ஜனாஸாக்களை எரித்தமையால் எம்மை முஸ்லிம் நாடுகள் பகைத்துக் கொண்டன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 233

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொரோனா தொற்று நோய் பர­வி­ய­ காலத்தில் அந்­நோ­யினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­யலாம் என உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­தி­ருந்த நிலையில் அதை­யும்­ மீறி அப்­போ­தைய ஜனா­தி­ப­தி ­கோத்­தா­பய ராஜ­பக்ஷ அடக்கம் செய்­வ­தற்கு தடை­வி­தித்தார்.

கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்த முஸ்லிம் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. அர­சாங்கம் அடக்கம் செய்­வ­தற்கு தடை­வி­தித்ததால் முஸ்லிம் நாடுகள் எம்மைப் பகைத்துக் கொண்­டன. எமது நாடு பலத்த பாதிப்­புக்­குள்­ளா­கி­யது என முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

கட்டார் அர­சாங்கம் இந்­நாட்டு மாண­வர்­க­ளுக்கு உதவி வழங்­கு­வ­தற்­காக ஸ்தாபிக்­கப்­பட்­டி­ருந்த நிதியம், கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் தடை செய்­யப்­பட்­டது. இதனால் கட்டார் நாட்டின் உற­வையும் நாம் இல்­லாமற் செய்து கொண்டோம்.எரி­பொருள் நெருக்­க­டிக்கு நாம் உள்­ளா­கி­ய­போது அந்­நாட்­டுக்கு எரி­பொ­ருள்­கோரி எமது தூதுக்­கு­ழு­வினர் அங்கு சென்­ற­போது அவர்கள் விடுத்த கோரிக்­கையின் பின்பே அந்­நி­தி­யத்­தின்­மீ­தான தடை எமது நாட்­டினால் நீக்­கப்­பட்­டது.

கடந்த ஆட்­சியில் பெரும்­பா­லான வெளி­நா­டுகள் எம்­மி­லி­ருந்தும் தூர­மா­கின. தமிழ் புலம் பெயர்ந்­தோரை இந்­நாட்டில் முத­லீடு செய்­யு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ அறைகூவல் விடுத்த போதும் அவர்­க­ளி­ட­மி­ருந்து எமது நாட்­டுக்கு ஒரு சத­மேனும் முத­லீடு செய்­யப்­ப­ட­வில்லை. கோத்தாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான நிலைமை எமது நாட்டினை ஒரு நெருக்கடி நிலைக்குள்ளாக்கின என்றார்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.