அலி சப்ரி ரஹீம் எம்பி விவகாரம்: முஸ்லிம் அடையாள அரசியலின் மறுபக்கம்?

0 233

எம்.எல்.எம். மன்சூர்

“….‘கௌரவ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி அவர்கள் நாட்­டுக்குள் போதைப் பொருட்­களை எடுத்து வர­வில்லை; மாறாக, தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சிகள் போன்ற பொருட்­க­ளையே அவர் கடத்தி வந்­தி­ருக்­கிறார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். ஏனென்றால், போதைப் பொருட்கள் பிடி­படும் சந்­தர்ப்­பத்தில் சுங்க அதி­கா­ரி­களால் அவற்றை பறி­முதல் செய்ய முடி­யுமே ஒழிய, விற்­பனை செய்ய முடி­யாது. ஆனால், தங்கம் மற்றும் தொலை­பேசி போன்ற பொருட்­களை அர­சாங்கம் சட்­ட­பூர்­வ­மாக ஏல விற்­ப­னையில் விற்­பனை செய்து, வரு­மானம் ஈட்டிக் கொள்ள முடியும். நெருக்­க­டி­யான இந்தத் தரு­ணத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாட்டு நலன் குறித்து சிந்­தித்து, செயற்­பட்­டி­ருக்­கிறார் என்­பது தெரி­கி­றது….”
‘திவ­யின‘ நாளிதழ், ஆசி­ரியர் தலை­யங்­கத்­தி­லி­ருந்து…

முஸ்லிம் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற கட்­சியின் சார்பில் 2020 புத்­தளம் மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வான எம்பியான அலி சப்ரி ரஹீம் தங்க பிஸ்­கட்கள், கைய­டக்கத் தொலை­பே­சிகள் போன்ற பொருட்­களை சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் எடுத்து வந்த பொழுது விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்ட சம்­ப­வமும், அதன் பின்னர் இடம்­பெற்ற நிகழ்­வு­களும் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று விதங்­களில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன:

1. அற­க­ல­ய­வுக்குப் பின்னர் சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஓர­ள­வுக்கு தணிந்து போயி­ருந்த முஸ்லிம் எதிர்ப்பு பிர­சாரம் (Hate Speech) மீண்டும் ஒரு முறை உயிர்ப்­ப­டை­வ­தற்­கான கத­வு­களை அது திறந்து விட்­டி­ருக்­கி­றது.
சிங்­கள செய்தி ஊட­கங்கள் இந்தச் சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்கும் நபரைக் குறிப்­பிடும் பொழுது மீண்டும் மீண்டும் ‘முஸ்லிம் ஜாதி­கயா‘ என்ற சொல்லை அழுத்­த­மாக உச்­ச­ரிப்­பதை நாங்கள் பார்த்தோம். ‘முஸ்­லிம்கள் கடத்­தல்­கா­ரர்கள், போதைப் பொருள் வியா­பா­ரிகள்‘ என்ற விதத்தில் சிங்­கள மக்­களின் பொதுப் புத்­தியில் வேரூன்­றி­யி­ருக்கும் மனப் பதி­வு­களை மேலும் ஊர்­ஜிதம் செய்­வ­தற்கு தான் செய்த காரி­யத்தின் மூலம் அலி சப்ரி ரஹீம் பங்­க­ளிப்புச் செய்­தி­ருக்­கிறார். இந்த விதத்தில் சமூ­கத்தின் நற்­பெ­ய­ருக்கு அவர் விளை­வித்­தி­ருக்கும் சேதத்தை சரி செய்­வ­தற்கு நீண்ட காலம் எடுக்கும்.

2. குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்கும் எம்பி ‘முஸ்லிம் அடை­யாள அர­சியல்‘ என்ற கருத்­தாக்­கத்தை முன்­னெ­டுக்கும் ஒரு கட்­சியில் ஓர் உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருப்­ப­துடன், புத்­த­ளத்­திற்­கான முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்­கத்தில் 2020 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவர் SLMC மற்றும் ACMC கட்­சி­களின் ஆசீர்­வா­தத்­துடன் கள­மி­றக்­கப்­பட்­டவர். அடிப்­ப­டையில் ACMC உறுப்­பி­ன­ராக இருந்­தவர்.
இப்­பொ­ழுது அவர் செய்­தி­ருக்கும் காரியம் ‘முஸ்லிம் அடை­யாள அர­சி­யலின்‘ மறு­பக்கம் எப்­ப­டி­யா­னது என்­ப­தனை நாட்­டிற்கு எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது. இது தொடர்­பாக (சம்­பந்­தப்­பட்ட எம்பி சார்ந்­தி­ருக்கும் சமூ­கத்தின் பெயரை மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறி) சிங்­கள செய்தி ஊட­கங்கள் எழுப்­பி­யி­ருக்கும் சந்­தே­கங்கள் நியா­ய­மா­னவை என்றே தோன்­று­கி­றது.

‘இந்த நபர் கடந்த சில மாதங்­களில் கிட்­டத்­தட்ட ஆறு தட­வைகள் டுபாய் போய் வந்­தி­ருக்­கிறார். இந்தக் கள்ளக் கடத்தல் நட­வ­டிக்கை திட்­ட­மிட்ட விதத்தில் தொடர்ந்து இடம்­பெற்று வந்­தி­ருப்­ப­துடன், இதில் இன்னும் பலர் சம்­பந்­தப்­பட்­டி­ருக்க முடியும்‘ என்ற விதத்தில் சந்­தே­கங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. அத்­த­கைய சந்­தே­கங்­களை நாங்கள் ஒரே­ய­டி­யாக நிரா­க­ரிக்க முடி­யாது.

அவர் சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் எடுத்து வந்த பொருட்­களின் மொத்த மதிப்பு மற்றும் (ஒரு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள்) செலுத்­திய அப­ராதத் தொகை என்­ப­வற்றின் கூட்டுத் தொகை கிட்­டத்­தட்ட பத்து கோடி ரூபாய். அவ­ருக்கு இந்த பணம் எப்­படிக் கிடைத்­தது? அவ­ரு­டைய வரு­மான மூலங்கள் எவை?

புத்­தி­ஜீ­வி­க­ளா­கவும், அப்­ப­ழுக்­கற்ற மக்கள் தலை­வர்­க­ளா­கவும் இருந்து வந்த எச் எஸ் இஸ்­மாயில் மற்றும் நெய்னா மரிக்கார் போன்­ற­வர்கள் கடந்த காலத்தில் பிர­தி­நி­தித்­துவம் செய்த ஒரு தொகு­தி­யி­லி­ருந்து இத்­த­கைய ஒரு நபர் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருப்­பது பெரும் துர­திர்ஷ்டம். இதே குற்­றச்­சாட்டை எதிர்­கொண்ட ஹேவா­ஹெட்ட தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநுர டனியல் 1978 இல் ஜனா­தி­பதி ஜே ஆர் ஜெய­வர்­த­ன­வினால் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார். அலி சப்­ரியும் அதே விதத்தில் வெளி­யேற்­றப்­பட்­டாலும் கூட, இலங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மீது அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் களங்­கத்தை எளிதில் துடைத்­தெ­றிய முடி­யாது.

3. அடுத்த விடயம் மிகவும் முக்­கி­ய­மா­னது. அதா­வது, வடக்கு கிழக்­குக்கு வெளியே தென்­னி­லங்­கையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களை பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் செய்­வ­தற்கு முஸ்லிம் எம் பிக்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு. அந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே புத்­தளம் வாழ் முஸ்லிம் மக்­களின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கென அலி சப்ரி தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். குரு­ணாகல், அநு­ரா­த­புரம் மற்றும் ஏனைய சில மாவட்ட முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் இதே மாதி­ரி­யான ஒரு மனக்­குறை அதா­வது தமக்­கொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்லை என்ற மனக்­குறை – நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான தென்­னி­லங்கை தேர்தல் அர­சியல் செயல்­பட்­டி­ருக்கும் விதம் மேற்­படி நிலைப்­பாடு – அதா­வது, முஸ்லிம் எம்பி ஒரு­வரால் மட்­டுமே முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்க முடியும் என்ற நிலைப்­பாடு -ஒரு மாயை என்­ப­தனை காட்­டு­கி­றது.

அதா­வது, 1989 இல் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை அறி­முகம் செய்து வைக்­கப்­படும் வரையில் அமுலில் இருந்து வந்த தேர்தல் தொகுதி முறையின் கீழ், பெரும்­பா­லான தொகு­தி­களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கத்­தினர் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்பு அநே­க­மாக கிடைக்­க­வில்லை. ஆனால், அந்த இழப்பை வாக்கு வங்கி அர­சியல் – அதா­வது, இன மத பேத­மின்றி தமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அனு­ச­ரணை அளிக்கும் அர­சியல் – பெரு­ம­ள­வுக்கு ஈடு செய்­தி­ருந்­தது.

உதா­ர­ண­மாக, டப்­ளியூ தஹ­நா­யக்க, ஆர் பிரே­ம­தாச, ரொனி டி மெல், ரீ பி இலங்­க­ரத்ன, டி பி விஜே­துங்க, தி மு ஜய­ரத்ன போன்ற சிங்­களத் தலை­வர்கள் தமது தேர்தல் தொகு­தி­களில் கணி­ச­மான அளவில் முஸ்லிம் சிறு­பான்­மை­யினர் வாழ்ந்து வரு­வ­தனை நன்கு அறிந்­தி­ருந்­த­துடன், எப்­பொ­ழுதும் அவர்­க­ளு­டைய தேவை­களை நிவர்த்தி செய்து வைக்கும் விட­யத்தில் கவனம் செலுத்தி வந்­தி­ருக்­கி­றார்கள். வளப் பகிர்வு மற்றும் அரச துறை நிய­ம­னங்கள் என்­ப­வற்­றிலும் மிகவும் நுட்­ப­மான விதத்தில் இன விகி­தா­சார அடிப்­ப­டையில் தமது ஆத­ர­வா­ளர்­களின் தேவை­களை நிறை­வேற்றி வைக்கும் ஓர் அணு­கு­மு­றையை அவர்கள் பின்­பற்­றி­யி­ருந்­தார்கள்.

சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் புதி­தாக பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணிப்­பது போன்ற உணர்­வு­களைத் தூண்டக் கூடிய சங்­க­ட­மான பிரச்­சி­னைகள் (Sensitive Issues) தோன்­றிய சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூட, அவர்கள் இரா­ஜ­தந்­தி­ர­மான விதத்தில் செயற்­பட்டு, அப்­பி­ரச்­சி­னை­களை சுமு­க­மாக தீர்த்து வைத்­தி­ருக்­கி­றார்கள். இதற்கு தென்­னி­லங்­கையில் ஏரா­ள­மான உதா­ர­ணங்கள் உண்டு. (ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரால் அத்­த­கைய பிரச்­சி­னை­களை எந்த விதத்­திலும் தீர்த்து வைக்க முடி­யாது என்­பது நிதர்­சனம்). இன்றும் தென்­னி­லங்கை அர­சியல் அவ்­வாறு தான் செயற்­பட்டு வரு­கின்­றது. (ஜேவிபி யையும் உள்­ள­டக்­கிய) தேசிய கட்­சி­க­ளு­ட­னான தென்­னி­லங்கை முஸ்­லிம்­களின் நெருக்­கமும், கூட்டுச் செயற்­பாடும் இன நல்­லு­றவைப் பேணு­வ­தற்கும், சக வாழ்வை போஷித்து வளர்ப்­ப­தற்கும் பெரு­ம­ள­வுக்குப் பங்­க­ளிப்புச் செய்து வரு­கின்­றன.

வெறு­மனே அலங்­கார மதிப்­புக்கு (Ornamental Value) முஸ்லிம் பெயர் தாங்­கிய ஒருவர், சொத்துச் சேர்ப்­பதில் மட்டும் குறி­யாக இருக்கும் ஒருவர் தமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வரு­வ­திலும் பார்க்க, ‘மித­வாத அணு­கு­மு­றையை பின்­பற்றும், செயல்­திறன் மிக்க முஸ்லிம் அல்­லாத எம்பி ஒருவர் தம்மைப் பிர­தி­நி­தித்­துவம் செய்தால் போதும்‘ என்ற விதத்தில் முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒரு மன­மாற்றம் ஏற்­பட வேண்டும்.

வடக்­கிலும், கிழக்­கிலும் அடை­யாள அர­சியல் செய்யும் இரு பிர­தான முஸ்லிம் கட்­சி­களும் இனம், மதம் என்ற போர்­வையில் மறைந்து தென்­னி­லங்கை முஸ்லிம் கிரா­மங்­களில் ஊடு­ரு­வு­வ­தற்கு எடுத்து வரும் முயற்­சி­களை, அந்த இடங்­க­ளிலும் மேற்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் போன்­ற­வர்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளா­கவே நோக்க வேண்டியிருக்கிறது.

‘சிங்கள இனம் – பௌத்த மதம்’ என்ற கேடயத்தின் பின்னால் ஒளிந்து நின்று அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயன்று வரும் ஊழல் பேர்வழிகளை அம்பலப்படுத்துவற்கும், அத்தகைய ஆட்களின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், புத்திஜீவிகளும், சமூக ஊடகப் பரப்புரையாளர்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அது தொடர்பான பரவலான உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றுக்கு இணையான விதத்தில் முஸ்லிம் சமூகத்திலும் உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறுதல் வேண்டும்.

இலங்கை அரசியல் கலாசாரத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்ற விதத்தில் எதிர்பார்ப்புக்கள் துளிர் விட்டு வரும் ஒரு வரலாற்றுத் தருணத்தில் நாங்கள் நிற்கிறோம் என்பதனை மறந்து விடக் கூடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.