ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் :ஹிஜாப் அணிந்து சுஹைரியா மத்ரஸாவுக்கு சென்றாரா சாரா?

0 218

(எம்.எப்.எம்.பஸீர்)
பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ள­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் புத்­தளம், அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்­சியம் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த திங்கட்கிழமை ( 23) இது குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், 2 ஆம் பிர­தி­வாதி சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவின் குறுக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. அதன் பின்னர் வழக்குத் தொடுநர் தரப்பின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்வா மீண்டும் கேள்­வி­களைத் தொடுத்து, சாட்­சி­களை பெற்ற பின்னர் அவ­ரது சாட்­சியம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதன்­போது விஷே­ட­மாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக பர­வ­லாக நம்­பப்­படும் லதீபா எனும் பெண் மற்றும் சாய்ந்­த­ம­ருது வெடிப்பின் பின்னர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாக கூறப்­படும் சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்ரன் ஆகியோர் , தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ர­ஸா­வுக்கு சென்று வந்­துள்­ள­தாக அளிக்­கப்­பட்­டுள்ள சாட்­சியம் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகளி­ன் தேவைக்­காக, அவ்­வி­ரு­வரின் பெய­ரையும் இந்த விவ­கா­ரத்தில் முதல் சாட்­சி­யாளர் கூறு­வ­தாக இதன்­போது பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. எனினும் சாட்­சி­யாளர் அதனை நிரா­க­ரித்தார்.

உயிர்த்­த­ ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த 23 ஆம் திகதி திகதி நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இவ்­வ­ழக்­கினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விஷே­ட­மாக மேற்­பார்வை செய்யும் நிலையில் அதற்­காக பிரத்­தி­யேக சட்­டத்­த­ரணிகள் குழாம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி திங்­க­ளன்று நடந்த வழக்கு விசா­ர­ணை­களை மேற்­பார்வை செய்ய, இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் அடுத்த தலை­வ­ராக செயற்­ப­ட­வுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கெளஷல்ய நவரட்ன நேரடியாக மன்றில் ஆஜராகியிருந்தார்.

இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24 வரை ஒத்தி வைத்த நீதிமன்றம், 2,46,51,52 ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.