தலைநகரில் களைகட்டிய உலமாக்களின் விழா

0 214

ஏ.ஆர்.ஏ. பரீல்

முஸ்லிம் சன்­மார்க்க அறி­ஞர்­களின் அமைப்­பான அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உல­மா­ சபை தனது நூற்­றாண்டு சேவையின் நிறை­வினை கொழும்பு மாந­கரில் விம­ரி­சை­யாகக் கொண்­டாடியது. இதுவொரு வர­லாற்று நிகழ்­வாகும்.

பண்­டாரநாயக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நாட்டின் அதிபர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தம அதி­தி­யா­கவும் பிர­தமர் திணேஷ் குண­வர்­தன விசேட அதி­தி­யா­கவும் பங்­கேற்ற இவ் வைபவம் தேசிய ரீதி­யாக கவ­­ன­யீர்ப்பைப் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.

நாடெங்­கு­மி­ருந்து வந்­த ஆயி­ரக்­க­ணக்­கான உல­மாக்கள் மண்­ட­பத்தில் குழு­மி­யிருந்­தனர். வெளி­நாட்டு தூது­வர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சட்­டத்­த­ர­ணிகள், முன்னாள் அமைச்­சர்கள், நீதி­ப­திகள், சமூக ஆர்­வ­லர்கள், புத்­தி­ஜீ­விகள் என மண்­டபம் நிறைந்­தி­ருந்­தது.

பெளத்­த­ மத தேரர்கள், கிறிஸ்­தவ மத போத­கர்கள், இந்து குரு­மார்கள் என சம­யங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அவர்கள் உலமா சபையின் நூற்­றாண்டு விழா­வினை கெள­ர­வப்­ப­டுத்தியிரு­ந்­தனர்.

இதே வேளை தென்­னா­பி­ரிக்க ஜம்­மிய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் மெள­லானா இப்­றாஹிம் இஸ்­மாயில் பஹம் சிறப்பு அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்­தார்.
நிகழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன, பாது­காப்பு செய­லாளர் ஓய்வு நிலை ஜெனரல் கமல் குண­ரத்ன, முப்­ப­டை­களின் முன்னாள் பிர­தானி சவேந்­திர சில்வா, முன்­னாள்­ அ­மைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.

ஜம்­இய்­யாவின் நூற்­றாண்டு நிகழ்வை முன்­னிட்டு விசேட முத்­திரை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தி, பிர­தமர் மற்றும் சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன மற்றும் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கெள­ர­விக்­கப்­பட்­டனர்.

மேலும் இலங்­கையில் பல ஆலிம்­களை உரு­வாக்­கி­யவர் என்ற அடிப்­ப­டையில் ஷெய்குர் ரஹ்­மானி ஏ.ஜே.எம்.ஜிப்ரி ஹழ்ரத், தொடர்ச்­சி­யாக பல்­வேறு வழி­களில் ஜம் இய்­யத்துல் உலமா சபைக்கும், சமூ­கத்­துக்கும் பங்­க­ளிப்புச் செய்­கின்ற பரோ­ப­கா­ரிகள் என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் ஜம் இய்­யா­வுக்கு பெரும் நன்­கொ­டைகள் வழங்­கி­வரும் இல்யாஸ் அப்துல் கரீம், ஜம் இய்­யாவின் அலு­வ­லகம் இயங்­கி­வரும் தற்­போ­தைய கட்­டி­டத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பாரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யவர் என்ற அடிப்­ப­டையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கெள­ர­விக்­கப்­பட்­டனர்.

அத்­தோடு ஜம் இய்­யாவின் அறி­முகம், வர­லாறு, பதவி தாங்­கு­னர்கள் அதன் உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமய, சமூகப் பங்­க­ளிப்­புகள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்கி தொகுக்­கப்­பட்ட ‘ஸவ்த்துல் உலமா’ எனும் நூற்­றாண்டு சிறப்பு மலரை ஜம் இய்­யாவின் உப தலை­வர்­களுள் ஒரு­வ­ரான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ரிழா வெளி­யிட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜம் இய்­யாவின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும், அதன் உல­மாக்கள் விவ­கார செய­லா­ள­ரு­மான அஷ்ஷெய்க் எஸ்.எல்.நெள­பர்­ அ­கில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் நூற்­றாண்டு நிகழ்வில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை உள்­ள­டக்­கிய பிர­க­ட­னத்தை நிகழ்வில் முன்­வைத்தார்.

 

இஸ்­லா­மிய வரை­ய­றைக்­குட்­பட்ட வகையில் கலை நிகழ்ச்­சி­களும் நிகழ்வை அலங்­க­ரித்­தன.திஹா­ரிய தன்வீர் அக­ட­மியின் பட்­ட­தா­ரி­யான அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.அய்யாஷ் சிங்­கள மொழியில் ‘விரிது’ கவி­பா­டினார். கொழும்பு டி.எஸ்.சேன­நா­யக்க மற்றும் மவா­ஹிபுல் உலூம் கல்­லூரி மாண­வர்­களால் கஸீதா பாடப்­பட்­டது.
ஜம் இய்­யாவின் பொரு­ளாளர் அஷ்ஷெய்க் கலா­நிதி ஏ.ஏ.அஸ்வர் நன்­றி­யுரை வழங்­கினார். உப தலை­வர்­களுள் ஒரு­வ­ரான அஷ்ஷெய்க் எச்.உமர்­தீனின் துஆ­வு­டனும், ஸல­வாத்­து­டனும் நூற்­றாண்டு நிகழ்வு நிறை­வெய்­தி­யது.

ஸவ்த்துல் உலமா
நூற்­றாண்டு சிறப்பு மலர்
அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தனது நூற்­றாண்டு விழாவில் வெளி­யிட்ட ஸவ்த்துல் உலமா நூற்­றாண்டு சிறப்­பு­மலர் நாட்டில் முஸ்­லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளின் போது உலமா சபை முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விளக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

அளுத்­கம கல­வரம்
2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ­வா­ரத்தில் ஜனா­தி­பதி, பாது­காப்பு செய­லாளர் ஆகியோர் நாட்டில் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­த­லொன்று நடாத்­தப்­பட இருப்­ப­தாக செய்­திகள் கசியத் தொடங்­கின. இவை ஊர்­ஜிதம் செய்­யப்­ப­டாது இருந்த போதிலும் நிலை­மையை கருத்திற் கொண்டு ஜம் இய்யா உட­ன­டி­யாக பல தரப்­பி­ன­ரு­டனும் கலந்­தா­லோ­சித்து ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செய­லாளர் என்­போ­ருக்கு தகவல் தொடர்பில் அறி­வித்­தது. முஸ்­லிம்கள் அச்­சத்தில் இருப்­ப­தாவும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் கோரி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு 2014.05.07 ஆம் திகதி கடி­த­மொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது. என்­றலும் ஜூன் மாதத்தில் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செய­லாளர் நாட்டில் இல்­லா­த­போது இந்தக் கல­வரம் நடந்­தே­றி­யது.

இத­னை­ய­டுத்து கல­வரம் நடந்த மறு­தினம் ஜூன் 16 ஆம் திகதி உலமா சபை கனே­டிய மற்றும் பாகிஸ்தான் தூது­வர்­களை சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யது. ஜூன் 17 ஆம் திகதி அமெ­ரிக்க தூது­வ­ரு­ட­னான சந்­திப்பும் இடம் பெற்­றது. ஜுன்17 ஆம் திகதி உலமா சபை அளுத்­க­மைக்கு கள­ வி­ஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டது. கல­வ­ரத்­தினால் மர­ணித்­த­வர்­களின் வீடு­க­ளுக்கும் விஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அளுத்­கம பெளத்த மத­கு­ரு­மார்­க­ளு­ட­னான சந்­திப்பும் இடம் பெற்­றது. அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இச்­சந்­திப்பில் கலந்து கொண்டார். ஜம்இய்யா கல­வரம் தொடர்பில் பல கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­தது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஜூன்17 ஆம் திகதி சுமார் ஐந்து மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன. ஜூன்19 ஆம் திகதி ஒரு கோடி 75 இலட்சம் பெறு­ம­தி­யான பொருட்கள் அளுத்­க­ம­வுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டன என ‘ஸவ்த்துல் உலமா’ சிறப்பு மலரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திகன கல­வரம்
திகன கல­வரம் நாட்டின் வர­லாற்றில் கண்டி மாவட்­டத்தின் திக­னயில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பாரிய இன வன்முறையாகும்.
திகன கல­வரம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி உரு­வா­னது. இக்­க­ல­வரம் மார்ச் 08 ஆம் திக­தி­வரை தொடர்ந்­தது.

இக்­க­ல­வ­ரத்தில் 24 பள்­ளி­வா­சல்கள், 445 வீடுகள், கடைகள் மற்றும் 65 வாக­னங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. 28 முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்­குள்­ளா­னார்கள். ஒருவர் பலி­யானார்.

தாக்­குதல் ஆரம்­ப­மான மார்ச் 05 ஆம் திகதி உல­மா­சபை உட­ன­டி­யாக செயலில் இறங்­கி­யது.அன்று இரவே அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து கல­வ­ரத்தை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­மாறு வேண்­டிக்­கொண்­டது.
உலமா சபை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும் சந்­தித்­தது. அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் சந்­தித்து கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­மாறு அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் உலமா சபை­யினால் வழங்­கப்­பட்­டன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க சட்டத்தரணிகளின் உதவியோடு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. கலவரங்களைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே பாரிய விரிசல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மாற்றுமத சகோதரர்கள், பாதுகாப்பு துறையினர், உயர்மட்ட அதிகாரிகள் எனப்பலருக்கும் இஸ்லாம் பற்றிய தெளிவுகளை ஜம் இய்யா வழங்கியது. சகவாழ்வினைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டது.

மேலும் சுனாமி அனர்த்தம்,மூதூர் வெளி­யேற்றம், ஹலால் விவ­காரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவ­காரம் போன்­ற­வற்றில் உலமா சபை முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் குறித்தும் இம் மலரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
உலமா சபையின் சேவைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் நிகழ்வில் தெளிவுபடுத்தினார். உலமா சபை தனது பணியினை மேலும் விரிவுபடுத்தி பயணிப்பதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பினையும் கோரினார்.

உலமா சபை மீது பல்­வேறு விமர்­ச­னக் கணை­கள் தொடுக்­கப்­ப­டு­கின்ற போதிலும் இந்த நூற்­றாண்டு விழா அதன் வர­லாற்றில் மிக முக்­கிய மைல் கல்­லாகும். விமர்­ச­­னங்­களை உள்­வாங்கி மேலும் பல நூற்­றாண்­டுகள் உலமா சபை பய­­ணிக்க வேண்டும் என வாழ்த்­துவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.