மஹர பள்ளிவாசல் மையவாடிக்கும் சவால்

முஸ்லிம் சமய திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது நிர்வாகம்

0 274

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்­கி­வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் மூடப்­பட்டு 3 வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான மைய­வா­டிக்கும் தற்­போது சவால்கள் எழுந்­துள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளது.

40 பேர்ச்சஸ் பரப்­ப­ளவைக் கொண்ட சுமார் 52 வரு­ட­காலம் வர­லாறு கொண்ட மைய­வா­டியும் சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் எதிர்­கா­லத்தில் கையேற்­கப்­பட்டால் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் சிர­மத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் என மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் ஹபீல் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லை­ய­டுத்து குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்குத் தடை செய்­யப்­பட்­டது. முஸ்­லிம்கள் பள்­ளி­வா­ச­லுக்குள் பிர­வே­சிப்­பது முற்­றாக மறுக்­கப்­பட்­டது. அத்­தோடு 2020 ஆண்டு பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்­ட­துடன் அங்கு புத்தர் சிலையும் வைக்­கப்­பட்டு பெளத்­த­மத வழி­பா­டுகள் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் ­தலைவர் ஹபீல் இது தொடர்பில் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், இப்­பள்ளிவாச­லுக்கு 40 பர்ச்சஸ் காணி மைய­வா­டி­யாக உப­யோ­கப்­ப­டுத்­து­வ­தற்கு 1970 ஆம் ஆண்டு கம்­பஹா மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு (District Development Council) அதி­கா­ரி­யினால் வழங்­கப்­பட்­டது. அதற்­கான ஆவ­ண­முள்­ளது. தற்­போது பள்­ளி­வா­சலை சிறைச்­சாலை நிர்­வாகம் கையேற்­றுள்ள நிலையில் இம்­மை­ய­வாடி காணிக்கும் சவால் ஏற்­பட்­டுள்­ளது.

இப்­ப­கு­தியில் பள்­ளி­வாசல் ஜமாஅத்­தாக சுமார் 500 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. இம்­மை­ய­வாடி காணியை சட்ட ரீதி­யாக பெற்­றுக்­கொள்­வ­தற்கு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற 3 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே பள்­ளி­வாசல் நிர்­வாகம் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொண்­ட­போதும் இது பல­ன­ளிக்­க­வில்லை.

இக்­காணி துறை­முக அதி­கார சபைக்கு சொந்­த­மாக இருந்­துள்­ளது. இக்­கா­ணியை நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை பொறுப்­பெ­டுத்து பிர­தேச சபைக்கு வழங்க வேண்டும். பிர­தேச சபை இக்­கா­ணியை பள்­ளி­வா­ச­லுக்கு கைய­ளிக்க வேண்டும்.

பள்­ளி­வா­சலை தற்­போது சிறைச்­சாலை நிர்­வாகம் பொறுப்­பேற்று சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றி­யுள்ள நிலையில் பள்­ளி­வா­சலின் கீழ் இயங்கி வந்த மைய­வாடி காணிக்கு சவால் ஏற்­பட்­டுள்­ளது. இது விட­யத்தில் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்பு சபை தலை­யிட்டு பள்­ளி­வா­ச­லையும் மைய­வா­டி­யையும் மீட்­டுத்­த­ர­வேண்டும் என்றார்.

திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர்

இவ்­வி­வ­காரம் தொடர்பில் விடி­வெள்ளி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்­ஸா­ரிடம் வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

மஹர பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையும், திணைக்­க­ளமும் நீதி,சிறைச்­சா­லைகள் மற்றும் அர­சியல் யாப்பு திருத்தம் அமைச்சின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ளது. சந்­திப்­புக்­கான திக­தி­யொன்­றினைக் கோரி­யுள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொள்ள எதிர்பார்க்கிறோம். சிறைச்சாலை நிர்வாகத்தினால் பொறுப்பேற்றுள்ள பள்ளிவாசலை மீளப் பெற்றுக்கொள்வதே எமது இலக்கு. பள்ளிவாசல் மீள கையளிக்கப்படாவிட்டால் அப்பகுதி சுற்றாடலில் பள்ளிவாசலுக்கென காணி அல்லது கட்டிடமொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்போம். பள்ளிவாசலை மீளப்பெற்றுக்கொண்டால் மையவாடிக்கும் சவால் ஏற்படமாட்டாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.