மீண்டும் மீண்டும் மீறப்படும் மு.கா. யாப்பு!

0 311

றிப்தி அலி

அல்­குர்ஆன் மற்றும் ஹதீ­ஸினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்­பினை அக்­கட்­சியின் தலை­வ­ரான ரவூப் ஹக்கீம் தொடர்ச்­சி­யாக மீறி வரு­கின்றார்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையின் ஊடாக தனி­ந­ப­ரொ­ரு­வ­ருக்கு அதிக அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டு­வதை தொடர்ச்­சி­யாக எதிர்த்து வரு­கின்ற ரவூப் ஹக்கீம், அவ­ரு­டைய கட்­சியின் யாப்பின் மூலம் தொடர்ச்­சி­யாக அவ­ருக்­கான அதி­கா­ரங்­களை அதி­க­ரித்து வரு­கின்றார்.

இதற்­காக பேராளர் மாநாட்டில் தொடர்ச்­சி­யாக கட்­சியின் யாப்பில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நடை­பெற்­றது.

இதன்­போது, கட்­சியின் யாப்பில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் சுமார் 30 பதவி வழி உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான நிலையில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை (27) நடை­பெற்ற கட்­சியின் அதி­யுயர் பீடக் கூடத்தில் சில நிய­ம­னங்­களை கட்­சியின் தலைவ­ரான ரவூப் ஹக்கீம் அறி­வித்­துள்ளார்.

இதற்­கி­ணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரத் தலை­வர்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் எம். நயீ­முல்லாஹ் (ஹக்­கீமின் மைத்­துனர்) ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிய­ம­னத்­திற்கு கட்­சியின் அதி­யுயர் பீடம் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கி­ய­தா­கவும், குறித்த நிய­ம­னங்­களை அனு­ம­திப்­ப­தற்­கான யாப்புத் திருத்தம் அடுத்த பேராளர் மாநாட்டின் மூலம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அறி­வித்­தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்பின் பிர­காரம் அக்­கட்­சியின் பத­விகள் அனைத்தும் பேராளர் மாநாட்­டுக்கு முன்னர் நடை­பெறும் கட்­டாய உயர் பீடக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டு பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும்.
எனினும், குறித்த யாப்பு விதி மீறப்­பட்டு, கட்சித் தலை­வ­ருக்­குள்ள தன்­னிச்­சை­யான அதி­கா­ரத்தின் ஊடா­கவே புதி­தாக மூன்று பிரதித் தலை­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இது போன்றே, கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் ஏற்­பட்ட தேசிய அமைப்­பாளர் பதவி வெற்­றி­டத்­திற்கும், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எம்.எஸ். தௌபீக், அதி­யுயர் பீடத்தின் எந்­த­வித அனு­ம­தி­யு­மின்றி கட்சித் தலை­வ­ரினால் நிய­மிக்­கப்­பட்டார்.

இதே­வேளை, பிரதித் தலை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்ட மூன்று பேரும் இறு­தி­யாக நடை­பெற்ற கட்­சியின் பேராளர் மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வு­மில்லை, அந்த பேராளர் மாநாட்டில் அதி­யுயர் பீட உறுப்­பி­னர்­க­ளாக கட்­சியின் தலை­வ­ரினால் அறி­விக்­கப்­ப­ட­வு­மில்லை.

இவ்­வா­றான நிலையில் அதி­யுயர் பீட உறுப்­ப­ன­ரல்­லாத ஒரு­வரை எப்­படி கட்­சியின் பத­வி­நிலை உறுப்­பி­ன­ராக நிய­மிக்க முடியும் என்­பதும் பாரிய கேள்­விக்­கு­றி­யாகும்.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மன்­னிப்பு கடிதம் வழங்­கினால் மாத்­தி­ரமே அவருக்கு மீண்டும் பதவி வழங்­கப்­படும் என பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

எனினும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீ­ஸ் மன்­னிப்புக் கடிதம் வழங்கி­யமை தொடர்பில் இன்று வரை எந்­த­வித அறி­விப்பும் வெளி­யா­காத நிலையில், அவரை மீண்டும் பிரதித் தலைவர் பத­விக்கு உள்­வாங்­கி­யுள்­ளமை பேராளர்கள் மத்­தியில் சந்­தே­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரபின் மறை­வினை அடுத்து தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட ரவூப் ஹக்­கீ­மினால் கட்­சியின் யாப்பில் பாரிய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு தலை­வ­ரது கைகளில் அதி­கா­ரங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ளன.

அஷ்­ரபின் காலப் பகு­தியில் சுமார் 10க்கு குறை­வான பத­வி­களும், சுமார் 30க்கு உட்­பட்ட உயர் பீட உறுப்­பி­னர்­க­ளுமே காணப்­பட்­டனர். ஆனால் ரவூப் ஹக்கீம் தலை­வ­ரா­னதன் பின்னர் 33 பத­விகள் உரு­வாக்­கப்­பட்­ட­துடன் அதி­யுயர் பீட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 99ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இது போன்று அஷரபின் காலத்தில் காணப்­பட்ட இரண்டு பிரதித் தலை­வர்கள் பதவி கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் மூன்­றா­கவும், அதன் பின்னர் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் நான்­கா­கவும் அதி­க­ரிக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில் பிரதித் தலை­வர்­களின் எண்­ணிக்­கை­யினை ஏழாக அதி­க­ரிக்க ரவூப் ஹக்கீம் முயற்­சித்து வரு­கின்றார். இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு கட்­சி­யிலும் ஏழு பிரதித் தலை­வர்கள் இல்­லாத நிலையில் முஸ்லிம் காங்­கி­ரஸில் மாத்­திரம் இந்த நிய­ம­னத்­தினை மேற்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தில் பிழை­யான முன்­னு­தா­ர­ண­மொன்­றினை காட்ட ரவூப் ஹக்கீம் முயற்­சிக்­கின்றார்.

தனது பத­வி­யினை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காகவே ரவூப் ஹக்கீம் இவ்­வா­றான நிய­ம­னங்­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­வ­தாக அக்­கட்­சியின் அதி­யுயர் பீட உறுப்­பி­னர்கள் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், தனக்கு விருப்­ப­மற்­ற­வர்­களை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வதும், விருப்­ப­மா­ன­வர்­களை கட்­சிக்குள் உள்­வாங்­கு­வ­துமே ரவூப் ஹக்­கீமின் பணி­யாகும்.
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக முஸ்லிம் காங்­கி­ரஸிலிருந்து தான் மாத்­தி­ரமே செயற்­பட வேண்டும் என்­பது ரவூப் ஹக்­கீமின் நிலைப்­பா­டாக இருப்­பதை அவரின் செயற்­பா­டுகள் மூலம் தெரிந்­து­கொள்ள முடி­கி­றது. இத­னா­லேயே அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வி­யினை பொறுப்­பேற்ற ஹாபீஸ் நசீர் அஹமட் ­கட்­சியி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார்.

கட்சித் தலை­மை­யுடன் முரண்­பட்டுக் கொண்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீ­ஸிற்கு பல தட­வைகள் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வி­யினை பொறுப்­பேற்­ப­தற்­கான கோரிக்­கைகள் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும், குறித்த கோரிக்­கை­யினை அவர் நிரா­க­ரித்­­துவிட்டார். இத­னா­லேயே அவர் மீண்டும் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் உள்­வாங்­கப்­பட்­டது மாத்­தி­ர­மல்­லாமல், முன்னர் அவர் வகித்த பத­வியும் வழங்­கப்­பட்டு அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களும் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டது.

ரவூப் ஹக்­கீமின் தலை­மைத்­து­வத்­திற்கு எதி­ராக சதிகள் இடம்­பெற்ற அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் அவ­ருக்கு பக்க பல­மாக நின்று ரவூப் ஹக்­கீமின் தலைமைப் பத­வி­யினை பாது­காத்­தவர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

அப்­ப­டி­யா­னவர், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வி­யினை பெற்­றுக்­கொண்டார் என்ற கார­ணத்­தி­னா­லேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­லிந்து ஓர­மாக்­கப்­பட்­ட­மை­யி­னையும் இவ்­வி­டத்தில் ஞாப­க­மூட்­டு­வது பொருத்தம்.

இவ்­வாறு தொடர்ச்­சி­யாக கட்­சியின் யாப்­பினை மீறி வரு­கின்ற ரவூப் ஹக்கீம், அவ­ரு­டைய அர­சியல் எதி­ரா­ளி­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ, கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் அர­சி­ய­ல­மைப்­பினை மீறு­கின்ற சம­யங்­களில் ஊடக அறிக்­கைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கூக்குரலிடுவது எந்த வகையில் நியாயம்?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.