இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதி செய்க

மீண்டும் வலியுறுத்தியது ஐ.நா. பிரேரணை; இன்று வாக்கெடுப்பு

0 252

முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் ஒதுக்­கப்­ப­டு­வ­தையும் பாகு­பாடு காட்­டப்­ப­டு­வ­தையும் நிவர்த்தி செய்­வ­தற்கும், முஸ்­லிம்­களும் பிற சம­யங்­களைச் சேர்ந்­த­வர்­களும் தத்­த­மது மதச் சடங்­கு­களைத் தொடர்ந்து கடைப்­பி­டிப்­பதை உறுதி செய்­வ­தற்கும் இலங்கை அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் நீண்­ட­காலக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் தனது கடப்­பாட்டை நிறை­வேற்ற வேண்டும் என்றும் குறித்த பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பதில் ஆணை­யாளர் நதா அல் நாஸிப் இப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலை­மை­யி­லான இணை­ய­னு­ச­ரணை நாடு­களால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள புதிய பிரே­ர­ணையின் இறுதி வரைபு கடந்த வாரம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், இன்று ஒக்­டோபர் 6 ஆம் திகதி இப்­பி­ரே­ரணை மீதான விவா­தத்தைத் தொடர்ந்து வாக்­கெ­டுப்பை நடாத்­து­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 51 ஆவது கூட்­டத்­தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்­ப­மான நிலையில், அன்­றைய தினமே இலங்கை தொடர்­பான மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னி­கரின் அறிக்­கையின் சாராம்சம் வாசிக்­கப்­பட்டு, அது­கு­றித்த விவா­தமும் இடம்­பெற்­றது. அதன் தொடர்ச்­சி­யாக பிரிட்டன் தலை­மையில் அமெ­ரிக்கா, கனடா, ஜேர்­மனி, வட மெசி­டோ­னியா, மாலாவி மற்றும் மொன்­ர­னேக்ரோ ஆகிய இணை­ய­னு­ச­ரணை நாடுகள் இணைந்து ‘இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்தல்” என்ற தலைப்பில் தயா­ரித்­துள்ள புதிய பிரே­ர­ணையின் வரைபு கடந்த வாரம் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதன்­பின்னர் அப்­பி­ரே­ரணை வரைபு குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் தர்க்­கங்­களைத் தொடர்ந்து அதில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்­ன­ரான 2 ஆவது வரைபு வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே, அதன் இறுதி வரைபு தற்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இப் பிரே­ர­ணையில் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முறி­ய­டிப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­படும் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் குறிப்­பாக சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்டம், சர்­வ­தேச அகதிகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பில் அரசுகள் கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு ஏற்புடையதாக அமையவேண்டும் என்றும் இணையனுசரணை நாடுகள் இப் பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.