சாரா புலஸ்தினி விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முயற்சி

0 190

(எம்.எப்.அய்னா)
பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­க­ருக்கு எதி­ராக மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் தொடுக்­கப்பட்­டுள்ள வழக்கை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடிகின்­றது. அதன்­படி குறித்த வழக்கின் குற்றப் பத்­தி­ரி­கையை மீளப் பெற சட்ட மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக தெரியவருகிறது.

நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தாரி மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான 2 ஆம் கட்ட தாக்­கு­த­லுக்கு தயா­ராக இருந்­த­தாக கூறப்­படும் புலஸ்­தினி ராஜேந்ரன் அல்­லது சாரா ஜஸ்மின் அல்­லது சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­க­ருக்கு எதி­ராக மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி அப்­துல்லாஹ் முன்­னி­லையில் வழக்குத் தொடுக்­கப்பட்­டுள்­ளது. அவ்­வ­ழக்கில் கடந்த மார்ச் 20ஆம் திகதி அபூ­பக்­க­ருக்கு மேல் நீதி­மன்றம் பிணை­ய­ளித்­தி­ருந்­தது.

ஒரே ஒரு தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை மற்றும் 18 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லுடன் பயங்­கரவாத தடைச் சட்டத்துக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது.

2019 செப்டெம்பர் மாதம் முதலாம் திக­திக்கும் 30 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்ப­கு­தியில் சாரா ஜெஸ்­மினின் நட­மாட்ட இடங்கள் குறித்து பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை மறைத்­த­தா­கவும் அவரைக் கைது செய்ய அல்­லது கைது செய்யும் நட­வ­டிக்­கைக்கு இடை­யூறு விளை­வித்தல் அல்­லது தலை­யீடு செய்தல் ஊடாக குற்றம் புரிந்­துள்­ள­தாக கூறி சட்டமா அதிபர் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் பொலிஸ் அதி­கா­ரி­யான அபூ­பக்­க­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­துள்ளார்.

எனினும் சாரா ஜெஸ்மின் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது பகு­தியில் நடந்த வெடிப்புச் சம்­ப­வத்­தி­லேயே உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக பொலிஸ் திணைக்களம் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் 3 ஆவது அறிக்கையை முன்னிலைப்படுத்தி அறிவித்துள்ளது. இந்த பின்னணியிலேயே குற்றப் பத்திரிகையை மீளப் பெற சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.