பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன்

காத்­தான்­குடி ஹுசை­னியா பள்­ளி­வா­சலில் அருட்­தந்­தை ரொஹான்

0 821

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
1990 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்­துக்­காக தான் மன்­னிப்புக் கோரு­வ­தாக மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் தெரி­வித்தார்.
காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­லையின் 31 ஆவது வருட நினைவு தின நிகழ்வு, துப்­பாக்­கிச்­சூடு இடம்­பெற்ற மஸ்­ஜிதுல் ஹுசை­னிய்­யாவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இந்தப் பள்­ளி­வாயல் படு­கொ­லை­யா­னது தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஒரு அமைப்பால் நடாத்­தப்­பட்­டது என்­ப­தற்­காக நாம் உங்­க­ளி­டத்தில் மன்­னிப்புக் கோரு­கின்றோம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­லையின் 31 ஆவது வருட நினைவு தினம் கடந்த 03 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

03.08.1990 அன்று காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வாசல், அதே பகு­தி­யி­லுள்ள மஸ்­ஜிதுல் ஹுஸை­னிய்யா பள்­ளி­வாசல் ஆகிய இரண்­டிலும் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த 103 முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­களால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

பள்­ளி­வாசல் படு­கொ­லை­யின 31 ஆவது வருட நினைவு தினத்­தை­யொட்டி இவ்­வி­ரண்டு பள்­ளி­வா­யல்­க­ளிலும் குர்ஆன் ஓதுதல், துஆப் பிரார்த்­தனை, நினை­வுரை போன்ற நிகழ்­வுகள் இடம் பெற்­றன.

காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வா­சலில் அதன் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்­லெவ்வை தலை­மை­யிலும் மஸ்­ஜிதுல் ஹுஸை­னிய்யா பள்­ளி­வா­சலின் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.சமீம் தலை­மை­யிலும் இரு வேறு நிகழ்­வுகள் நடை­பெற்­றன.

ஹுஸை­னிய்யா பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் கலந்து கொண்டு சிறப்­பித்­த­துடன் பிஸ்மி சமா­தான கற்­கைகள் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்­பட உல­மாக்கள், சமூக சமய பிர­மு­கர்கள், பள்­ளி­வா­யல்­களின் நிரு­வா­கி­ககள் என பலரும் கலந்து கொண்­டனர்.

நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் உரை­யாற்­று­கையில்,
பல வன்­மு­றை­க­ளையும், படு­கொ­லை­க­ளையும் வேத­னை­க­ளையும், அனு­ப­வித்த சமூகம் நாங்கள். அதன் வேதனை எங்­க­ளுக்கு தெரியும். அந்த வகையில் இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லையும் இதில் உயிர் நீத்­த­வர்­களின் குடும்ப உற­வு­க­ளுக்கு எவ்­வாறு வேத­னை­களை, இழப்பைக் பாதிப்பை கொடுத்­தி­ருக்கும் என்­ப­தையும் அவர்­க­ளது பிள்­ளைகள் எவ்­வ­ளவு பாதிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் என்­ப­தையும் நாம் அறிவோம்.
ஆகவே இதனை எந்த விதத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.வன்­மு­றைக்கு வன்­முறை ஒரு போதும் தீர்­வாக அமை­யாது. இனி­மேலும் இவ்­வா­றான நிகழ்­வுகள் ஒரு போதும் நடை­பெறக் கூடாது.

எனவே இந்த நாளில் இதன் வேத­னையை உணர்ந்­த­வர்­க­ளாக உற­வு­களை இழந்து துய­ரப்­ப­டு­கின்ற இன்­றைய நாளில் உங்­க­ளி­டத்தில் மன்­னிப்பை கேட்­ப­தோடு இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­றா­ம­லி­ருக்க நாங்கள் ஒன்று சேர்ந்து எங்­களால் இயன்ற முயற்­சி­களை செய்து கொண்டே இருப்போம்.

சமா­தா­னத்­துக்­காக, அனைத்து மக்­க­ளு­டைய நல்­வாழ்­வுக்­காக, நமது இளம் சந்­த­திகள் சந்­தோ­ச­மாக இந்த உல­கத்தில் வாழ்­வதற்­காக எம்மால் இயன்ற முயற்­சி­களை செய்வோம் என்றும் தெரி­வித்தார்.

இங்கு பிஸ்மி சமா­தான கற்­கைகள் நிறு­வ­னத்­தி­னதும் பிஸ்மி நிறு­வ­னத்­தி­னதும் முகா­மைத்­துவ பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி இங்கு உரை­யாற்­று­கையில்,
வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பொறிக்­கப்­பட வேண்­டிய ஒரு உரையை அருட்­தந்தை ரொஹான் இங்கு ஆற்­றினார். இந்த சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னால் ஆயிரம் கண்ணீர் கதைகள் இருக்­கின்­றன. இந்த சபையைப் பார்க்­கின்ற போதும் கூட அன்று காயப்­பட்டு உயி­ருக்குப் போராடி தப்பி பிழைத்த பல சகோ­த­ரர்கள் இருக்­கின்­றார்கள்.
இப்­ப­டி­யான துக்­க­க­ர­மான நிகழ்வு இலங்கை வர­லாற்றில் எடுத்து பார்க்­கின்ற போது எல்லா சம­யங்­க­ளுக்கும் நடந்­தி­ருக்­கி­றது.

நாம் காத்­தான்­குடி பள்­ளி­வாயல் படு­கொலை பற்றி பேசு­கின்ற போது, ஏறாவூர் படு­கொலை பற்றி பேசு­கின்ற போது பௌத்த மக்கள், அரந்­த­லாவ படு­கொலை பற்றிப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். பௌத்த சமயத் தலை­வர்கள், சிறு­வர்கள் என பலரும் இதில் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இதை எல்லாம் விட தமிழ் மக்கள்,கிறிஸ்­தவ மக்­களின் தங்­க­ளது தேவா­ல­யங்கள் மீது விமா­னங்­களின் மூலம் வீசப்­பட்ட குண்­டு­க­ளினால் கொல்­லப்­பட்ட தமது உற­வு­களைப் பற்றிப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
முள்­ளி­வாய்க்கால் இடத்­திலே தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஏன் கொல்­லப்­பட்­டார்கள் என்று தெரி­யாமல் பச்­சிளம் பால­கர்கள் பெரி­ய­வர்கள் இதில் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இறு­தி­யாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்­டுத்­தக்­கு­தலில் நமது மாவட்­டத்­தி­லி­ருக்­கின்ற சீயோன் தேவா­ல­யத்தில் வணக்க வழி­பாட்­டுக்குச் சென்ற 30க்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் நாங்கள் ஏன் கொல்­லப்­பட்டோம் என்று தெரி­யா­மலே உயி­ரி­ழந்­துள்­ளார்கள்.
இப்­படி தேசத்தின் வர­லாற்றைப் புரட்டிப் பார்க்­கின்­ற­போது காயமும் கண்­ணீரும் கம்­ப­லையும் கவ­லை­க­ளு­மா­கவே இருக்­கின்­றன. எனவே தான் இவ்­வா­றான நிகழ்­வுகள் இம் மண்­ணிலே தொடர்ந்து நிகழ வேண்­டுமா அல்­லது இவை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து எதிர்­கால பரம்­ப­ரைக்கு நாம் வாழு­கின்ற இந்த தாய்­நாட்டை அமை­தி­மிக்க சுபீட்சம் மிக்க தேச­மாக கைய­ளித்து விட்டுச் செல்ல வேண்­டுமா என்ற கேள்­வியை நாம் எல்­லோரும் நமக்­குள்ளே எழுப்பி விடை காண வேண்டும்.

அதனால் தான் அருட்­தந்தை என்னை தொலை­பே­சியில் அழைத்து, ஆகஸ்ட் 3 ஆம் திகதி சுஹ­தாக்கள் தின நிகழ்வில் பங்­கேற்று நான் காத்­தான்­குடி மக்­க­ளோடு பேச வேண்டும் ;எனக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தித் தாருங்கள் என்று கேட்டார். அந்த வகை­யில்தான் பள்­ளி­வாயல் நிரு­வா­கி­க­ளோடு பேசிய வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

நான் பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமூ­கத்­திடம் இந்த சம்­ப­வத்­திற்­காக மன்­னிப்புக் கோர வேண்டும் என்று கூறி, இந்த இடத்­தி­லேயே பகி­ரங்­க­மாக மன்­னிப்பும் கேட்டார்.
உண்­மையைக் கண்­ட­றி­வது, மன்­னிப்புக் கோரு­வது, மன்­னிப்­ப­ளிப்­பது என்­பன இஸ்­லாத்தில் வலி­யு­றுத்­தப்­பட்ட விட­யங்கள். நபி­ய­வர்­களை கொலை செய்ய வந்­த­வர்­களை மன்­னித்த வர­லாற்றைக் கொண்ட சொந்­தக்­கா­ரர்கள் நாம்.
எனவே விரும்­பியோ விரும்­பா­மலோ நடந்த இந்த சம்­ப­வங்­களில் இருந்து மீண்­டெ­ழுந்து இவ்­வா­றான காயப்­ப­டுத்தும் சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றா­த­வாறு பாது­காப்­பது நமது பொறுப்­பாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இதேபோன்று காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்­ஆப்­பள்­ளி­வா­யலில் நடை­பெற்ற சுஹ­தாக்கள் தின தின நிகழ்வில் சிறப்­பு­ரையை அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி ஆற்­றினார்.

அங்கு விஷேட துஆப்­பி­ராத்­த­னையை காத்­தான்­குடி ஜாமி­யத்துல் பலாஹ் அர­புக்­கல்­லூ­ரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நடாத்தி வைத்தார்.
மிகவும் அமை­தி­யான முறையில் இம் முறை சுஹ­தாக்கள் தின நிகழ்­வுகள் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.