வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள்

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடாது என்கிறார் நவீன்

0 167

(எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பதை அங்­குள்ள முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நவீன் திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

அத்­தோடு, 13 ஐ முழு­மையா அமுல்­ப­டுத்­தினால் நாடு பிள­வு­படும் என சிலர் பிர­சாரம் செய்­கின்­றனர். எனினும், அவ்­வாறு நாடு பிளவை சந்­திக்­காது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரோடு இருப்­ப­தாக இந்­தி­யாவில் தமிழ் நாட்­டைச்­சேர்ந்த நெடு­மாறன் தெரி­வித்­தி­ருக்­கிறார். அவர் எந்த அடிப்­ப­டையில் தெரி­வித்தார் என்று எமக்கு தெரி­யாது. என்­றாலும் பிர­பா­கரன் உயி­ரோடு இல்லை என்­பதை எமது இரா­ணுவம் உறு­திப்­ப­டுத்தி இருக்­கி­றது. அதனால் இது தொடர்பில் நாங்கள் அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு, அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்கு இவ்­வா­றான செய்­தியை பரப்­பு­வ­தாக தெரி­விக்க முடி­யாது. ஏனெனில் 13ஆம் திருத்தம் எமது அர­சி­ய­ல­மைப்பில் இருக்கும் விட­ய­மாகும்.

மேலும் 13ஆம் திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதன் மூலம் நாடு பிள­வு­படும் என சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் 13 ஐ முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதன் மூலம் நாடு பிள­வு­ப­டாது என 1987 இல் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்­கி­றது. அன்று மிகவும் பயங்­க­ர­மான நிலை­மை­யி­லேயே இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று பிர­பா­கரன் பெரும் செல்­வாக்­குடன் இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணம் பிர­பா­க­ரனின் ஆதிக்­கத்­தின் கீழே இருந்­தது. ஆனால் தற்­போது அந்த நிலைக்கு முற்­றிலும் மாறு­பட்ட நிலையே இருக்­கி­றது. வடக்கு,கிழக்கு மாகாணம் இணைக்­கப்­ப­டக்­ கூ­டாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே அங்­குள்ள முஸ்லிம் மக்கள் உறு­தி­யாக இருக்­கின்­றனர். அத்­தோடு, சிங்­கள மக்­களும் இணைப்பை விரும்­ப­வில்லை.

அத்­துடன் மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ். காணி அதி­காரங்கள் வழங்­கப்­பட்­டுள்ள போதும் நிதி அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை. நிதி அதி­காரம் இல்­லாமல் சமஷ்டி ஆட்­சியை மேற்­கொள்ள முடி­யாது. இந்­தி­யாவில் சமஷ்டி முறையே இருக்­கி­றது. ஆனால் எமது நாட்டில் மாகாண முறையே இருக்­கி­றது. அதனால் மாகாண அதி­கா­ரங்கள் அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாக தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் மாகாணங்களுக்கு பொலிஸ். காணி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாடு பிளவுபடப்போவதில்லை. 13ஐ முழுமையாக அமுல்படுத்தப்போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை என்றார். – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.