத்­துக்கு உட்­பட்டு கற்றல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தாக அவர் கூறினார்.
பல்­கலைக் கழகம் ஊடாக எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இடைக்­கால தடை விதிக்கக் கூடாது என அரச சட்டவாதி வாதிட்டார்.

எவ்வாறாயினும் இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, குறித்த மாணவன் பல்கலைக் கழகத்தில் சேரும் போது இவ்வாறான ஒழுங்குமுறை ஒன்று இருக்கவில்லை என்பதை திறந்த மன்றில் சுட்டிக்காட்டி அவதானத்தை ஈர்த்தார்.

அதனால் இறுதி ஆண்டில் அவ்வாறான சட்டம் அல்லது ஒழுங்கு முறைமையை ஏற்படுத்துவது, குறித்த மாணவனை பாதிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

அதனால் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்ற குறித்த மணவனுக்கு அனுமதியளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தலைமை நீதிபதி இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.