சாரா தப்பிச் செல்ல உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு பிணை

0 156

(எம்.எப்.அய்னா)
நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான, 2 ஆம் கட்ட தாக்­கு­த­லுக்கு தயா­ராக இருந்­த­தாக கூறப்­படும் புலஸ்­தினி ராஜேந்திரன் அல்­லது சாரா ஜஸ்மின் அல்­லது சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­கரை பிணையில் விடு­வித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி அப்­துல்லாஹ் இதற்­கான உத்­த­ரவை கடந்த திங்­க­ளன்று (20) பிறப்­பித்­துள்ளார்.

சாரா குறித்து பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை மறைத்­த­தாக கூறி சட்ட மா அதிபர் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் பொலிஸ் அதி­கா­ரி­யான அபூ­பக்­க­ருக்கு எதி­ராக தொடர்ந்­துள்ள வழக்கு, விசா­ர­ணைக்கு வந்த போதே, அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம்.சஹீட் முன் வைத்த பிணைக் கோரிக்­கையை ஏற்றே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அதன்­படி, குறித்த பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­வித்த மேல் நீதி­மன்ற நீதி­பதி அப்­துல்லாஹ், அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணங்­களை தடை செய்து கடவுச் சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்டார்.

குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, அபூ­பக்கர் சார்பில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம்.சஹீட், சட்ட மா அதிபர் தககல் செய்­துள்ள குற்றப் பத்­தி­ரிகை முற்­றிலும் பிழை­யா­னது என வாதிட்­ட­துடன், கல்­முனை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணை­யா­ளர்கள் தாக்கல் செய்­துள்ள விசா­ரணை அறிக்­கையில் சாரா தப்பிச் செல்ல பிர­தி­வா­தி­யான அபூ­பக்கர் உத­வி­ய­தாக சான்­றுகள் இல்லை என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக கூறினார்.

சட்ட மா அதி­பரின் குற்றப் பகிர்வுப் பத்­திரம் மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடும் ஒன்று என இதன்­போது விமர்­சித்த அவர், தனது சேவைபெறு­ந­ருக்கு பிணை கோரினார்.

எனினும், இவ்­வ­ழக்கு தொடர்பில் கையாள சட்ட மா அதி­பரால் நிய­மிக்­கப்­பட்­டுள்ல சிறப்பு அரச சட்­ட­வாதி சகி அஹமட், பிர­தி­வா­திக்கு பிணை வழங்கக்டும் ஆட்­சே­பனம் வெளி­யிட்டார்.

இந்நிலை­யி­லேயே, நீண்­ட­கா­ல­மாக பிர­தி­வாதி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளதை விஷேட கார­ணி­யாக கருதி, நீதி­பதி அப்­துல்லாஹ், பிர­தி­வா­திக்கு பிணை­ய­ளித்து உத்­த­ர­விட்டார்.

முன்­ன­தாக உயிர்த்த ஞாயிறு தின தாக்கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான புலஸ்தினி ராஜேந்ரன் அல்­லது சாரா, களு­வாஞ்சிக்குடி­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல உத­வி­யமை தொடர்பில், சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன.
ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில், பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அர்­ஜுன மாஹின்­கந்த வழங்­கிய சாட்­சி­யத்தின் படி, கடந்த 2020 ஜூலை 13 ஆம் திகதி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபூ­பக்கர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

உண்­மையில் கல்­முனை – சாய்ந்­த­ம­ருது வெலி­வொ­லி­வே­ரியன் கிரா­ம­ ப­கு­தியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்­றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலில் உயிர் தப்­பி­ய­தாக நம்­பப்­படும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களு­வாஞ்சிக் குடி, மான்­காடு பகு­தியில் மறைந்­தி­ருந்­த­தாக கண்கண்ட சாட்­சி­யாளர் ஒருவர் ஊடாக தனக்­கு ­க­டந்த 2020 ஜூலை 06 ஆம் திகதி தகவல் கிடைத்­த­தாக அர்­ஜுன மாஹின்­கந்த குறிப்­பிட்­டி­ருந்தார். அதன்­படி கடந்த 2020 ஜூலை 8 ஆம் திகதி மட்­டக்­க­ளப்பு சென்று அங்கு சாராவை நேரில் கண்ட நப­ரையும் சந்­தித்­த­தாகவும் அந்த கண்­கண்ட சாட்­சி­யா­ளரின் சாட்­சி­யத்தின் பிர­காரம், கடந்த 2019 செப்­டம்பர் மாதத்தில் ஒரு நாள், அதி­காலை 3.15 அளவில் மட்­டக்­க­ளப்பு – கல்­முனை பிர­தான வீதியில் தேத்தா தீவு பகு­தியை கடந்து சென்­று­கொண்­டி­ருந்த போது, பிர­தான வீதிக்கு நுழைய முடி­யு­மான குறுக்கு வீதி­யான கடற்­கரை வீதி­யி­லி­ருந்து பெண் ஒரு­வரும் இரு ஆண்­களும் வந்­த­தாக தக­வ­லாளி தகவல் அளித்­த­தாக அர்­ஜுன மாஹின்­கந்த குறிப்­பிட்­டி­ருந்தார்.

அப்பெண் அப்­போது கறுப்பு நிற பர்தா அணிந்­தி­ருந்­த­தா­கவும், முகத்தை மறைத்­தி­ருக்­க­வில்லை எனவும் அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்­த­தையும் கண்­ட­தாக சாட்­சி­யாளர் அவ­தா­னித்­துள்ளார்.

அவ்­வாறு பிர­தான வீதிக்கு வந்த பெண், பாதை ஓர­மாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த இள மஞ்சள் நிற டப்பிள் கெப் ரக வாக­னத்தில் (59 – 0874) ஏறு­வதை சாட்­சி­யாளர் அவ­தானித்­துள்ளார். குறித்த கெப் வண்­டியின் பின் ஆச­னத்தில் அந்த பெண் அமர்ந்­துள்­ள­துடன், முன் ஆச­னத்தில், அதா­வது சாரதி ஆச­னத்­துக்கு அருகே உள்ள ஆச­னத்தில் அப்­போது களு­வாஞ்சிக் குடி பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவு பொறுப்­ப­தி­காரி அபூ­பக்கர் இருந்­துள்­ளதை சாட்­சி­யாளர் கண்­டுள்ளார் என அர்­ஜுன மாஹின்­கந்த சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இது தொடர்­பி­லேயே, அபூ­பக்கர் கைது செய்­யப்­பட்டு 2020 முதல் தடுப்புக் காவலிலும் விளக்­க­ம­றி­ய­லிலும் இருந்து வந்த நிலையில் தற்­போது பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.