காணி­களை மீட்டுத் தர முன்­வர வேண்டும்

0 811

இலங்­கையில் இரா­ணு­வத்­தினர் வசம் இருந்த காணி­களில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்­திருந்தது. படை­யி­ன­ரி­ட­மி­ருந்த 84,675 ஏக்கர் காணி­க­ளி­லேயே மேற்­படி தொகை காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளதாகவும் விடு­விக்­கப்­பட்ட காணி­களுள் 81 சத­வீ­த­மா­னவை அர­சுக்குச் சொந்­த­மா­னவை என்றும், 90 சத­வீ­த­மான தனி­யா­ருக்­கு­ரி­யவை எனவும் தெரி­விக்­கப்­ப­ட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியே இந்தத் தக­வல்களை வெளி­யி­ட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாது­காப்பு தரப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்­தன. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர், படை­யி­ன­ரி­ட­மி­ருந்த காணிகள் துரி­த­மாக விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில், பாது­காப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்­கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­லணி அமைக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை 6,951 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் மேலும் 475 ஏக்கர் விரைவில் விடு­விக்­கப்­பட உள்­ள­தா­கவும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யிருந்தது. அந்த வகையில் தற்­போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணி­களே உள்­ள­தா­கவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அர­சாங்கம் தெரி­வித்­திருந்தது.

அந்­த­வ­கையில் படை­யினர் வச­மி­ருக்கும் இக் காணி­களை விடு­விக்கும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­க­தாகும். குறிப்­பாக காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லணி விசேட கவனம் செலுத்­து­கின்­றமை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

அர­சாங்கம் இவ்­வாறு காணி­களை விடு­விப்­ப­தற்­கான காரணம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்­கிய அழுத்­தங்­க­ளே­யாகும். தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்கும் அர­சாங்­கத்தின் போக்­குகள் ஒரு­பு­ற­மி­ருக்க, காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்­பதில் த.தே. கூட்­ட­மைப்பு குறிப்­பி­டத்­தக்­க­ளவு வெற்றி பெற்­றுள்­ளது என்ற யதார்த்­தத்தை எவரும் மறுக்க முடி­யாது.

எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக இரா­ணு­வத்­தி­னாலும் அர­சாங்­கத்தின் ஏனைய திணைக்­க­ளங்­க­ளி­னாலும் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­பதில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் மக்­களும் தோல்­வியைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் என்ற யதார்த்­தத்­தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி அனு­மதிப் பத்­திரம் இருக்­கின்ற சுமார் 4652 காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளது 14127 ஏக்கர் பரப்­புள்ள காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­லணி சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தமது காணிகளை மீட்டுத் தர முன்வரும் வேட்பாளருக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்போம் என காணிகளை இழந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான போராட்டங்களையும் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இதே­போன்­றுதான் திரு­கோ­ண­ம­லையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி உட்­பட ஏரா­ள­மான காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இன்றும் புல்­மோட்டை உட்­பட பல இடங்­களில் காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. வடக்கில் முச­லியில் இரா­ணு­வத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீட்­ப­தற்­காக அம் மக்கள் பல வரு­டங்­க­ளாக போராடி வரு­கி­றார்கள்.

இவை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலைமைகள் கையறு நிலையிலேயே உள்ளன. தேர்தல் காலங்களில் மாத்திரம் காணிகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகின்ற நிலையே நீடிக்கிறது.

அந்தவகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேற்படி ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை சகல கட்சிகளிதும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமிருந்து இக் காணிகளை விடுவிப்பதற்கான வாக்குறுதிகளை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் தேர்தலின் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.