முஸ்லிம் மக்களின் சமய உரிமைகளை உறுதிப்படுத்துக

ஐ.நா. மனித உரிமை பிரேரணையில் வலியுறுத்து

0 250

(நா.தனுஜா)
கொவிட் தொற்றின் போது முஸ்லிம் சமூ­கத்தை ஓரங்­கட்­டும்­வ­கை­யிலும் அவர்கள் மீது பாகு­பா­டு­களை அதி­க­ரிக்கும் வித­மா­கவும் அர­சாங்கம் தீர்­மானம் எடுத்­தது. தற்­போது கொவிட் தொற்றால் உயி­ரி­ழந்­தோரை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­பினும் முஸ்­லிம்­களின் சமய உரி­மை­களை உறு­தி­ப­டுத்­து­மாறு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 51 ஆவது கூட்­டத்­தொடர் கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மான நிலையில், அன்­றைய தினமே இலங்கை தொடர்­பான மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னி­கரின் அறிக்­கையின் சாராம்சம் வாசிக்­கப்­பட்டு, அது­கு­றித்த விவா­தமும் இடம்­பெற்­றது. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் பிரிட்டன், அமெ­ரிக்கா, கனடா, ஜேர்­மனி, வட­மெ­சி­டோ­னியா மற்றும் மாலாவி ஆகிய 6 இணை­ய­னு­ச­ரணை நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பில் ‘இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்தல்’ என்ற தலைப்பில் தயா­ரித்­துள்ள புதிய பிரே­ர­ணையின் வரைபு நேற்று முன்­தினம் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஐக்­கிய நாடுகள் சாச­னத்தின் நோக்­கங்கள் மற்றும் குறிக்­கோள்­களால் வழி­ந­டத்­தப்­பட்டு, மனித உரி­மைகள் தொடர்­பான உல­க­ளா­விய பிர­க­ட­னத்தை மீளு­று­திப்­ப­டுத்தி, மனித உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை மீள­நி­னை­வூட்டும் வகையில் இப்­பி­ரே­ரணை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு இறை­யாண்­மை­யு­டைய, சுயா­தீ­ன­மா­னதும் ஐக்­கி­ய­மா­னதும் சுயாட்­சி­யு­டை­ய­து­மான இலங்­கையை அங்­கீ­க­ரிக்கும் அதே­வேளை, மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­துடன் அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் அடிப்­படைச் சுதந்­தி­ரத்தைப் பாது­காப்­பது ஒவ்­வொரு அர­சி­னதும் முக்­கிய பொறுப்­பாகும் என்று அப்­பி­ரே­ர­ணையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை முகங்­கொ­டுத்­து­வரும் மிகத்­தீ­வி­ர­மான பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் அந்­நெ­ருக்­கடி மக்­கள்­மீது ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கங்கள் என்­ப­வற்றை ஏற்­ப­தா­கவும், இருப்­பினும் தீவிர இரா­ணு­வ­ம­ய­மாக்கல், ஆட்­சி­நிர்­வா­கத்தில் நிலவும் பொறுப்­புக்­கூ­ற­லின்மை மற்றும் மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்குத் தண்­டனை வழங்­கப்­ப­டாமை ஆகி­யன உள்­ள­டங்­க­லாக தற்­போ­தைய நெருக்­கடி தோற்­றம்­பெ­று­வ­தற்குப் பங்­க­ளிப்­புச்­செய்த கார­ணி­களைக் கண்­ட­றிந்து தீர்வை வழங்­க­வேண்­டி­யதும் தற்­போ­தைய மற்றும் முன்னாள் அரச அதி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லாக ஊழல்­மோ­ச­டி­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தி பொறுப்­புக்­கூ­றலை உறு­தி­செய்­வதும் அவ­சியம் எனவும் அப்­பி­ரே­ரணை ஊடாக இணை­ய­னு­ச­ரணை நாடுகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

‘அமை­தி­வ­ழிப்­போ­ராட்­டங்கள் அபி­வி­ருத்­தி­யிலும் தேர்­தல்கள் மற்றும் சட்­டத்தின் ஆட்சி உள்­ள­டங்­க­லாக ஜன­நா­ய­கக்­கட்­ட­மைப்பின் செயற்­தி­றனை வலுப்­ப­டுத்­து­வ­திலும் நேர்­ம­றை­யான பங்­க­ளிப்பை வழங்­கக்­கூடும் என்­ப­துடன் போராட்­டங்­களில் கலந்­து­கொள்­வ­தென்­பது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தல் மற்றும் அமை­தி­யான முறையில் ஒன்­று­கூ­டுதல் ஆகி­ய­வற்­றுக்­கான உரி­மையை அனு­ப­விப்­பதன் ஓர் முக்­கிய வடி­வ­மாகும்’ என்று பிரே­ர­ணையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள பிரிட்டன் தலை­மை­யி­லான இணை­ய­னு­ச­ரணை நாடுகள், கடந்த 2021 ஓகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து நாட்டில் 4 முறை அவ­ச­ர­கா­லச்­சட்டம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டமை குறித்தும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

‘நல்­லி­ணக்­கத்­திற்கு மிகவும் அவ­சி­ய­மான அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்வு, அனைத்­துப்­பி­ர­ஜை­க­ளுக்கும் மனித உரி­மை­களை முழு­மை­யாக அனு­ப­விப்­ப­தற்­கான வாய்ப்பு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்­வதில் தாம் கொண்­டி­ருக்கும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­மாறு இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­துடன் மாகா­ண­ச­பைத்­தேர்­தல்­களை நடாத்­துதல் மற்றும் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் வடக்கு, கிழக்கு மாகா­ண­ச­பைகள் உள்­ள­டங்­க­லாக நாட்­டி­லுள்ள அனைத்து மாகா­ண­ச­பை­களும் செயற்­தி­ற­னாக இயங்­கு­வதை உறு­தி­செய்தல் ஆகி­ய­வற்றின் மூலம் உள்­ளு­ராட்சி நிர்­வா­கத்­திற்கு மதிப்­ப­ளிக்­கு­மாறும் அர­சாங்­கத்தை ஊக்­கு­விக்­கின்றோம்’ என்று புதிய பிரே­ர­ணையில் இணை­ய­னு­ச­ரணை நாடுகள் தெரி­வித்­துள்­ளன.

மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் நீண்­ட­காலக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வதில் அடை­யப்­பட்­டுள்ள மிகச்­சொற்­ப­ள­வி­லான முன்­னேற்றம் அவை தீவிர கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இதே­வேளை, இலங்­கையில் கொவிட் வைரஸ் தொற்று நோய் பரவ ஆரம்­பித்­த­போது, மத நம்­பிக்­கை­களின் சுதந்­தி­ரத்தைப் பாதிக்கும் வகையில் அர­சாங்கம் எடுத்த தீர்­மானம் முஸ்லிம் சமூ­கத்தை ஓரங்­கட்­டு­வ­தா­கவும் அவர்கள் மீதான பாகு­பா­டு­களை அதி­க­ரிப்­ப­தா­கவும் அமைந்­தி­ருந்­தது. தற்­போது கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் முஸ்­லிம்­களும் ஏனைய மதத்­த­வர்­களும் தமது சமய உரி­மை­களை தொடர்ந்தும் கடைப்­பி­டிப்­பதை உறுதிப்படுத்துமாறு வலியுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பிலான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை விரிவுபடுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்வதுடன் அதுகுறித்து எதிர்வரும் 53 ஆவது மற்றும் 55 ஆவது கூட்டத்தொடர்களில் வாய்மொழிமூல அறிக்கையையும் 54 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையும் 57 ஆவது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோருகின்றோம்’ என்று இணையனுசரணை நாடுகள் அப்புதிய பிரேரணையில் குறிப்பிட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.