வெளிநாட்டு உளவுப்பிரிவுக்கு சஹ்ரானின் தொலைபேசி தரவுகளை கொடுத்தது ஏன்?

சந்தேகமாக இருக்கிறது என்கிறார் மைத்திரிபால

0 180

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடாத்­திய சஹ்­ரானின் கைய­டக்கத் தொலை­பே­சியின் தர­வுகளை வெளி­நாட்டு உள­வுப்­பி­ரி­வினர் எடுத்துச் செல்­வ­தற்கு ஏன் அனு­ம­திக்­கப்­பட்­டது என்­பது வியப்­பாக இருக்­கி­றது. சந்­தே­கத்­துக்கு இட­மாக இருக்­கி­றது. அந்த கைய­டக்கத் தொலை­பே­சியில் தாக்­குதல் தொடர்பில் அநேக இர­க­சிய தக­வல்கள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தி­ருக்­கலாம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் இருக்கும் போது தான் இலக்கு வைக்­கப்­ப­டு­வது அசா­தா­ர­ண­மா­னது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
கொழும்பில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘என்னால் நிய­மிக்­கப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு தனது அறிக்­கையை கைய­ளித்­த­போது முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் மேலு­மொரு அறிக்­கையை கைய­ளித்­தது. அந்த அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டா­மெ­னவும் வேண்­டப்­பட்­டது. அந்த குறிப்­பிட்ட அறிக்­கையை வெளி­யி­டுங்கள். அப்­போது அந்த இர­க­சிய அறிக்­கையில் என்ன உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை எம்மால் அறிந்து கொள்­ள­ மு­டியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் இது­வரை இறு­தித்­தீர்­மானம் இல்லை. விரைவில் இது­பற்றி தீர்­மா­னித்து என்னை சிறைக்கு அனுப்­பு­வ­தற்கு கர்­தி­னா­லுக்கு தேவை­யாக உள்­ளது. என்னை தூக்கு மரத்­துக்கு அனுப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கிறார். ஆனாலும் இத்­தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை.

உலகில் பிர­சித்தி பெற்ற உள­வுப்­பி­ரி­வினர் பலர் இலங்­கைக்கு வருகை தந்­தார்கள். இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, சிங்­கப்பூர், இந்­தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடு­களின் உள­வுப்­பி­ரி­வினர் வருகை தந்­தார்கள். அவர்கள் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் உள்­ள­டங்கி உள்­ள­வைகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

சஹ்­ரானின் கைய­டக்கத் தொலை­பே­சியில் உள்­ள­டங்­கி­யி­ருந்த தர­வுகள் குறிப்­பிட்ட உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கு எடுத்துச் செல்­வ­தற்கு யார் அனு­மதி வழங்­கி­யது? அந்த தர­வு­களில் சில முக்­கி­ய­மான விட­யங்கள் உள்­ள­டங்­கி­யி­ருக்­கலாம். இது நூல் பந்து போன்ற சிக்­க­லான ஒன்று. இந்த அறிக்கை கத்­தோ­லிக்க சபைக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.

இப்­போது என்­னையே இலக்கு வைத்­தி­ருக்­கி­றார்கள். என் மீதே விரல் நீட்­டு­கி­றார்கள். குண்­டுத்­தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் சிறையில் இருக்­கி­றார்கள். நான் கைது செய்­த­வர்கள் 160 பேர் வரை சிறையில் இருக்­கி­றார்கள். கோத்­தா­பாய ராஜ­பக்ஷ இரு­வரை விடு­தலை செய்தார். சஹ்­ரானின் மனைவி என்று ஒருவர் விடு­தலை செய்­யப்­பட்டார்.
நான் மூன்று வாரங்­க­ளுக்குள் சஹ்­ரானின் தீவி­ர­வாதக் குழு­வினை அழித்தேன். இப்­போது என்னைச் சுற்றி வரு­கி­றார்கள். குண்டுத் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் நன்­றாக இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொட­ருங்கள்.

நேற்றும், நேற்று முன்­தி­னமும் சிலர் வீதி­களில் கோஷ­மிட்­டார்கள். என்­றாலும் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் தொடர்பில் எதுவும் கூற­வில்லை. அவர்கள் பற்றி கோஷ­மெ­ழுப்­ப­வில்லை. அவர்கள் உண்டு குடித்து சவர்க்காரம் பூசி குளித்து நன்றாக இருக்கிறார்கள். தலைமுடி வெட்டிக் கொள்கிறார்கள். எங்களையே குறி வைக்கிறார்கள்.

பாதுகாப்பு அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியை தெளிவுபடுத்தவில்லை என வழக்கின் தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.என்றோ ஒரு நாள் இந்தச் சம்பவத்தின் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.