அரசியல்வாதியாகவன்றி சிவில் செயற்பாட்டாளராகவே போராடினேன்

- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி­சாஹிர் மௌ­லானா

0 786

2020 மார்ச் 30 ஆம் திகதி முதல் 2021 பெப்­ர­வரி மாதம் 25 ஆம் திகதி வரை, 333 நீண்ட துய­ர­மான நாட்கள். அத்­தோடு 333 உறக்கம் இழந்த இர­வு­க­ளாக நாங்கள் கவ­லையில் மூழ்­கி­ய­வர்­க­ளாக அல்­லல்­பட்டு அழுதோம். மன்­றா­டினோம்.

எங்கள் 333 க்கும் மேற்­பட்ட அப்­பாவி சகோ­தர, சகோ­த­ரி­களின் ஜனா­ஸாக்கள் வலுக்­கட்­டாய எரிப்­புக்கு ஆளா­கின. நீண்ட இழு­ப­றி­க­ளுக்கும், பாரிய இழப்­பு­க­ளுக்கும் முகம் கொடுத்து கால­தா­ம­த­மாக, நாம் இழந்­தி­ருந்த ‘இறந்­த­வர்­களை அடக்­கின்ற உரிமை’ மீளப்­பெ­று­கின்ற அறிக்கை இப்­போது கிடைத்­தி­ருக்­கின்­றது.

இந்த கடி­ன­மான காலங்­களில் எங்­க­ளுடன் தோளோடு தோள் சேர்த்து செயற்­பட்ட அனை­வ­ருக்கும் எமது மன­மார்ந்த நன்­றி­களை காணிக்­கை­யாக்­குவோம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மெள­லானா விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
கொவிட் 19 தொற்­றினால் வபாத்­தான முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரியும் நெருப்­பி­லி­ருந்தும் காப்­பாற்­று­வ­தற்காக ஆரம்பம் முதலே களத்தில் இறங்­கி­ப் போராடியவர் என்ற வகையில் அவ­ரு­ட­னான நேர்­கா­ண­லினை முழு­மை­யாக இங்கு தரு­கிறோம்.

நேர்காணல்: ஏ.ஆர்.ஏ. பரீல்

Q:- கொவிட் தொற்­றினால் மர­ணிக்கும் ஜனா­ஸாக்­களின் அடக்க உரி­மைக்­காக ஆரம்ப முதல் இறு­தி­வரை போரா­டி­யவர் என்ற வகையில் அடக்கம் செய்ய அனு­ம­திக்கும் தீர்­மானம் வந்­த­போது உங்கள் மனோ­நிலை எவ்­வா­றி­ருந்­தது?

அல்­ஹம்­துலில்லாஹ். ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக எரி­யூட்­டப்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் எங்கள் உரி­மை­க­ளுக்­காக நான் இறு­தி­வரை போரா­டுவேன் என மக்­க­ளிடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தேன். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திக­தி­யி­லி­ருந்து 2021.02.25 ஆம் திக­தி­வரை அதா­வது கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை தகனம் செய்­யலாம் அல்­லது அடக்கம் செய்­யலாம் என்று விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டும்­வரை நாங்கள் பட்ட வேத­னைகள், சிந்­திய கண்ணீர் அந்த அல்­லாஹ்­வுக்கே தெரியும். ஓரிரு நாட்கள் அல்ல 333 நாட்கள் நாங்கள் வேத­னையில் துவண்டு போயி­ருந்தோம். இன்று எமக்கு சற்று ஆறு­த­லாக இருக்­கின்­றது. ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்கு இறு­தி­வரை போரா­டி­யவன் என்ற வகையில் இப்­போது எனக்கு நிம்­ம­தி­யாக இருக்­கி­றது. மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது.

Q:- ஜனாஸா நல்­ல­டக்க உரி­மையை மீளப்­பெ­று­வ­தற்­காக நீங்கள் என்ன வகை­யான போராட்­டங்­களை மேற்­கொண்­டீர்கள்?

எமது நாட்டில் முத­லா­வது கொவிட் -19 ஜனாஸா 2020 மார்ச் மாதம் 30 ஆம் திகதி தகனம் செய்­யப்­பட்­டது. நீர்­கொ­ழும்பைச் சேர்ந்­த­வரின் ஜனா­ஸாவே இவ்­வாறு தகனம் செய்­யப்­பட்­டது.

கொவிட் -19 தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்­யலாம் அல்­லது அடக்கம் செய்­யலாம் என சுகா­தார அமைச்சு மற்றும் சுகா­தார அமைச்சின் திணைக்­கள இணையத்தளம் என்­பன தெரி­வித்­தி­ருந்த நிலையில் நீர்­கொ­ழும்பு ஜனாஸா பலாத்­கா­ர­மாக குடும்ப அங்­கத்­த­வர்­களின் அனு­ம­தி­யின்றி எரிக்­கப்­பட்­டது. நீர்­கொ­ழும்பு ஜமா அத்­தார்கள் அனை­வரும் அங்கு வந்து சுகா­தார சேவை அதி­கா­ரி­க­ளி­டமும் பொலி­ஸா­ரி­டமும் கெஞ்­சிக்­கேட்­ட­போதும் ஜனாஸா அடக்­கத்­துக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் நான் உட­ன­டி­யாக அந்த இரவே சுகா­தார அமைச்­சர், சுகா­தார பணிப்­பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உட்­பட அப்­போது அலி­சப்ரி ஒரு அமைச்­ச­ராக இல்­லா­தி­ருந்­தாலும் அவர் ஜனா­தி­ப­தி­யுடன் மிகவும் நெருக்­க­மாக உள்­ளவர் என்ற வகையில் அவ­ரி­டமும் எமது முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் ஜனாஸா தகனம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரினேன். அலி­சப்ரி காலையில் பார்ப்போம் என்றார். இந்­நி­லையில் ஜனாஸா இர­வோ­டி­ர­வாக 11 மணிக்கு எரிக்­கப்­பட்­டு­விட்­டது. இந்தச் சந்­தர்ப்­பத்­திலும் பழைய வர்த்­த­மானியில், அதா­வது கொவிட் 19 தொற்று ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யலாம் என்­றேயிருந்­தது.

இத­னை­ய­டுத்தே 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி 2170/8 ஆம் இலக்க அதி விசேட வர்த்­த­மா­னி­யொன்றும் வெளி­யி­டப்­பட்­டது. கட்­டாய தகனம் மாத்­திரம் என்­ப­தனை உள்­ள­டக்­கியே இந்த வர்த்­த­மானி அமைந்­தி­ருந்­தது.

இதற்கு முன்பு மரு­தா­னையில் மர­ணித்த மேலு­மொரு சகோ­த­ரரின் ஜனாஸா 2020 ஏப்ரல் 2 ஆம் திகதி பலாத்­கார தகனம் செய்­யப்­பட்­டது. இந்தச் சந்­தர்ப்­பத்­திலும் நான் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெள­ஸியின் இல்­லத்­தி­லி­ருந்து பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் ஜனாஸா விவ­காரம் தொடர்பில் கதைத்தேன். பெள­ஸியின் வீட்­டிற்கு ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா, முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகி­யோரும் வந்­தி­ருந்­தார்கள்.

அன்று தான் கொவிட் 19 தொற்று நோய் தடுப்பு சம்­பந்­தப்­பட்ட செய­ல­ணியின் முதற்­கூட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. நாங்­களும் செய­ல­ணியில் கலந்து கொள்வோம், பேசுவோம் என்று தீர்­மா­னித்தோம். எல்லா அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் வந்­தி­ருந்­தார்கள். ரணில் விக்­கி­ர­ம­சிங்க , சஜித்­ பி­ரே­ம­தாச, மனோ­ க­ணேசன், அனுர குமார திஸா­நா­யக்க, விமல் வீர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரும் சமூ­க­ம­ளித்­தி­ருந்­தார்கள்.அலரி மாளிகை மண்­ட­பத்தில் செய­ல­ணிக்­கூட்டம் நடந்­தது.

நாங்கள் ஜனாஸா விவ­கா­ரத்தை எடுத்து விளக்­கினோம். ஜனாஸா தகனம் செய்­யப்­ப­டு­வதை அனு­ம­திக்க இய­லாது. உலக சுகா­தார ஸ்தாப­னமும் உடல்­களை அடக்கம் செய்­யலாம் எனக்­கூ­றி­யுள்­ளதை எடுத்து விளக்­கினோம். உடல் தகனம் செய்­யப்­ப­டு­வது விஞ்­ஞான ரீதி­யா­னது. உட­ன­டி­யாக இவ்­வி­வ­கா­ரத்­திற்கு தீர்வு கூற­மு­டி­யாது என்று செய­ல­ணிக்­கூட்­டத்தில் எம்­மிடம் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்பில் ஆராய்ந்து தீர்­மா­னிக்க நிபு­ணத்­துவ குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. தொற்­றுநோய், நுண்­ணு­யி­ரியல் நிபு­ணர்கள் குழுவில் அடங்­கி­யி­ருந்­தார்கள். இவ்­வாறு பல போராட்­டங்கள் நடத்திக் கொண்­டி­ருந்த போதே 2020 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி கட்­டாய தக­னத்தை மாத்­திரம் உறுதி செய்து வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­லையில் கட்­டாய தக­னத்­திற்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் நான் வழக்குத்­தாக்கல் செய்தேன். 2020.05.15. ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கு ஜூலை 13 ஆம்­தி­கதி, செப்­டெம்பர் 9ஆம் திகதி, நவம்பர் 26 ஆம் திகதி, நவம்பர் 30ஆம் திகதி என ஒத்தி வைக்­க­ப்பட்டு இறுதியில் வழக்­கினை விசா­ரிக்க முடி­யாது என டிசம்பர் 1 ஆம் திகதி நீதி­மன்றம் தெரி­வித்­தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வழக்­குக்கு உதவி வழங்­கி­யது. எனது சட்­டத்­த­ர­ணி­யாக நிசாம் காரி­யப்பர் ஆஜ­ரானார். கிறிஸ்­த­வர்­களும் அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்­தார்கள். மூன்று நீதி­ப­தி­களில் இருவர் இவ்­வ­ழக்­கினை விசா­ரிக்க முடி­யா­தெ­னவும் ஒருவர் விசா­ரிக்­கலாம் எனவும் தங்­க­ளது தீர்­மா­னத்தை அறி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து இந்த கட்­டாய, பலாத்­கார எரி­யூட்டல் உட­ன­டி­யாக நிறுத்­த­ப்ப­ட­வேண்டும் என்ற கோஷத்தை உரு­வாக்கி வெள்­ளைத்­துணி அமை­திப்­போ­ராட்­ட­மொன்­றினை ஆரம்­பித்தேன். இந்தப் போராட்­டத்­துக்கு ஏனைய சமூக சகோ­த­ரர்கள், மதப்­பெ­ரி­யார்கள், புத்­தி­ஜீ­விகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், பேரா­சி­ரி­யர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இவ்­வாறு பல சமூக மட்­டத்தில் உள்­ள­வர்­களும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஆத­ரவு வழங்­கி­னார்கள். கனத்­தயில் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் கபன்­துணி போராட்­ட­மா­கவும் மாறி­யது.

Q:- ஜனாஸா அடக்க அனு­ம­தியில் சர்­வ­தேச அழுத்­தங்கள் எவ்­வ­ளவு தூரம் பங்­க­ளித்­துள்­ளன?

உலகில் 194 க்கும் அதி­க­மான நாடு­கள் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களின் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கும், தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கும் அனு­மதி வழங்­கி­யுள்­ளன. இலங்­கையில் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் உடல்கள் அடக்கம் அல்­லது தகனம் செய்­யப்­ப­டலாம் என உலக சுகா­தார ஸ்தாபனம், ஐக்­கிய நாடுகள், மனித உரி­மைகள் அமைப்பு, உலக மன்­னிப்பு சபை என்­பன தெரி­வித்­துள்­ளன.

பி.பி.சி. மற்றும் அல்­ஜ­ஸீரா செய்திச் சேவை எனது டுவிட்டர் தக­வல்­களை மேற்­கோள்­காட்டி அடக்கம் செய்­யப்­ப­டு­வதை வலி­யு­றுத்­தி­யுள்­ளன. இந்­தி­யாவின் ‘இந்து’ பத்­தி­ரி­கையும் இலங்­கையில் அடக்­கம்­செய்­யப்­ப­டு­வதை ஆத­ரித்து செய்தி வெளி­யிட்­டது.
சர்­வ­தேச ரீதியில் நிவ்­யோர்க்கில், வொஷிங்­டனில், கன­டாவில், இந்­தி­யாவில், சுவிட்­சர்­லாந்தில், இத்­தா­லியில், பிரித்­தா­னி­யாவில், ஜேர்­ம­னியில், மத்­திய கிழக்கு நாடு­களில், மலே­சி­யாவில் என பல நாடு­களில் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்­கையில் நடக்கும் இந்த அடிப்­படை மனித உரிமை மீறல் நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கோஷம் உரத்துக் கூறப்­பட்டு எமக்கு வலு­ச்சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பல நாட்டுத் தலை­வர்கள் அவர்­க­ளது தூத­ர­கங்கள் ஊடாக இலங்கை அர­சுக்கு கட்­டாய எரி­யூட்­டலை நிறுத்­துங்கள் என்று கடி­தங்கள் மூல­மாக அறி­வித்­துள்­ளார்கள். ஐக்­கிய இரா­ச்சிய வெஸ்ட்­மி­னிஸ்டர் பாரா­ளு­மன்­றத்­திலும் இவ்­வி­வ­கா­ரம் குறித்து குரல் எழுப்­பப்­பட்­டுள்­ளது. கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில், அவுஸ்­தி­ரே­லி­யாவில் மற்றும் இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் கூட இலங்கையில் கட்­டாய ஜனாஸா எரிப்பு நிறுத்­தப்­பட வேண்­டு­மென குரல் எழுப்­பப்­பட்­டுள்­ளது.

Q:- ஜனாஸா எரிப்­புக்கு எதி­ராக முஸ்­லிம்கள் மாத்­திரம் போரா­ட­வில்லை. எமக்­காக தமிழ், சிங்­கள, கிறிஸ்­தவ மக்­களும் குரல் கொடுத்­துள்­ளார்கள் இது பற்றி என்ன கூற­வி­ரும்­பு­கி­றீர்கள்?

ஆம். பல இன மக்­களும் எமது போராட்­டங்­களை ஆத­ரித்­துள்­ளார்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் இணைந்­தி­ருந்­தார்கள். எமது நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­க்கட்­சித்­ த­லைவர் உட்­பட பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல கட்­சி­களைச் சேர்ந்­த­வர்கள் எமக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளார்கள். பாரா­ளு­மன்­றத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கேள்­விகளை எழுப்­பி­யுள்­ளார்கள்.

Q:- கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யலாம் என தீர்­மா­னிப்­ப­தற்கு வேறு ஏதும் கார­ணங்கள் துணை­யாக இருந்­த­னவா?

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நாம் கலந்து கொண்ட கொவிட் 19 செய­லணி கூட்­டத்­தின்­போது 2020 ஏப்ரல் 2ஆம் திகதி தொழி­நுட்ப குழு அனு­ம­தித்தால் ஜனா­ஸாக்­களை அடக்­கலாம் என்று என்­னிடம் கூறி­னார்.

2020 டிசம்பர் 24 ஆம் திகதி சுகா­தார அமைச்­சினால் மீண்டும் ஒரு விசேட நிபு­ணத்­துவக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. அக் குழு விஞ்­ஞானபூர்­வ­மாக அடக்கம் செய்­வதால் வைரஸ் பர­வாது என நிரூ­பித்தால் அடக்­கத்தை அனு­ம­திப்போம் என்றே ஜனா­தி­பதி, பிர­தமர், சுகா­தார அமைச்சர் என்போர் கூறி­வந்­தார்கள். கடந்த 2020 மார்ச் மாதத்­தி­லி­ருந்து டிசம்பர் மாதம்­வரை இந்­நி­லை­மையே இருந்­தது. நிலத்­தடி நீரினால் கொவிட்19 வைரஸ் பர­வாது என்று உலக விஞ்­ஞா­னி­களும், இலங்­கை­ து­றைசார் நிபு­ணர்­களும் கூறி­னார்கள். புவி­யியல் ரீதியில் பாதிப்­புகள் ஏற்­ப­டாது என்று கூறி­னார்கள். உலக சுகா­தார ஸ்தாப­னமும் இதையே கூறி வந்­தது. இந்­நி­லை­மை­யிலே கடந்த ஜன­வரி மற்றும் பெப்­ர­வரி மாதங்­க­ளிலும் கட்­டாய தக­னத்தை தொடர்ந்­தார்கள். நிலக்கீழ் நீரினால் கொவிட் 19 தொற்று பரவும் என உத்­தி­யோக பூர்­வ­மாக பொய்­யான தக­வல்­களை சுகா­தார அமைச்சர் பாரா­ளு­மன்­றத்தில் கூறினார். நாம் இதனை விமர்­சித்தோம்.

மக்கள் தொடர்ந்தும் அல்­லல்­பட்டு வந்த காலத்தில் தான் பாரா­ளு­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கேட்­ட­கேள்­வி­யொன்­றுக்கு பிர­தமர் பதி­ல­ளிக்­கையில் வெகு­வி­ரைவில் அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­படும் என்றார். அதையும் தாம­தப்­ப­டுத்­தி­னார்கள். அப்­போது கூட சில எம்.பி.க்கள் அடக்கம் செய்ய வேண்டும் என்­பதை கொச்­சைப்­ப­டுத்தி வந்­தார்கள். பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­து­களைக் கூறி காலத்தை இழுத்­தார்கள்.

இந்தச் சூழ்­நி­லை­யிலேயே ஜெனி­வாவில் ஐ.நா. மனித உரிமை பேர­வை அமர்வு ஆரம்­ப­மா­னது. இலங்­கைக்கு மனித உரிமை பேர­வையில் ஆத­ரவு வழங்­க­வுள்ள நாடு­க­ளுக்கும் கூட போர்க் குற்­றங்­க­ளுக்கு பொறுப்புக் கூறும் கடமை இலங்கை அர­சுக்கு உள்­ளது.
இந்­நி­லையில் முற்­போக்கு அடிப்­ப­டையில் சிந்­திக்­கின்ற எல்லா சமூக, அர­சியல் மற்றும் மதத் தலை­வர்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் எமது நாட்­டுக்கு மேலும் அப­கீர்த்தி ஏற்­ப­டு­வதைத் தடுக்கும் வகையில் முழு உலக நாடு­களும் கடைப்­பி­டிக்­கின்ற கொவிட் 19 தொற்றால் இறப்­ப­வர்­களை அடக்­கலாம் என்ற அடிப்­ப­டையில் கட்­டாய தக­னத்தை எதிர்த்­தார்கள். முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­களின் மத அனுஷ்­டா­னங்­களை மதித்து நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டும். விஞ்­ஞான ரீதி­யாக மற்றும் அடிப்­படை உரி­மை­களை மதிப்­பதன் மூலமும் ஏற்­றுக்­கொள்­வதன் மூல­முமே இலங்­கையின் நிலைமை சர்­வ­தே­சத்தில் மேலும் பாதிக்­கப்­ப­ட­மாட்­டாது. இலங்கை சர்­வ­தேச குற்­ற­வியல் மன்­றத்தில் போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறல் மூலம் முகம் கொடுத்­தாக வேண்டும். முன்பு மனித உரி­மை­பே­ரவை இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது. தற்­போ­தைய நிலையில் இஸ்­லா­மிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) செயலாளர் உட்­பட அனை­வரும் கட்­டாய தக­னத்தை மீளப்­பெற்று அடக்கம் செய்ய அனு­மதி வழங்­க­வேண்டும் என்ற கோரிக்­கை­க­ளை­யெல்லாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலைமை இலங்கை அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

Q:- சுகா­தார அமைச்­ச­ரினால் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்ட விசேட நிபு­ணத்­துவ குழுவின் பரிந்­து­ரைகள் என்ன?

இக்­கு­ழுவை சுகா­தார அமைச்சின் செய­லாளர் டாக்டர் முன­சிங்க நிய­மித்தார். 11 பேர் கொண்ட இக்­கு­ழுவின் தலை­வ­ராக பேரா­சி­ரியர் ஜெனிபர் பெரேரா நிய­மிக்­கப்­பட்டார். இக்­குழு 15 பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளது.
கொவிட் 19 தொற்­றினால் இறப்­ப­வர்­களின் உடல் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அடக்கம் செய்­யப்­பட வேண்டும்.

உடல் இரட்டை அடுக்குப் பையினுள் இடப்­ப­ட­வேண்டும். இந்த பை 300 um கனதி கொண்­ட­தாக இருக்­க­வேண்டும். இரத்தக் கசிவு ஏற்­ப­டா­தி­ருக்க வேண்டும். நீர் வெளி­யி­லி­ருந்து உறிஞ்­சப்­படக் கூடா­த­தாக இருக்­க­வேண்டும்.

அடக்கம் செய்­யப்­ப­டும்­போதே ஜனா­ஸாவைப் பார்ப்­ப­தற்­காக குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­படும். ஒரு மீற்றர் தூரத்­தி­லி­ருந்தே பார்­வை­யி­ட­மு­டியும்.
ஜனா­ஸாவை தொடக்­கூ­டாது. ஜனா­ஸாவைப் பார்க்க குடும்­பத்தில் நால்­வரே அனு­ம­திக்­கப்­ப­டுவர். இருவர் வீதம் நால்வர் பார்­வை­யி­டலாம். அதிக பட்சம் 5 நிமிடம் வழங்­கப்படும்.

கெள­ர­வ­மான முறையில் அடக்கம் செய்­யப்­பட வேண்டும். உற­வி­னர்­க­ளிடம் ஜனாஸா கைய­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. சுகா­தார பணி­யா­ளர்கள் மாத்­தி­ரமே ஜனா­ஸாவை கையாள்­வார்கள்.

பாது­காப்பு கவசம் அணிந்­தி­ருப்­ப­துடன் முகக்­க­வ­சமும் அணிந்­தி­ருக்க வேண்டும். ஜனா­ஸா­அ­டக்­கத்­துக்கு கொண்டு செல்­லும்­போது வேறு தனி­யான வாக­னத்தில் குடும்­பத்தை சேர்ந்த நால்வர் செல்ல முடியும்.

ஜனாஸா தொழு­கைக்கு 10 நிமிடம் வழங்­கப்­படும். ஒரு மதப்­பி­ர­முகர் மற்றும் குடும்­பத்தைச் சேர்ந்த நால்வர் ஜனாஸா தொழு­கைக்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர். நிலக்கீழ் நீர் 1.5 மீற்றர் ஆழத்தில் இருக்­க­வேண்டும். நிலக்கீழ் நீர் மட்­டத்­திலும் 1.2 மீற்­ற­ருக்கு மேலே ஜனாஸா அடக்கம் செய்­யப்­ப­ட­வேண்டும். வடி­கான்கள் 10 மீற்றர் தூரத்­துக்கு அப்பால் இருக்­க­வேண்டும். இத்­தோடு கிண­றுகள் கணி­ச­மான தூரத்தில் இருக்க வேண்டும்.
ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு மாவட்ட ரீதியில் அரசாங்க அதிபர், மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்போர் இடங்களை அடையாளம் காணவுள்ளனர். அவ்வாறான இடங்களில் பேராசிரியர் ஜெனிபர் பேரேராவின் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும். இது தொடர்பான அறிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும்.

ஜனா­ஸாக்­களை அடக்க முடி­யு­மென்ற வழி­மு­றைகள் இருந்­தாலும் அநீ­தி­யான முறையில் மறுத்து கட்­டாய தக­னத்தை அமுல்­ப­டுத்­தி­ய­வர்கள் மீண்டும் ஜனா­ஸாக்­களை அடக்­கலாம் என்­பதை அதற்­கான அனு­ம­தியை வர்த்­த­மானி மூலம் இப்­போது அறி­வித்­தி­ருக்­கி­றார்கள். இச்­சூழ்­நி­லையில் இதனை அமுல்­ப­டுத்தும் நேரத்தில் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளை சமாளிக்கும் நோக்கிலேயே வர்த்தமானியை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமாவதாக நினைக்கிறேன்.

ஜனாஸா அடக்கத்துக்கான வர்த்தமானியை முதலில் வெளியிடுங்கள். அதன்பிறகு 2 க்கு ஆதரவாக வாக்களிக்கிறோம் எனக் கூறியிருக்க வேண்டும். கேவலம் ஜனாஸா எரிப்பை ஆக்ரோஷமாக விமர்சித்து கதறிக்கதறி நடித்து காலை வாரிவிட்டார்கள்.

Q:- நீங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகிக் கொண்­ட­மைக்­கான காரணம் என்ன?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மையே நான் அக்­கட்­சி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குக் காரணம். முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு குரல் கொடுத்து வெற்றி பெற்­ற­வர்கள் அவர்கள். ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டு­வதை எதிர்த்­த­வர்கள் அவர்கள். அரசு 2/3 பெரும்­பான்மை பெற்­றுக்­கொள்ள அனு­ம­திக்­க­மாட்டோம் என தேர்தல் மேடை­களில் கூறி­னார்கள்.

ஆனால் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு விரலில் இட்­ட மை காய்ந்து போவ­தற்கு முன்பே பல்­டி­ய­டித்து விட்­டார்கள்.

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து உறு­தி­மொழி பெற்று, ஜனாஸா அடக்­கத்­துக்­கான வர்த்­த­மா­னியை முதலில் வெளி­யி­டுங்கள். அதன்­பி­றகு 20 க்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கிறோம் எனக் கூறி­யி­ருக்­க­வேண்டும். கேவலம் ஜனாஸா எரிப்பை ஆக்­ரோ­ஷ­மாக விமர்­சித்து கதறிக் கதறி நடித்து காலை வாரி­விட்­டார்கள். வர்த்­த­மானி மாற்­றப்­பட்டால் மட்டுமே வாக்­க­ளிப்போம் என்­று­கூறி மாற்­றங்கள் செய்­ததன் பின்பு வாக்­க­ளித்­தி­ருந்தால் மக்கள் அவர்­களைப் போற்­றி­யி­ருப்­பார்கள். சமு­தாயம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும்.

ஆனால் தங்­க­ளது சுய­தேவை, பதவி மோகம், அற்ப சுய இலா­பத்­திற்­காக எந்­த­வித இதய சுத்­தி­யான சமு­தாய நலன் கரு­தாமல் வாக்­க­ளித்­துள்­ளார்கள். இவர்கள் நான் அங்கம் வகித்த கட்­சியில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­யையும் கட்­சியின் தலை­வரோ, கட்­சியின் உயர்பீடமோ எடுக்­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே அக்­கட்­சி­யி­லி­ருந்து நான்­ வி­ல­கி­யுள்ளேன்.

Q:- 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் 20க்கு ஆதரவளித்ததால் தான் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்ததாக கூறுகிறார்களே?

20 ஆவது திருத்தம் கடந்த அக்­டோபர் மாதம் 22 ஆம் திகதி வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்­டது. அவர்கள் 20ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­காது இருந்­தி­ருந்தால் நிலைமை வேறாக மாறி­யி­ருக்கும். நீதி­மன்றம் மூலம் சுயா­தீ­ன­மாக நாட்டில் நீதியைப் பெறக்­கூ­டி­ய­தாக இருந்­தி­ருக்கும். அந்தவகையில் ஜனாஸா எரி­யூட்­ட­லுக்கு பொறுப்புக் கூற வேண்­டி­வர்கள் இவர்­களே. இவர்­க­ளால்தான் நாட்டில் ஜனா­ஸாக்களை எரி­யூட்­டுவதற்கான பலம்,வேகம் கூடி­யது. இவர்­களால் ஒரு­போதும் தங்­களது செயலை நியா­யப்­ப­டுத்­த முடி­யாது.

அடக்குமுறை­யூ­டாக, பலாத்­கா­ர­மாக எமது சமூகம் தக­னத்­துக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை இவர்­க­ளாலே ஏற்­பட்­டது.

Q:- சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் இவ்வாறு அடக்கு முறைக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார்கள்?

நாம் இலங்கை முஸ்லிம்கள். நாட்டுப் பற்றுள்ளவர்கள். இலங்கையின் இறைமைக்கு சவால் வந்தபோதெல்லாம் நாட்டிற்கு விசுவாசமானவர்களாக நாம் இருந்திருக்கிறோம். பிரிவினைவாதத்தை எதிர்த்திருக்கிறோம். நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் நிலை நிறுத்த, நாடு சுபீட்சமடைய சகல இன மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களின் இலட்சியமாகும்.

எந்த அரசாங்கம் மாறி மாறி பதவிக்கு வந்தாலும் இலங்கையின் கீர்த்தியை இறைமையை பாதுகாத்து கடமையாற்றுவது அரசின் தலையாய கடமையும் கொள்கையுமாகும்.

இடையில் அரசியல் காரணங்களுக்காக பெரும்பான்மை சமூகத்தின் அனுமதியுடன் ஆதரவுடன் மட்டுமே அரசியல் பலத்தை பாதுகாக்க முடியும். தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதற்காக இவ்வாறான அடக்கு முறையை சிறுபான்மையினர் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டு அவர்களது அடிப்படை உரிமைகளையெல்லாம் வழங்காமல் தொடர்ந்தும் செயற்படுவது எமது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும். இதுவே இன்றைய நிலை.

Q:- அண்­மையில் நீங்கள் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறதே?

இல்லை, இது தவ­றான பிர­சாரம், நான் எந்­தக்­கட்­சி­யிலும் இணைந்­து கொள்ள வில்லை, ஜனாஸா எரிப்­­பு­க்கு எதி­ரான முன்­னெ­டுப்­புக்­களை எந்தக் கட்­சியினதும் சார்­பாக இல்­லாமல் எங்­க­ளது அடிப்­படை உரிமை மீறல் வெற்­றி­பெற வேண்டும் என்­ப­தற்­காக சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்களுள் ஒரு­வ­ராக நின்றே இவற்றை முன்னெடுத்தேன். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.