வெறுமனே ஆதரவு வழங்குவது நல்லதல்ல

0 1,241

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தயார்­ப­டுத்­தல்­களில் கட்­சிகள் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளன. பொது ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­பக்ச பெய­ரி­டப்­பட்­டுள்­ள­துடன் சிவில் அமைப்­பு­க­ளுடன் இணைந்து மக்கள் விடு­தலை முன்­னணி உரு­வாக்­கி­யுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’ எனும் புதய கூட்­ட­ணியின் வேட்­பா­ளராக அநு­ர­ கு­மார திசா­நா­யக்க பெய­ரி­டப்­பட்­டுள்ளார். எனினும் நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமது வேட்­பா­ளர்கள் குறித்து இது­வரை தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராக அக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை பெய­ரிட வேண்டும் எனும் அழுத்தம் கட்­சிக்கு உள்­ளேயும் வெளியேயும் பல­மாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க இசைந்து கொடுப்­ப­தாக தெரி­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மாக அக் கட்­சிக்குள் பெரும் பனிப்போர் நில­வு­கி­றது. ரணிலா? சஜித்தா? கருவா? என்ற கேள்­விக்கு விடை கிடைக்­கும்­போது அக் கட்­சிக்குள் பாரிய பிள­வொன்று ஏற்­படக் கூடும் என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் எதிர்வு கூற­லா­க­வுள்­ளது.

மறு­புறம் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சி­யினர் பொது ஜன பெர­முன வேட்­பா­ளரை ஆதி­ரிப்­பார்­களா இன்றேல் தமது கட்சி சார்பில் வேட்­பா­ளரை நிறுத்­து­வார்­களா என்ற கேள்­விக்கு விடை காணப்­ப­ட­வில்லை. அக் கட்­சியால் தனித்து வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்தி வெற்றி பெற முடி­யாது என்ற வகையில் அவர்கள் ஏதேனும் ஒரு கூட்­டணி ஒன்­றுக்குச் செல்­வார்கள் என்­பதே எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது.

இதற்­கி­டையில் ஒக்­டோபர் 26 இல் இடம்­பெற்ற அர­சியல் மாற்றம் போன்று, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ன­ராக ஜனா­தி­பதி ஐ.தே.கட்­சியின் உட்­பி­ளவைப் பயன்­ப­டுத்தி அர­சியல் மாற்றம் ஒன்றைக் கொண்­டு­வ­ரலாம் என்ற அவ­தா­னங்­களும் உள்­ளன. எனினும் ஏற்­க­னவே அந்த முயற்­சியில் சூடு­பட்ட ஜனா­தி­பதி அவ்­வா­றா­ன­தொரு விஷப் பரீட்­சைக்கு மீண்டும் செல்­வாரா என்­பதும் கேள்­விக்­கு­ரி­யதே.

இத் தேர்­த­லிலும் வழ­மை­போன்று சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக விளங்கும் என்ற வகையில் தமிழ் கட்­சி­க­ளிதும் முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் நிலைப்­பா­டுகள் தற்­போது அர­சியல் அரங்கில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. த.தே.கூட்­ட­மைப்பு ஐ.தே. முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரையே ஆத­ரிக்கும் என்ற போதிலும் தமக்கு விருப்­ப­மான வேட்­பா­ளரைப் பெய­ரிட வேண்டும் எனும் அழுத்­தத்தை தொடர்ச்­சி­யாக வழங்கி வரு­கின்­றது. இதுவே ஐ.தே.கட்­சிக்குள் நெருக்­கு­வா­ரங்கள் ஏற்­படக் கார­ண­மாகும்.

மறு­புறம் மற்­றொரு தீர்­மா­னிக்கும் சக்­தி­யான முஸ்லிம் கட்­சிகள் இது­வரை தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வில்லை. குறிப்­பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சகல வேட்­பா­ளர்­களும் பெய­ரி­டப்­பட்ட பின்­னரே தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தலாம் எனக் கூறி வரு­கின்­றன. இதற்­கி­டையே தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கப் போவ­தாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் அறி­வித்­துள்ளார். இந்த அறி­விப்பும் சமூகப் பரப்பில் வாதங்­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது.

இருந்­த­போ­தி­லும முஸ்லிம் சமூ­கத்தின் வாக்குப் பலத்தைப் பயன்­ப­டுத்தி இந்த ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­க­ளையும் காண முடி­ய­வில்லை. வழ­மை­போன்று முஸ்லிம் கட்­சிகள் சமூ­கத்தின் நல­னை­யன்றி கட்­சி­களின் நலன்­க­ளையும் எதிர்­கால பொதுத்­தேர்தல் வெற்­றி­களையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டே தீர்­மா­னங்­க­ளுக்கு வர முயற்­சிக்­கின்­றன. இது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

ஏப்ரல் 21 இன் முன்­னரும் பின்­னரும் சமூகம் எதிர்­நோக்­கிய, எதிர்­நோக்கி வரு­கின்ற பல்­வேறு தேசிய மற்றும் பிராந்­திய மட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டி­யுள்­ளது. இவற்றைத் தீர்க்கக் கூடிய வேட்­பா­ள­ரையே சமூகம் ஆதரிக்க வேண்டியுமுள்ளது. அவ்வாறாயின் சமூகம் சார்பில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டு அவர்களது இணக்கப்பாடு எழுத்து மூலம் பெறப்பட வேண்டும். அதன் பின்னரே அவர்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும். மாறாக ஒட்டுமொத்த சமூகத்தையும் உணர்ச்சி அரசியல் அலையின் பின்னால் இழுத்துச் செல்ல முஸ்லிம் தலைமைகள் முற்படக் கூடாது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.