முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: முஸ்லிம் எம்.பி.க்களின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் இன்று கையளிப்பு

0 127

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் தனியார் சட்­டத்தின் திருத்தம் தொடர்­பிலான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிபா­ரி­சுகள் இன்­றைய தினம் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்­ச­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் விவா­க–­வி­வா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் நேற்­றுக்­காலை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்று கூடி கலந்­து­ரை­யா­டினர். இந்தச் சந்­திப்பு பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம் பெற்­றது. அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மாவின் இரு பிர­தி­நி­தி­களும் இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டனர்.

சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பெள­ஸியின் தலை­மையில் இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், ஏ.எல்.எம். அதா­வுல்லா, மர்ஜான் பளீல், காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்­த­மொ­ர­கொட முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­காக ஓய்வு நிலை நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மித்­தி­ருந்த குழுவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த சிபா­ரி­சுகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஆரா­யப்­பட்­டன.

ஷரீ­ஆ­வுக்கு முர­ணற்ற வகையில் திருத்­தங்­களை இறுதி செய்­வ­தற்கு அவர்கள் தீர்­மா­னித்­துள்­ள­துடன் இன்­றைய கலந்­து­ரை­யா­ட­லுக்கு சமுக­ம­ளிக்­காத முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களுடன் இன்றும் தொடர்ந்தும் கலந்துரையாடி இன்றைய தினமே (வியாழக்கிழமை) நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைச் சந்தித்து தங்கள் சிபாரிகளை கையளிக்கவுள்ளனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.