ஓட்­ட­மா­வ­டியில் சீராக நடை­பெறும் ஜனாஸா நல்­ல­டக்கம்

0 528
  • இது­வரை 39 ஜனா­ஸாக்கள் அடக்கம்

  • பிர­தே­சத்தில் பலத்த இரா­ணுவ பாது­காப்பு

  • இறுக்­க­மான சுகா­தார நடை­மு­றைகள்

  • அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் உட்­செல்ல அனு­ம­தி­யில்லை

  • ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இடம் ஒதுக்­கு­மாறு கோரிக்கை

  • இறக்­காமம், கிண்­ணியா, காலி­யிலும் இடங்கள் தயார் நிலையில்

 

எஸ்.எம்.எம்.முர்ஷித்

சுமார் ஒரு வரு­ட­கா­ல­மாக மறுக்­கப்­பட்டு வந்த கொவிட் தொற்­றுக்­குள்­ளான ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் உரிமை மீளக் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து இலங்கை முஸ்­லிம்கள் ஆறு­த­ல­டைந்­துள்­ளார்கள்.
கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்­ளிக்­கி­ழமை முதல் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள மஜ்மா நகரில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய நேற்று வரை அப் பகு­தியில் 39 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

ஜனாஸா அடக்க அனு­ம­தியும்
காணி அடை­யா­ளமும்
2020 மார்ச் 30 ஆம் திகதி சுகா­தார அமைச்­சரால் வெளி­யி­டப்­பட்ட விசேட வர்த்­த­மா­னியைத் தொடர்ந்து இலங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்ய மட்­டுமே முடியும் என்ற கொள்கை கண்­டிப்­பாக பின்­பற்­றப்­பட்டு வந்­தது. எனினும் சுமார் 11 மாத கால போராட்­டங்கள், சர்­வ­தேச அழுத்­தங்­களைத் தொடர்ந்து கொவிட் 19 இனால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்­யவும் முடியும் என்ற வர்த்­த­மா­னியை கடந்த பெப்­ர­வரி 25 ஆம் திகதி சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டது. ஆனாலும் அடக்கம் செய்­வ­தற்­கான சுகா­தார வழி­காட்­டல்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டாமை, அடக்கம் செய்­வ­தற்குப் பொருத்­த­மான இடம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டாமை போன்ற கார­ணங்­களால் வர்த்­த­மானி வெளி­வந்து 10 நாட்­களின் பின்­னரே அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்­ப­மா­கின.

ஆரம்­பத்தில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள இர­ணை­தீ­வி­லேயே கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தது. எனினும் இதற்கு அப் பிர­தேச அர­சி­யல்­வா­திகள், மத தலை­வர்கள் மற்றும் பொது மக்­க­ளி­ட­மி­ருந்து பலத்த எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ‘‘ முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அடக்க வேண்டும் என்ற கோரிக்­கையை நாம் மன­தார ஆத­ரிக்­கிறோம். ஆனால் கொவிட் சட­லங்­களை அடக்­கு­வ­தற்கு பொருத்­த­மான இடம் இது­வல்ல‘‘ என பிர­தேச மக்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். அதே­போன்று பல நூறு கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள தீவுப் பகு­திக்கு கொண்டு சென்று ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யவோ அதன் மூலம் அங்கு வாழும் கிறிஸ்­தவ மக்­களை சங்­க­டத்தில் ஆழ்த்­தவோ முடி­யாது என முஸ்­லிம்­களும் இதற்கு மறுப்புத் தெரி­வித்­தனர்.

இந் நிலை­யி­லேயே மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள மஜ்மா நக­ரி­லுள்ள சுமார் 10 ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட காணி அப் பகுதி பிர­தேச சபை மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் அடை­யாளம் காணப்­பட்டு ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய வழங்­கப்­பட்­டது.

இரா­ணுவம், சிவில் சமூகம்
இணைந்து பணி
மட்­டக்­க­ளப்பு மாவட்ட கொவிட் செய­லணி பொறுப்­ப­தி­காரி பிரி­கே­டியர் பிரதீப் கமகே தலை­மை­யி­லான குழு­வினர் குறித்த காணியை பார்­வை­யிட்­ட­துடன் உட­ன­டி­யாக சுகா­தார சேவைகள் பணிப்­பா­ளரின் அனு­ம­தியைப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­தனர். ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் வி.தவ­ராஜா, ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர், ஓட்­ட­மா­வடி பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர், காத்­தான்­குடி மற்றும் ஏறாவூர் பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வன சம்­மே­ளன பிர­தி­நி­திகள், ஓட்­ட­மா­வடி சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­லக அதி­கா­ரிகள், கல்­குடா ஜனாஸா நலன்­புரி சங்க பிர­தி­நி­திகள் என பலரும் இந்தப் பணியை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கினர்.

இந் நிலை­யி­லேயே குறித்த காணியில் மேட்டு நிலப்­ப­கு­தி­யா­க­வுள்ள சுமார் 3 ஏக்கர் காணியை அடை­யா­ளப்­ப­டுத்­திய இரா­ணு­வத்­தி­னரும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­களும் அப் பகு­தியில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கினர். இத­னை­ய­டுத்தே அங்கு தற்­போது அடக்கம் செய்யும் பணிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

39 ஜனா­ஸாக்கள் அடக்கம்
இதற்­க­மைய கடந்த வெள்­ளிக்­கி­ழமை 9 ஜனா­ஸாக்கள், சனிக்­கி­ழமை 8 ஜனா­ஸாக்­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை 7 ஜனா­ஸாக்­களும் திங்­கட்­கி­ழமை 7 ஜனா­ஸாக்கள் செவ்­வாய்க்­கி­ழமை 7 ஜனா­ஸாக்கள் புதன் கிழமை 1 ஜனாஸா என நேற்று வரை 39 ஜனா­ஸாக்கள் இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. நேற்­றைய தினம் எந்­த­வொரு ஜனா­ஸாவும் அடக்கம் செய்­யப்­ப­ட­வில்லை என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார். ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்தில் 500 க்கும் மேற்­பட்ட ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான இட வசதி உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

காத்­தான்­குடி, ஏறாவூர், அட்­டா­ளைச்­சேனை நிட்­டம்­புவ எஹ­லி­யா­கொடை, மட்­டக்­குளி, மல்­வானை, ஹுனு­பிட்டி, களனி, குரு­நாகல், திஹாரி உள்­ளிட்ட பல்­வேறு பிர­தே­சங்­களில் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களே இது­வரை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

தற்­போது அடக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்­களில் பெரும்­பா­லா­னவை இவ்­வாறு பல மாதங்­க­ளாக நாட்டின் பல பாகங்­க­ளி­லு­முள்ள வைத்­தி­ய­சா­லை­களில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வையே. எனினும் சுற்று நிருபம் வெளி­வந்த பின்னர் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களும் தற்­போது அங்கு உட­னுக்­குடன் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

நாட்டின் பல பாகங்­க­ளிலும் வைத்­தி­ய­சா­லை­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்­கத்­திற்­காக தொடர்ந்து இங்கு வந்த வண்­ண­முள்­ளன. இதற்குத் தேவை­யான முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை அர­சாங்­கமும் பாது­காப்புத் தரப்பும் சுகா­தாரப் பிரி­வி­னரும் ஏனைய தரப்­பி­னரும் வழங்கி வரு­கின்­றனர் என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எல்.நௌபர் தெரி­வித்தார்.

இத­னி­டையே கொவிட்­டினால் உயி­ரி­ழந்த கிறிஸ்­தவ மக்­களின் சட­லங்­க­ளையும் இப் பகு­தியில் அடக்கம் செய்­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

சுற்று நிரு­பத்­திற்­க­மை­யவே அடக்கம்
ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் நட­வ­டிக்­கை­யா­னது பலத்த கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­த­ன­வினால் வெளி­யி­டப்­பட்ட சுற்று நிரு­பத்­தி­லுள்ள வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே அடக்கம் செய்யும் பணிகள் இடம்­பெ­று­கின்­றன.

வைத்­தி­ய­சா­லை­களில் வைத்தே ஜனா­ஸாக்கள் பிரேத பைகளில் சுற்­றப்­பட்டு, பெட்­டி­களில் வைத்து இறுக்­க­மாக சீலி­டப்­பட்டு பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் அடக்கம் செய்யும் இடத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றன. ஜனா­ஸாக்கள் அடக்­கு­மி­டத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­வுடன், ஜனா­ஸாவை வாக­னத்தில் வைத்­தி­ருந்­த­வாறே தொழுகை நடாத்­தப்­ப­டு­கி­றது. உற­வி­னர்கள் மாத்­திரம் இத் தொழு­கையில் பங்­கேற்க அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது. அடக்கம் செய்யும் இடத்­திற்கு அருகே செல்ல ஜனா­ஸாவின் உற­வி­னர்கள் இருவர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

வாக­னத்தை புதை­கு­ழிக்கு அருகில் நிறுத்­தி­விட்டு, அதற்­கென நிய­மிக்­கப்­பட்ட ஊழி­யர்­களால் பெட்டி கீழி­றக்­கப்­பட்டு குழி­யினுள் வைக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் அடக்கம் செய்யும் பணியில் ஈடு­படும் அரச ஊழி­யர்கள் மற்றும் தொண்­டர்கள் அணிந்­தி­ருந்த பாது­காப்பு ஆடை­களும் குறித்த குழி­யினுள் இடப்­பட்டு பெக்கோ இயந்­திரம் மூலம் குழி மூடப்­ப­டு­கி­றது.

பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள், பொது சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள் உள்­ளிட்ட மிகச் சில­ருக்கு மாத்­தி­ரமே இப் பகு­திக்குச் செல்ல அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது. அங்கு வருகை தந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட இரா­ணு­வத்­தி­னரால் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இரா­ணு­வத்­தினர் பலத்த
பாது­காப்பு
குறித்த காணியின் எல்லைப் புறம் முழு­வதும் இரா­ணு­வத்­தினர் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அப் பகு­தியில் இரா­ணுவ காவ­லரண் ஒன்றை அமைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் இரா­ணு­வத்­தி­னரால் உட­னுக்­குடன் புகைப்­படம், வீடியோ எடுக்­கப்­பட்டு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தில் அடை­யாளக் கற்கள் இடப்­ப­டு­கின்­றன. சுகா­தார அதி­கா­ரி­களும் தொண்­டர்­களும் அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களின் பெயர் விப­ரங்­களை வரி­சைப்­படி இலக்­க­மிட்­டுள்­ளனர். எதிர்­கா­லத்தில் குடும்­பத்­தினர் தமது உற­வு­களின் ஜனாஸா அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை தேடி வரும்­போது அவற்றை இல­குவில் அடை­யாளம் கண்­டு­கொள்ளும் வகையில் அதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இப் பணியை மேலும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட வகையில் முன்­னெ­டுப்­ப­தற்குத் தேவை­யான தொண்­டர்­களை நிய­மிக்­கவும் ஓட்­ட­மா­வடி, ஏறாவூர் மற்றும் காத்­தான்­குடி பள்­ளி­வாசல் சம்­மே­ள­னங்கள் இணைந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன. இதற்­கான நிதி சேக­ரிப்பு வேலை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இத­னி­டையே, நாட்­டி­லுள்ள ஏனைய பகு­தி­க­ளிலும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்குப் பொருத்­த­மான இடங்­களை ஏற்­பாடு செய்­யு­மாறு அர­சாங்­கத்­திடம் வேண்­டு­கோள்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஏனைய மாவட்­டங்­க­ளிலும்
அனு­மதி வழங்க கோரிக்கை
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில் “கொவிட்-19 தாக்­கத்­தினால் பாதிக்­கப்­பட்டு மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை நிர்­ண­யிக்­கப்­பட்ட சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய அடக்கம் செய்­வ­தற்கு வழி­வ­குத்­த­மை­யிட்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஓட்­ட­மா­வடி பிர­தேச மக்­க­ளுக்கு எங்கள் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம். இலங்கை இரா­ணுவம், பொலிஸ், சுகா­தார அதி­கா­ரிகள், மட்­டக்­க­ளப்பு மாவட்ட அரச அதி­கா­ரிகள் உட்­பட இதற்கு பங்­க­ளிப்புச் செய்த அனை­வரும் எமது நன்­றிக்­கு­ரி­ய­வர்கள். சம்­பந்­தப்­பட்ட பகு­தி­க­ளி­லுள்ள மக்­களின் உணர்­வு­களை மதித்து, கொவிட் -19 தாக்­கத்­தினால் மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் செய்ய பொருத்­த­மான இன்னும் பல இடங்­களும் உரிய அதி­கா­ரி­களால் அடை­யாளம் காணப்­பட வேண்டும் என்­பதை எதிர்­பார்க்­கின்றோம். இது கொவிட்-19 தாக்­கத்­தினால் இறந்து அடக்கம் செய்ய விரும்பும் பிற மதங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான நிர்­ண­யிக்­கப்­பட்ட இடங்­களைப் பெற உத­வி­யாக இருக்கும்” என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில், கொவிட் 19 இனால் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­த­மைக்­காக அர­சாங்­கத்தை பாராட்­டு­கின்ற அதே­வேளை, கொவிட் 19 இனால் மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கென ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் ஓர் அடக்­கஸ்­த­லத்தை ஏற்­பாடு செய்­யு­மாறு கோரிக்கை விடுக்­கிறோம். சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வழி­காட்­டல்­களை முஸ்லிம் சமூகம் பின்­பற்றி ஒழுகும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­கிறோம்” எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப் பின்­ன­ணியில் தற்­போது அம்­பாறை மாவட்­டத்தின் இறக்­காமம் பிர­தே­சத்­திலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள கிண்­ணியா, மகமார் கிரா­மத்­திலும் கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான காணிகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதே­போன்று காலி மாவட்­டத்­திலும் 4 இடங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­துடன் தமது சிபா­ரி­சு­களை சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ருக்கும் அனுப்பி வைத்­துள்­ளனர். ஏலவே கொழும்பு குப்­பி­யா­வத்தை முஸ்லிம் மைய­வா­டியின் உரிய ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு அங்கும் கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்­கலாம் என பேரா­தனை பல்­க­லைக்­க­ழக நிபு­ணர்­களால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இவ்­வி­டத்தில் அடக்கம் செய்­வ­தற்­கான அனு­ம­தியை சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் இது­வரை வழங்­க­வில்லை.

இறு­தி­யாக வெளி­யி­டப்­பட்ட சுற்று நிரு­பத்­தின்­படி, ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­கான இடங்­களை மாவட்ட செய­லாளர் தலை­மை­யி­லான குழு­வி­னரால் அடை­யா­ளப்­ப­டுத்த முடியும் என்றும் அவ்­வி­டத்­திற்­கான அனு­ம­தியை சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து பெற்ற பின்னர் அங்கு அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய எதிர்­வரும் நாட்­களில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­கான நிலம் ஒதுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதி­க­மானோர் வர வேண்டாம்
இத­னி­டையே ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு ஜனா­ஸா­வுடன் அதி­க­மான உற­வி­னர்கள் வருகை தரு­வ­தா­னது ஜனாஸா அடக்க பணி­களை முன்­னெ­டுப்­போ­ருக்கு அசெ­ள­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது அங்கு அடக்கம் செய்யும் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கும் பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கும் சிர­மங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் வெளி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அதி­க­மானோர் ஓட்­ட­மா­வ­டிக்கு வரு­வதால் அங்கு கொவிட் தொற்று பர­வு­வ­தற்­கான அபாயம் உள்­ள­தா­கவும் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் தெரி­விக்­கின்­றனர். எனவே ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய வரை­ய­றுக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யானோர் மாத்­திரம் வரு­வது போது­மா­னது என்றும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இரவு பகல் பாராது தொடரும் சேவை
இலங்­கையின் நாலா பாகங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வடி சூடு­பத்­தி­ன­சேனை (மஜ்மா நகர்) நோக்கி நல்­ல­டக்­கத்­துக்­காக கொண்டு வரப்­படும் ஜனா­சாக்­களை சுகா­தார வழி­மு­றை­யினைப் பின்­பற்றி நல்­ல­டக்கம் செய்ய வைக்கும் பணி­யினை இரவு பகல் நள்­ளி­ரவு என்று கூட பாராமல் களத்தில் நின்று சுகா­தா­ரத்­து­றை­யினர், ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை­யினர் பணி­யாற்­று­கின்­றனர்.

இதில் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை ஊழி­யர்கள் தங்­க­ளது உயிர்­களைத் துச்­ச­மென மதித்து சமூ­கத்தின் நலன் கரு­தியும் தங்­க­ளது சேவை மனப்­பான்மையுடன் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வதில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவர்­க­ளுடன் ஓட்­ட­மா­வடி சுகா­தார வைத்­திய அதி­காரி, அலு­வ­லக ஊழி­யர்கள், பிர­தேச சபையின் செய­லாளர், நிரு­வாக உத்­தி­யோ­கத்தர், சபையின் தவி­சாளர் மற்றும் சபை உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது பங்­க­ளிப்­பு­களைச் செய்து வரு­கின்­றனர். குறிப்­பாக ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை ஊழி­யர்­க­ளுடன் ஓட்­ட­மா­வடி சுகா­தார வைத்­திய அதி­காரி, மேற்­பார்வைப் பொதுச் சுகா­தாரப் பரி­சோ­தகர், பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள், கல்­குடா ஜனாஸா நலன்­பு­ரிச்­சங்கப் பிர­தி­நி­திகள், ஓட்­ட­மா­வடி பள்­ளி­வாயல் பேஷ் இமாம், இரா­ணு­வத்­தினர், ஓட்­ட­மா­வடி வர்த்­தக சங்க தலைவர் ஆகியோர் குறித்த இடத்தில் நின்று தங்­க­ளது சேவை­களைச் செய்து வரு­கின்­றனர்.

இவர்­க­ளுடன் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லக அதி­கா­ரிகள், திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஆகியோர் கொரோ­னா­வினால் மர­ணிக்கும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்து தங்­க­ளது சேவை­களைச் செய்து வரு­கின்­றனர்.

இவர்­க­ளுக்கு இறைவன் தேகா­ரோக்­கி­யத்தை வழங்­கு­வ­துடன், தொற்று நோய்­க­ளி­லி­ருந்து பாது­காப்பு வழங்க வேண்­டு­மென்று இச்­சந்­தர்ப்­பத்தில் நாம் அனை­வரும் பிரார்த்­திக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.