சவூதி வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழம் 2265 பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

வதந்திகளை பரப்பாதீர் என்கிறார் பணிப்பாளர் பைசல்

0 151

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரமழான் அன்பளிப்பாக சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழங்கள் நாடு தழுவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 2265 பள்ளிவாசல்களுக்கு 14 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பேரீத்தம் பழ விநியோகம் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தவறானவையாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் தெரி­வித்தார்.

பேரீத்தம் பழ விநி­யோகம் தொடர்பில் பரப்­பப்­பட்டு வரும் செய்தி தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். மேலும் அவர் தெரி­விக்­கையில், பதிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு தொகைப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வேறு அமைப்­புகள் மூலம் பேரீத்தம் பழம் விநி­யோ­கிக்­கப்­பட்­டதால் அவற்­றுக்கு திணைக்­களம் விநி­யோ­கிக்­க­வில்லை.
முதற்­கட்­ட­மாக திணைக்­க­ளத்­துக்கு 30 தொன் பேரீத்தம் பழங்­களும், பின்பு இரண்டாம் கட்டமாக 6 தொன்னும், மூன்றாம் கட்­ட­மாக 14 தொன்னும் வழங்­கப்­பட்­டன. மூன்றாம் கட்­ட­மாக கிடைக்­கப்­பெற்ற 14 தொன் பேரீத்தம் பழங்கள் புத்­தளம், கம்­பஹா, கேகாலை, களுத்­துறை, காலி ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மேல­தி­க­மாக விநி­யோ­கிக்­கப்­பட்­டது.

கொழும்பு மாவட்­டத்தில் பதிவு செய்­யப்­ப­டாத பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கப்­பட்­டன. ஆரம்பக் கட்­டத்தில் தலா 14 கிலோ வீதம் விநி­யோ­கிக்­கப்­பட்ட பேரீத்தம் பழங்­களை சில பள்­ளி­வா­சல்கள் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. இதே­வேளை பல்­வேறு அமைப்­புகளால் இறக்­கு­மதி செய்த பேரீத்தம் பழங்கள் பெரும் எண்­ணிக்­கையில் சில பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.

திணைக்­க­ளத்­தினால் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்ட தலா 14 கிலோ பேரீத்தம் பழம் வீடு­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வ­தற்கு போது­மா­ன­தல்ல என்­பதை ஏற்றுக் கொள்­கிறேன். இதன் கார­ண­மா­கவே சிலர் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் தவ­றான செய்­தி­களைப் பரப்பி வரு­கி­ன்றனர். இவ்­வி­நி­யோ­கத்தில் எவ்­வித முறை­கே­டு­களும் இடம்­பெ­ற­வில்லை என்­பதை திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் என்ற வகையில் பொறுப்­புடன் கூறு­கிறேன்.

பொது­மக்கள், சமூக நல அமைப்­புகள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் பேரீத்தம் பழங்கள் விநி­யோகம் தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற்றுக் கொள்ள விரும்­பினால் 011 2667909 என்ற இலக்கத்துடன் திணைக்களத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். திணைக்களம் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.