ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளை நீக்­குங்கள்

சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு

0 195

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் நீக்­கு­வ­துடன் அவ­ருக்கு எதி­ரான அனைத்து அடக்­கு­மு­றை­க­ளையும் முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ரு­மாறு ‘சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணிகள்’ அமைப்பு சட்­டமா அதி­ப­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது­கு­றித்து சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணிகள் என்ற சர்­வ­தேச அமைப்பு சட்­டமா அதிபர் சஞ்சய் ராஜ­ரத்­னத்­துக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

சட்­டத்­த­ர­ணியும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ரு­மான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா தொடர்பில் தற்­போது இடம்­பெற்­று­வரும் வழக்கு விசா­ர­ணைகள் தொடர்பில் நாம் மிகுந்த கரி­சனை கொண்­டி­ருக்­கின்றோம். சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை முன்­னி­றுத்தி இயங்­கி­வரும் சட்­டத்­த­ர­ணி­யான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, மனித உரிமை மீறல்­களால் பாதிக்­கப்­பட்ட பெரு­ம­ள­வான முஸ்­லிம்­க­ளுக்கு அவ­சி­ய­மான சட்ட உத­வியை வழங்­கி­யி­ருக்­கின்றார்.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்­ற­வி­சா­ர­ணைப்­பி­ரி­வி­னரால் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்டார். அவர் கைது­செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் தொடர்பில் அவ்­வே­ளையில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கோ அல்­லது அவ­ரது குடும்­பத்­தா­ருக்கோ கூறப்­ப­ட­வில்லை. இருப்­பினும் உயிர்த்த ஞாயி­று­தி­னப்­ப­யங்­க­ர­வா­தத்­தாக்­குதல் குண்­டு­தா­ரி­க­ளுக்கு உத­வினார் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் அவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவ­ரது தடுப்­புக்­காவல் உத்­த­ரவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்து பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 7 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு பிணை வழங்­கப்­பட்டு, 9 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்டார். இருப்­பினும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் இன்­னமும் நீக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் இற்­றை­வரை ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்கும் வகை­யி­லான எந்­த­வொரு ஆதா­ரமும் வாதிகள் தரப்­பினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று அறி­ய ­மு­டி­கின்­றது. அவ­ருக்கு எதி­ரான அடுத்த வழக்கு விசா­ரணை 12 ஆம் திகதி (நேற்று) நடை­பெறும் நிலையில், அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் சட்­டத்­த­ரணி என்ற ரீதியில் அவ­ரது செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் நோக்கில் முன்­வைக்­கப்­பட்­ட­வையா என்ற கரி­ச­னையைத் தோற்­று­வித்­துள்­ளன.

பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின் கீழ் மிக நீண்­ட­கா­ல­மாகத் தடுத்­து­வைக்­கப்­பட்ட முத­லா­வது சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா ஆவார். பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தைத் திருத்­தி­ய­மைப்­ப­தாக இலங்கை அர­சாங்கம் பல­முறை உத்­த­ர­வா­த­ம­ளித்­தி­ருக்­கின்ற போதிலும், தற்­போ­து­வரை அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் தவறியிருக்கின்றது.
இந்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அடக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்துகின்றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.